தீபன் சக்ரவர்த்தியை இழுத்துக்கொண்டு வேறொரு அறைக்குச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது அவர்களுக்கு..
மிதுனுக்கு தான் நினைத்தது நடப்பது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், தீபன் இப்படி நடந்துகொள்வான் என்று நினைக்காததால், இது பெருமகிழ்ச்சி கொடுத்தது.
நிச்சயம் இவ்விசயம் வீட்டிற்குச் செல்லும், அப்பா அம்மா முன்னிலையில் தீபனின் நிலை??!!!
‘அட அட....’ நினைக்கவே அவனுக்கு அப்படி ஜில்லென்று இருக்க,
அனுராகாவோ “டோன்ட் யூ க்னோ ஹவ் டூ பீகேவ்..” என்று சீர,
“ஏய்.. நான் இப்படிதான்டி.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்று அவன் அப்போதும் தான் என்ன பேசுகிறோம் என்று புரியாது தான் பேசிக்கொண்டு இருந்தான்.
----------------------------------
அனுராகாவின் மனதில் அப்படியொரு போராட்டம்... போர்களமாய் தான் இருந்தது அவளுள்ளம்..
எப்படி??? எப்படி அவனால் இப்படி பேசிட முடிந்தது..???!!
அவன் அங்கே வந்து நின்றதுமே அவள் மனது அப்படியானதொரு நிம்மதியை உணர்ந்ததே.. அது அவனுக்குத் தெரியவில்லையா??!!
‘ஐயோ....’ என்று அரற்ற, அழுகை நின்று இப்போது கண்மண் தெரியாத ஆத்திரம்..
விளைவு, வீட்டினுள் நுழையும் போதே, கண்ணில் பட்ட பொருட்கள் எல்லாம் சின்னாபின்னமாகியது..
“ராஸ்கல்.... ராஸ்கல்... இப்படி பண்ணிட்டான்...” என்றபடி, ஹாலில் இருந்த கண்ணாடி மேஜையை அப்படியே இரு கரத்தினால் இழுத்துப் போட, அதுவோ உருவே தெரியாது உடைந்து சிதறியது.
உடைந்து சிதறிய சில்லுகள் எல்லாம் இவள் மீதும் தெறிக்க, மனக்காயம் மீறி இப்போது உடல் காயம் ஆக, ஆனாலும் அவளின் அந்த ஆத்திரம் தீரவில்லை.
தாரவோ “அனு.. ஏன் இப்படி பண்ற நீ...” என்று அவளை அதட்டியபடி பின்னேயே வர,
“ராஸ்கல்..... டேய்...!!!!” என்று அப்படியொரு கத்தல் அவளிடமிருந்து.
முகத்தை மூடிக்கொண்டு அப்படியே சரிந்து அமர, சுற்றிலும் சிதறியிருந்த கண்ணாடி சில்லுகள் அவளுடலை பதம் பார்த்தது.
------------------------------------------
“ஏன் தீப்ஸ் நீ இப்படி நடந்துக்கிற??!!” என்று புனீத் பொறுக்காது கேட்க,
“டேய்... டேய்... அவ.. அவ என்னைப் பார்த்து நீ எனக்கு வேணாம் சொல்லிட்டா டா..” என்று அப்போதும் அதே பதிலைச் சொன்னான் தீபன் சக்ரவர்த்தி..
“நீ பண்ணதுக்கு யாரா இருந்தாலும் அப்படிதான் டா சொல்வாங்க..” என்று தேவ் பொறுக்காது சொல்ல,
“அப்.. அப்போ அவ பண்ணது சரியாடா..??” என்றான் தீபன்..
அப்போதும் அவன் ஒரு நிலையாய் இல்லை...
மது...!! மது...!!! மது..!! அது மட்டுமே அன்றைய பொழுதில் அவனோடு இருந்தது..
ஷர்மா என்ற ஒருவனைக் கூட அவன் மறந்து போனான்.. கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரியின் எண்ணமெல்லாம் காணாது போயிருந்தது.. இப்போது அவனின் மனதில் இருந்ததெல்லாம், அனுராகா பற்றியது..
அவள்.. அவனிடம் உண்மையை மறைத்துவிட்டாள்...!!
இதுவே அவனின் வலியாய் இருக்க, அவ்வலியில், அவன் என்னென்னவோ செய்துவிட்டான்..
இறுதியாக, இதோ இப்போது.. தீபனின் ‘தி சோ கால்ட் ப்ரேக் அப் பார்டி..’ அதுவும் நடந்துகொண்டு இருந்தது...
‘என்னை வேணாம் சொல்லிட்டு போயிட்டா...’ என்று அவன் கத்த, நண்பர்கள் இருவரும் இவனை எப்படி சரி செய்வது என்று தெரியாது தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மிதுனுக்கு தான் நினைத்தது நடப்பது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், தீபன் இப்படி நடந்துகொள்வான் என்று நினைக்காததால், இது பெருமகிழ்ச்சி கொடுத்தது.
நிச்சயம் இவ்விசயம் வீட்டிற்குச் செல்லும், அப்பா அம்மா முன்னிலையில் தீபனின் நிலை??!!!
‘அட அட....’ நினைக்கவே அவனுக்கு அப்படி ஜில்லென்று இருக்க,
அனுராகாவோ “டோன்ட் யூ க்னோ ஹவ் டூ பீகேவ்..” என்று சீர,
“ஏய்.. நான் இப்படிதான்டி.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்று அவன் அப்போதும் தான் என்ன பேசுகிறோம் என்று புரியாது தான் பேசிக்கொண்டு இருந்தான்.
----------------------------------
அனுராகாவின் மனதில் அப்படியொரு போராட்டம்... போர்களமாய் தான் இருந்தது அவளுள்ளம்..
எப்படி??? எப்படி அவனால் இப்படி பேசிட முடிந்தது..???!!
அவன் அங்கே வந்து நின்றதுமே அவள் மனது அப்படியானதொரு நிம்மதியை உணர்ந்ததே.. அது அவனுக்குத் தெரியவில்லையா??!!
‘ஐயோ....’ என்று அரற்ற, அழுகை நின்று இப்போது கண்மண் தெரியாத ஆத்திரம்..
விளைவு, வீட்டினுள் நுழையும் போதே, கண்ணில் பட்ட பொருட்கள் எல்லாம் சின்னாபின்னமாகியது..
“ராஸ்கல்.... ராஸ்கல்... இப்படி பண்ணிட்டான்...” என்றபடி, ஹாலில் இருந்த கண்ணாடி மேஜையை அப்படியே இரு கரத்தினால் இழுத்துப் போட, அதுவோ உருவே தெரியாது உடைந்து சிதறியது.
உடைந்து சிதறிய சில்லுகள் எல்லாம் இவள் மீதும் தெறிக்க, மனக்காயம் மீறி இப்போது உடல் காயம் ஆக, ஆனாலும் அவளின் அந்த ஆத்திரம் தீரவில்லை.
தாரவோ “அனு.. ஏன் இப்படி பண்ற நீ...” என்று அவளை அதட்டியபடி பின்னேயே வர,
“ராஸ்கல்..... டேய்...!!!!” என்று அப்படியொரு கத்தல் அவளிடமிருந்து.
முகத்தை மூடிக்கொண்டு அப்படியே சரிந்து அமர, சுற்றிலும் சிதறியிருந்த கண்ணாடி சில்லுகள் அவளுடலை பதம் பார்த்தது.
------------------------------------------
“ஏன் தீப்ஸ் நீ இப்படி நடந்துக்கிற??!!” என்று புனீத் பொறுக்காது கேட்க,
“டேய்... டேய்... அவ.. அவ என்னைப் பார்த்து நீ எனக்கு வேணாம் சொல்லிட்டா டா..” என்று அப்போதும் அதே பதிலைச் சொன்னான் தீபன் சக்ரவர்த்தி..
“நீ பண்ணதுக்கு யாரா இருந்தாலும் அப்படிதான் டா சொல்வாங்க..” என்று தேவ் பொறுக்காது சொல்ல,
“அப்.. அப்போ அவ பண்ணது சரியாடா..??” என்றான் தீபன்..
அப்போதும் அவன் ஒரு நிலையாய் இல்லை...
மது...!! மது...!!! மது..!! அது மட்டுமே அன்றைய பொழுதில் அவனோடு இருந்தது..
ஷர்மா என்ற ஒருவனைக் கூட அவன் மறந்து போனான்.. கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரியின் எண்ணமெல்லாம் காணாது போயிருந்தது.. இப்போது அவனின் மனதில் இருந்ததெல்லாம், அனுராகா பற்றியது..
அவள்.. அவனிடம் உண்மையை மறைத்துவிட்டாள்...!!
இதுவே அவனின் வலியாய் இருக்க, அவ்வலியில், அவன் என்னென்னவோ செய்துவிட்டான்..
இறுதியாக, இதோ இப்போது.. தீபனின் ‘தி சோ கால்ட் ப்ரேக் அப் பார்டி..’ அதுவும் நடந்துகொண்டு இருந்தது...
‘என்னை வேணாம் சொல்லிட்டு போயிட்டா...’ என்று அவன் கத்த, நண்பர்கள் இருவரும் இவனை எப்படி சரி செய்வது என்று தெரியாது தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.