Raasitha'S Ninmel kaadhalagi Nindren P11

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
கனல் விழியன் நெஞ்சில் கதிரவனின் மீதான காதல் பிறந்து தவழ்ந்து அசைக்க முடியாத ராஜ்ஜியம் போல அவளின் மனதில் வாழ்ந்துகொண்டிருந்தது.

ஆனால் இதைப் பற்றி எதுவுமே தெரியாமல், தொழிலில் மட்டுமே முழுக் கவனத்தையும் கதிரவன் வைத்திருந்தான். அந்தப் பஞ்சாயத்திற்குப் பிறகு அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தன் வீட்டிற்குச் சென்றே பார்வதியை பார்த்து வர தொடங்கியிருந்தான்.

கூட்டத்தில் அவன் மறைமுகமாகத் தாக்கியத்திலிருந்து சற்றே மச்சக்காளை அடக்கி வாசிக்க, பாரிஜாதத்திடமும், "பாரிஜாத, அவசரப்படவேனா. கொஞ்சம் பார்த்துச் சூதானமா பண்ணனும். இல்லனா இலவ காத்த கிளியாகிடுவோ. அவசரப்பட்டு அவன்ட வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிடாத" எனக் கூறி வைத்திருக்க, கண்டு காணாமல் பாரிஜாதம் போக முயன்றாலும் அவர் வாய் சும்மா இருப்பதில்லை.

கதிரவனிடம் அவரின் வேலையைக் காட்டத்தான் சற்றே தயக்கம். ஆனால் அவன் சென்ற பிறகு தன்னுடைய வேலையைத் தங்கு தடை இல்லாமல் லிங்கத்திடமும் பார்வதியிடமும் செய்திடுவார்.

-------------------------------------------------------------------------------------------------------------------

மடித்துக் கட்டப்பட்டிருக்கும் அவள் இரட்டை ஜடை ஒற்றைப் பின்னலுக்கு மாறியிருந்தது. பின்னலும் தளர்வாக இடப்பட்டு இடையைத் தாண்டி நீண்டிருந்தது. ஜாதி பிச்சி தோளின் இருபுறமும் சரிந்து பின்னலோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தது. கலையான சின்ன முகம், அதில் சிறிய வட்ட பொட்டு சாதாரண அலங்காரத்திலும் கூட அதிரூப சுந்தரியாகச் சாந்தினி தெரிந்தாள்.

"அத்தை..." என்ற அழைப்பு வந்த நொடிமுதல் அவளை ஆராயத் தொடங்கியிருந்தவன் தான் மாறன். அவள் முகத்தை விட்டு அவன் கண்களைப் பிரிக்க முடியாமல் தடுமாறினான்.

"வாமா சாந்தினி. நல்லா இருக்கியா ? எப்ப வந்த ? தனியாவா ?" எனக் கேள்விகளை அடுக்க, கதிரவனைக் கேள்வியாய் பார்த்த சாந்தினியோ, "இல்ல அத்த, அப்பா பின்னாடி வராங்க. நம்ம வாசலுக்குக் கொஞ்சமுன்னாடி யாரோ வந்து அப்பாட்ட பேசிட்டு இருக்காங்க. அத்த இது கதிர் மாமா தானே ?'' எனப் பதில் கூறியபடியே கண்களை அகலவிரித்துக் கதிரவனைப் பார்த்து கேட்க, அதற்குக் கதிரவனின் குரல் வெளிவருவதற்கு முன்னால் மாறனின் குரல் வெளிவந்திருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------------

அவருடைய கைகளை ஆதரவாகப் பற்றியபடி, "அம்மா! எப்பவும் ஒருத்தன் ஏமாளியாவே இருக்க முடியாது. எப்பவுமே ஒருத்தங்க ஏமாத்தியே பொழைக்கவும் முடியாது. உண்மைங்கிறது மண்ணுக்குள்ளே கிடக்குற வையிரமாதிரி. ரொம்பகாலத்துக்கு நிலக்கரிகூட ஒண்ணுமண்ணா இருக்கலாம். ஆனா அது வெளிலவர நாள், அதுதான் ரொம்ப உசந்து நிக்கும். நீ விசனப்படாதமா. எல்லாமே மாரும். சரி பண்ணை தொறக்க போறே. உம்மவனுக்கு என்ன தர போற ?" எனத் தாயின் சிந்தனையை மாற்றும்பொருட்டு வேறு பேச்சிற்குத் தாவினான் கதிரவன்.

ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், அதே நேரம் அவன் வேண்டாம் என்று ஒதுக்கியதை மறுபடியும் நாடியோ தேடியோ போகாமல், அவன் வழியில் ஒதுங்கி சென்றிடுவான். ஆனால் அவனை ஒதுக்க முற்பட்டால் அவனை இதற்குமுன் கண்டிராத வகையில் களத்தில் இறங்கி ஆடும் வழக்கமுள்ளவன்.
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
அது யார்ரா புது என்ட்ரி.. கனலுக்கு வில்லியோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top