Raasitha's Ninmel Kaadhalaagi Nindren P7

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
"ஹ்ம்ம் சொல்லிட்டா போச்சு... நான் அவரை இன்னும் பக்கத்துல இருந்து காதலிக்கப் போறே" என மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறினாள்.

"ஏ புள்ள, கொஞ்சம் முன்னாடி கூடக் காதல் இல்லனு சொன்ன. இப்ப எப்படி மாறின?"

"ஆமா! நான் தா சொன்னேன். இல்லனு சொல்லலியே. நான் காதல் இல்லனு சொன்னது அப்போ. இது இப்போ..."

"என்னடி வடிவேல் டயலாக்லாம் விடுற? ஒரு நிமிஷத்துல எப்படி டி முடியும் ?

----------------------------------------------------------------------------------------------------------------------


"ஏன்டா வேறவொரு பொண்ணா இருந்தா இவன் இருக்கத் திசை பக்கமே தலைவச்சிருக்காது...இந்த பொண்ணு என்னடா மறுபடியும் வருது? " எனச் சக்கரை அக்கரையாகக் கூற, அதற்குப் பாண்டி பதில் கூறுவதற்கு முன்னதாக அவர்கள் முன்பாகவே பொய் நின்றாள் நம் நாயகி.

"சரிதா அண்ணன்மார்களா.... எல்லாப் பிள்ளைகளும் தலைவச்சுப் படுக்கக் கூட யோசிக்குங்க. நானும் அப்படித்தா... இப்ப வந்தது வளையல் வாங்க" எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட பாண்டி, "அப்படியா நல்லவேளை பாசமலரே... இல்லனா உம்மேல வர கோபத்தை எங்ககிட்ட காட்டு காட்டுனு காட்டிடுவா. தப்புச்சுட்டோம்டா மாப்ள" என கூறினான்.
சட்டென்று அவளுடைய அண்ணன் என்ற அழைப்பில் அவளை அவசரமாகத் தங்கையாகத் தத்தெடுத்துக்கொண்டனர்..

"எதுக்கு இம்புட்டு அவசரமா முடிவுக்கு வரீங்க? நான் இன்னும் முடிக்கல. தலைவச்சுதா படுக்கமாட்டேனு சொன்னே. ஆனா ஒரு கால் வைக்கலாம்னு இருக்கே" எனக் கூற,

"என்ன பாசமலரே சொல்லுற? காலா? புரியலையே" எனச் சக்கரை வினவ,

"ஆமா! கால். வலது கால் வச்சு அவரோட அம்மாக்கு மருமகளாகலாம்னு முடிவுபன்னிருக்கே"

"ஆத்தாடி! இது முடிவா? இல்ல எங்க சோலிய முடிக்கச் சதியா ?" என வாய்விட்டு அலறினான் பாண்டி.

---------------------------------------------------------------------------------------------------------

"அவனுக்குப் பொண்ணுங்கள பிடிக்காது பாசமலரே! பொண்ண பிடிச்சாத்தான கல்யாணம்" எனப் பாண்டி சொல்ல,

"ஏன்? ஏதாச்சு காதல் தோல்வியா ?" எனப் பரிதவிப்புடன் கேட்டாள். பாண்டியின் பதில் வருவதற்குள் ஏனோ படபடப்பாக உணர்ந்தாள்.

"உம்..க்கும்... உங்கக்கா எங்கக்கா அவரக்கா... அவனுக்குக் காதலூனா பாவக்கா. இவனுக்குக் காதல்னு ஒன்னு வந்தாத்தானே அது தோல்வி அடைய. இவனுக்குப் பொண்ணுங்கனா பிடிக்காது" என்று கூறியவன் பாண்டியே
 

Devi29

Well-Known Member
Kaadal endral pavakaiya . Kanal athai inikkum sankaraiya matha poriya nice precap sis
 

தரணி

Well-Known Member
பாண்டி உன்னோட கவிதை அருமை.... அதை விட வலது கால் வைச்சி வர போறீயா மா கனல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top