Lakshmimurugan
Well-Known Member
திருவே நான் ஏன் இப்படியெல்லாம் செய்கிறேன் என்று நினைத்து பார்த்தால் துளசியை படுத்தி எடுக்க மாட்டார்
மலலிக்குதான் பொறகாசு .functionகுHi mam
திருவை வாய் திறக்காமல் செய்வோருக்கு ஆயிரம் பொற்காசு சன்மானமாக வழங்கப்படும்,என்னால தாங்க முடியல திருவின் அட்டகாசம் , துளசி பாவம்,முன்பெல்லாம் பேசாமல் கொன்றார் இப்போதெல்லாம் பேசிப்பேசியே கொல்கின்றார்,துளசியிடம் கோபம் காட்டத்தெரிகின்றது நக்கல் நையாண்டி செய்யத்தெரிகின்றது ஆனால் அப்படியே பாசமாய் பேச மட்டும் தெரியுதில்லையாம்,இந்த உலகத்தில் மாங்காமடையன் யாரென்றால் நான் திருவைதான் காண்பிப்பேன்,13 வருடங்களாய் பழகிய பழக்கத்தை உடனே மாற்று என்றால் எப்படி மாற முடியும் துளசியால்,துளசி தானாக தேடிவரும்படி நடக்கவேண்டும் அல்லது அதற்கு நேரம் கொடுத்து பார்க்க வேண்டும்,இது எதுவும் இல்லாமல் எடுத்ததிற்கெல்லாம் எரிந்து விழுந்தால் என்ன செய்ய முடியும்,துளசியிடம் என்ன எதிர்பார்கின்றீங்களோ அதை முதலில் நீங்கள் செய்யுங்கள் அதற்கு பிறகு அம்மணி தானா வருவார்கள் ,எல்லா அப்பாக்களுமே தங்கள் பெண்ணை அவ்வளவு அழகாக புரிந்து வைத்திருப்பார்கள் ஆனால் பெண்டாட்டியை ம்ம்ம்ம்ம்?,அதற்கு திருவும் விதிவிலக்கல்ல.
நன்றி
ஆமாம்மாமல்லி இது உணர்வுகளின் போராட்டம்
ரொம்ப அழகா ஆழமா கணவன் மனைவி இருவரின் உணர்வுகளை படம் பிடித்தது போல் காட்டி இருக்கீங்க
எனக்கு ரெண்டு பேரையும் குறை சொல்ல முடியலை .... அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி ....
கணவன் தன் மனைவியை பிறர் மதிக்கணும் என்பதற்க்காக அவ சுயமா இருப்பதற்கு அவளுக்காக பார்த்து பார்த்து செய்யுறான் .....
ஆனா அவளோ அவன் ஏற்படுத்தி வைத்த கூட்டை விட்டு வெளியே வரலை .... அதில் அவள் ஊறி விட்டாள்... அவன் வெளியே வா என்றாலும் அவளால் வர முடியவில்லை ....
அவன் திடீர் கரிசனத்தை அவன் கூறினாலும் அவளால் புரிந்துகொள்ள முடிய வில்லை
இவ்வ்ளோ சொல்லியும் புரியவில்லையே எனும் ஆதங்கத்தில் .... அவன் வார்த்தைகளில் எள்ளல் நக்கல் .....
எப்போ துளசி தன் மன தடைகளை களைந்து வருவா ...... திரு மாதிரி நாங்களும் ஆவலுடன் காத்து இருக்கிறோம்