Naan Ini Nee - Precap 7

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“அட இதெல்லாம் எப்போ.. நானும் ஒருத்தன் இருக்கேன்..”

“ஆமாமா இருக்க இருக்க.. நீயும்தான் பார்த்த..” என, “நானா??!!!” என்றான் யோசனையாய்.

“ம்ம் அதான்டா AR க்ரூப்ஸ் இருக்குல அவங்க பொண்ணு..” என, “என்னது??!!!!” என்று கத்தியேவிட்டான் தீபன் சக்ரவர்த்தி..

“என்னடா??!!!”

“இல்.. இல்லம்மா நீ சொன்னது சரியா கேட்கலை..” என்றவனுள் அப்படி இருக்கவே கூடாது என்ற எண்ணம்.

“அட கோவால பார்த்தோமே, லோகேஸ்வரன் தாரா அவங்களோட பொண்ணு அனுராகா.. நல்ல பொண்ணுல்ல.. எனக்கு ரொம்ப பிடிச்சது..” என்று உஷா சொல்லிக்கொண்டு இருக்க, தீபன் சக்ரவர்த்திக்கு கண்கள் தெறிப்பது போல் விரிந்தது.
‘அவளா??!!! அண்ணனுக்கா... நோ...’


‘நோ நோ நோ....’

‘யாரோ ஒருத்தனை பார்க்க என்னோட கிளம்பி வந்து, என்னோடவே சேலஞ் பண்ண ஒருத்தி எனக்கு அண்ணியா.. நோ வே..’

---------------------------------------------------

‘ராகா நீ இங்கதான் இருக்கப் போற.. எப்போவரைன்னு எனக்கே தெரியாது...’ என்று அவனின் உதடுகள் உச்சரிக்க, அடுத்து தர்மாவிற்கு அழைத்தவன் “நான் சொல்ற ஆள் பத்தி புல் டீடெய்ல்ஸ் வேணும்.. அவன் இப்போ எங்க இருக்கான்.. என்ன செய்றான் வரைக்கும்..” என்றவன் பிரஷாந்த் பெயரை சொல்ல,

“ஓகே.. நாளைக்கு காலைல சொல்றேன்..” என்று தர்மா வைத்துவிட, அடுத்து சக்ரவர்த்தியின் பிஏவிற்கு அழைத்தான்.

“அப்பாவோட அப்பாயின்மென்ட்ஸ் என்ன??” என்றவன், அது தெரியவும்,

“ம்ம் எது எப்படி இருந்தாலும் அப்பாவோ அம்மாவோ AR க்ரூப்ஸ் MDயோட பேசவே கூடாது. மீட் அரேஞ் பண்ண சொன்னா பாசிபிலிட்டீஸ் இல்லைன்னு சொல்லிடுங்க.. எதுவா இருந்தாலும் எலக்சன் முடியட்டும்.. ஓகே..” என,

--------------------------------------------


‘செம தில்லு தான் இவளுக்கு..’ என்று எண்ணினான்.

“சோ.... ஹவ் இஸ் திஸ் பிளேஸ்...” என்று தீபன் கேட்க, அவளோ அவனைப் பார்த்தவள்

“வெரி பேட்னு சொன்னா என்ன செய்வ நீ??” என்றாள் திமிராகவே.

“ஹா ஹா.. சொல்லேன்.. சொல்லித்தான் பாரேன்..” என்றபடி அவளை ஒருமுறை சுற்றி வந்தவன் “நீ இங்க இருக்கிற நாள் கூடிட்டே போகும்...” என்று அவளின் தொனியிலேயே அவனும் சொல்ல, “நான் இங்கிருந்து போயிடுவேன்..” என்றாள் உறுதியாக..

“ம்ம் முடிஞ்சா போயிக்கோ.. அதானே கேம்.. பட் ஒன் திங்.. அப்படி நீ போகலை.. போக முடியலை அப்படின்னா..” என்றவன் பேச்சை பாதியிலேயே நிறுத்த,

“என்னால முடியும்...” என்று அனுராகாவும் சொல்ல,

“ம்ம் ம்ம்.. உன்னப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு ராகா...” என்றவனின் குரலில் என்ன இருந்ததோ, ஆனால் அவனின் அழைப்பு அவளுக்கு பெரும் ஆச்சர்யம் கொடுத்தது.

-------------------------------------------------------

“அது.. நான்.. ஆன்ட்டி.. அ.. அனு குளிச்சிட்டு இருக்கா.. வரவும் பேச சொல்லவா??” என,

“ம்ம் ஓகே..” என்ற தாராவிற்கு மனது என்னவோ சரியில்லை என்று சொன்னது.

நீரஜாவின் குரலில் இருந்த பதற்றம், அவளின் பேச்சில் இருந்த தடுமாற்றம், எல்லாம் தாராவிற்கு நல்லதாய் படவில்லை. லோகேஸ்வரனிடம் சொன்னால் “நீ ஏன் இப்படி கால் பண்ணி அவங்களை டிஸ்டர்ப் பண்ற??” என்றுதான் கேட்பார்.

சாதாரண நாட்கள் என்றால் பரவாயில்லை.. இப்போதோ அனு எப்போது எப்போது என்று சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தாள் அல்லவா..

‘ஒருவேள அந்த பிரஷாந்த் பார்க்க கிளம்பிட்டாளோ..’ என்று தோன்ற, அவருக்கு சட்டென்று மனதினில் தீபன் நியாபகம் தான் வந்தது.

மனதினில் யோசனை ஓட, உஷாவின் எண்ணை வேகமாய் அழுத்தினார் தாரா.
 

Joher

Well-Known Member
Tks சரயு......

எம்மா...... என்னம்மா இப்படி பண்ணுறீங்க......
நீங்க jet speed போனால் பையன் shuttle speed போறானே.......
Farm house arrest பண்ணியாச்சு......
பிரஷாந்த் detailக்கு சொல்லியாச்சு.....
அம்மா அப்பா AR Group meet பண்ண தடை போட்டாச்சு......

Election code of conductல பொண்ணு பேசக்கூடாதா என்ன?????
Election முடியும் மட்டும் வேண்டாமாம்.......

டேய் நீ தம்பி இல்லைடா......
உன் அப்பாவுக்கு அப்பன்......
கேடி.....

உன்கையில் ராகா ராகம் பாட போறா......
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
டேய் தீபன்...... எந்த யுகத்துலடா இருக்க, நீ:unsure:....... மீட்டிங் அரேன்ஜ் பண்ணக்கூடாதாம்......

போன்ல பேசப் போறாங்களே......
என்ன பண்ணுவ.....
நீ என்ன பண்ணுவ...??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Joher

Well-Known Member
டேய் தீபன்...... எந்த யுகத்துலடா இருக்க, நீ:unsure:....... மீட்டிங் அரேன்ஜ் பண்ணக்கூடாதாம்......

போன்ல பேசப் போறாங்களே......
என்ன பண்ணுவ.....
நீ என்ன பண்ணுவ...??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
தாரா தாரா வந்தாரா
போனுல சங்கதி சொல்வாரா???!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top