Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen P4

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
"விழி… நீ எதுக்கு பாப்பா அழுகுற. உன்ட வம்பு வளத்தவன கதறவிடல எம் பேரு முருகேச இல்ல. கண்ண தொட மொதல்ல" என அவளுடைய தலையை வருடிக்கொடுக்க, முருகசனின் மீதிருந்த பாசம் அந்த நொடி மரியாதையுடன் கலந்து பன்மடங்கு ஆகிற்று விழியின் மனதில்.

கையோடு கந்தசாமிக்கு அழைத்துத் தகவல் கூற, உடன் தேவியும் புறப்பட்டார். தந்தைக்காகக் காத்திருந்த விழியின் செவியில் வாசலில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்க, ஊருக்குள் தகவல் சொல்பவன் வந்திருப்பதாகக் கொடி கூறினாள். காதை பட்டை தீட்டி கூர்மையாக உற்று கேட்க, செய்தி இதுதான்.

"முருகேசண்ணே, ராவுக்கு (இரவு) பஞ்சாயத்தைக் கூட்டிருக்காங்க. எல்லாரு வீட்லயு சொல்லிட்டு வர சொன்னாங்க. வரப்ப உங்க பொண்ணையும் புதுசா வந்துருக்க உங்க உறவு பிள்ளையையும் வர சொன்னாங்க" எனக் கூற, விஷயம் கை மீறிவிட்டிருந்ததை முருகேசன் உணர்ந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------

"பாண்டியை நம்பினோர் கைவிடப்படார்" என ஆசீர்வதிப்பதை போலக் கைகளை உயர்த்தி அவன் கூற,

"அதுக்கு நாங்க உன்ன நம்பணும்ல..." எனச் சக்கரை நக்கலடிக்க

"நக்கலா அடிக்கிற? இரு டி உன்ன கதறவிடுறே" என மனதிற்குள் கருவியவன், "கதிரூ அந்த மூதேவன்களும் ரேடியோவும் என்னோட பொறுப்பு. அந்தக் கூட்டத்த நீ சமாளிச்சுக்க" என உறுதியாகக் கூற, சக்கரை தன்னுடைய அதிமுக்கிய கேள்வியை முன்வைத்தான்.

"அதென்னெடா மூதேவன்?"

"இது தெரியாது? அதுக்குதாண்டா இந்தப் பாண்டி வேணுன்னு சொல்றது. மூதேவிக்கு ஆப்போசிட் தா மூதேவன்" எனக் காலரை தூக்கிவிட்டபடி கெத்தாகக் கூற, சக்கரை அவனை வழக்கம் போல அடிக்கத் துரத்தி சென்றான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top