Raasitha s Ninmel Kaadhalaagi Nindren P12

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
இன்னைக்கு உங்களுக்கு டபுள் டமாக்கா கொடுக்கலாம்னு...இன்னைக்கே அடுத்த ப்ரீ கேப் கொடுக்குறே நண்பர்களே....

அதுனால் அடுத்தப் பதிவு இன்னும் இரண்டு தினங்களுக்குப் பிறகே....


Happy Reading!!!

----------------------------------------------------------------------------------------------------------------------



"பாண்டி... இவன் சொல்லறது நிஜமா?" எனக் கேட்க, தலையும் புரியாமல் வாலும் புரியாமல், "என்னடா மாப்பு ?" எனத் திருதிருவென்று முழித்தான்.

சக்கரைகூட எதற்காகக் கதிரவனின் முகம் இத்தனை தீவிரமாக இருக்கிறது என்று கூட ஒரு நொடி யோசித்தான்.

"டேய் என்னனு சொல்லிட்டு முறைடா?" என மீண்டும் முறைத்துக்கொண்டிருந்த கதிரவனிடம் கேட்க, "நீ இங்க எதுக்கு வந்த? அந்த எஸ்போர்ட் ஆள பார்க்கவா? இல்ல முட்ட மாஸு சாப்பிடவா ?" எனத் தீவிரம் குறையாமல் வினவ, சக்கரையைப் பார்த்து முழியை உருட்டி, "ஏண்டா இது உன்னோட வேலைதானா ?" எனக் கேட்க, அவனோ உதடை பிதுக்கி, "டேய் நான் ஜாலிக்கு சொன்னேன்டா...இவன் என்னடானா சோலியை முடிகிற அளவுக்கு டெர்ரர் ஆகிட்டான்" என அவனும் புரியாமல் அப்பாவியாக கூறினான்.

"நல்லா பேசுறடா ரைமிங்கா...ஆனா என்னோட டைமிங்கிதான் சரி இல்ல" எனப் பதிலுக்கு இவன் பேச என அவர்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருக்க, கடுப்பான கதிரவன், "டேய்... உன்டதான கேக்குறே. தொழில் முக்கியமா ? மூட்டமாஸ்ஸா?" எனத் திடிரென்று குரல் உயர்த்திக் கேட்க , சட்டென்று அவனின் கேள்விக்குத் திடுக்கிட்டு உண்மையைச் சொல்லிவிட்டிருந்தான்.

"முட்ட மாஸ்ஸுதான் மாப்பிள்ளை" எனக் கூறிய அடுத்த நொடி சுதாரித்து நாக்கை கடித்தபடி, "முட்ட மாஸ் அப்படினு சொல்லுவேன்னு நினைச்சியா? இல்ல இல்ல அப்படிச் சொல்லமாட்டேன்" எனச் சமாளிக்க முயல,கதிரவனோ, "உன்னோட சமாளிபிகேஷன் போதும். நிறுத்துறியா ?" எனக் கதிரவன் கூற, "மாப்பு....." என இவன் இழுக்க, "இதோ பாரு நீ யாருனு எனக்குத் தெரியும். நான் யாருனு உனக்குத் தெரியும்....நாம இரெண்டு பேரும் யாருனு இந்த ஊருக்கே தெரியும்" எனக் கதிரவன் சினிமா பணியில் கூற, பாண்டியோ தன்னுடைய மனதில், "என்ன இவன் ? நம்மள மாதிரி பேசுறான்? இப்ப கோவமா இருக்கானா ? இல்ல நான் கோமாளியா இருக்கேனா ?" எனக் கேட்டுக்கொண்டவன், வெளியே கண்ணை உருட்டி முழிக்க மட்டும் செய்ய, கதிரவன் அவனை விடுத்து, "சக்கர, பேர மாத்திடலாம்டா"எனக் கூற, இப்போதோ சக்கரை பாண்டி என இருவருக்கும் சுத்தமாகக் கதிரவனின் போக்கு பிடிபடவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------

"அடே என்ன 'வச்சு' நல்லா செயிரீங்கடா.... விட்டா நாளைக்கு நடக்கபோறது பண்ணை திறப்புவிழாவா இல்ல எனக்குப் பேர் சூட்டு விழாவனே சந்தேக வந்திடும். 'நல்லா.....' வருவடா" என அழுத்தி கூறினாலும் அவனும் புன்னகையுடன் கூற, "அப்போ "முட்ட மாஸ் பாண்டி ஓகே தான ?" எனக் கதிரவன் விடாமல் கேட்க, "அடே மொத அந்த முட்டை மாஸா கண்லயாவது காட்டுங்கடா....வாயிலையே வட சுடாம" எனக் கூற "டேய் நீ எப்படிச் சொன்னாலும் அதுலையேதான் நிப்பியா ?'' எனச் சக்கரை கேட்க, "சோறு ரொம்ப முக்கியம் மாப்பு" எனத் தத்துவம் பேசினான்.


-----------------------------------------------------------------------------------------------------------------------

கதிரவனுக்கும் கனல்விழிக்கும் கணிசமான இடைவெளி மட்டும் சில பாதையோர கடைகள் இருந்ததால், அந்த மூவருடனும் சேர்த்து கனல்விழியை அந்தப் பெண்மணி எண்ணவில்லை.

"கனல்விழி... என்ன இதெல்லாம்? பொய் சொல்லிட்டு ஊர் சுத்துறியா ? உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருக்கும் ?

ஹாஸ்டல்ல காச்சல் முடியல ஆஸ்பத்திரி போறேன்னு சொல்லிட்டு இங்க வந்து ஊர் சுத்திட்டு இருக்க?

இப்பெல்லாம் பசங்கள கூட நம்பிடலாம் போல. இந்தப் பொம்பள பிள்ளைங்களைத்தான் நம்பவே முடியல. சரியான நாடகக்காரியா இருப்ப போல." என ஒருபெண்மணி சகட்டுமேனிக்கு பேச, உடன் வந்திருந்த மற்றொரு பெண்மணியோ, "இங்க வேணாம் மேடம். நம்ம காலேஜ்க்குதான் கெட்ட பேரு. அங்க பிரின்சிபால் ரூம்ல என்குயரி வைக்கலாம். இப்ப வாங்க. இந்த மாதிரி பொண்ணுங்களாம் இப்பவே இவ்ளோ பண்ணுதுங்க. இன்னும் போகப் போக என்னென்ன பண்ணுங்களோ.

நம்ம காலத்துல வாசலதாண்டவே அம்புட்டு யோசுச்சோம். இதுங்க சுவர் ஏறி குதிக்கக் கூடத் தயங்காதுங்க போலவே" என அவரும் அவர் பங்கிற்குப் பேச, கதிரவன் கண்களுக்குக் கனல் விழி பொய்யின் மொத்த உருவமாகவே தெரிந்தாள்.
 

RajiChele

Well-Known Member
Super sis :love::love: Achao sis vizhi ya ipdi total damage akitale kathir oda parvaila... :(:( ithu epo marum???:unsure::unsure: Pavam sis vizhi:(:(
 

Saroja

Well-Known Member
கதிரவன் விழிய பார்க்க போது எல்லாம் மாட்டிக்கிறா
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ, சோமாஸ்
பாண்டி-ங்கிறது எம்புட்டு
அருமையான பேரு?
சோமாஸ் பாண்டியைப்
போய் இப்படி அநியாயமாக
முட்ட மாஸ்ஸு பாண்டி-ன்னு மாத்திப்புட்டாய்ங்களே,
ராசிதா டியர்

இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், அக்கிரமம்,
அராஜகம்
இதை நானு வன்மையாக
கண்டிக்கிறேன், யூவரு ஆனரு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எவ அவ கனல்விழியை வாய்க்கு
வந்தபடி பேசுறது?
காய்ச்சல்ன்னா டாக்டரைப்
பார்க்கணும்
கடைவீதியில்தானே டாக்டர்
இருப்பாங்க

அந்த மகேஷ் பேசிய அரைகுறை
பேச்சைக் கேட்டு ஏற்கனவே
கதிரவன் இவள் மேல கடுப்பாய்
இருக்கிறான்
இப்போ இந்த வாத்திச்சிமார்களும்
விழியின் வாழ்வில் வெடி வைச்சு
கும்மி அடிச்சுட்டாங்களே,
ராசிதா டியர்?
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
ஏற்கனவே விழிய பத்தி சார் ரொம்ப உயர்வா நினச்சிட்டு இருக்காறூ... இதுல இப்ப இப்படியா....
 

banumathi jayaraman

Well-Known Member
@Raasitha டியர்
இதெல்லாம் நொம்பவும்
அநியாயம்ப்பா
இம்புட்டு அருமையான Precap
கொடுத்துட்டு இரண்டு நாள்
கழிச்சுத்தான் நான் அப்டேட்
தருவேன்-னு உருண்டு
பெறண்டு நீங்க அடம்
பிடிக்கலாமா, ராசிதா டியர்?

இந்த அழகான அப்டேட்டை
நாளைக்கே நீங்க
கொடுக்கப்படாதாப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top