காரினுள்ளா இப்படிஎன்றாகிப்போனது இருவருக்கும். வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை. தன்னால் ஆனது.. பேசவேண்டும் என்று வந்தவளும் பேசவில்லை. பேசாமல் இருந்தவனும் இப்போது பேசவில்லை.
மாறாக இருவர் மனதிலும் ஒரு அமைதியும் நிம்மதியும்..
அந்த நள்ளிரவு நேர அமைதியையும் தாண்டி இருவரின் அருகாமையும் மற்றவர்க்கு கொடுத்த அமைதி சொல்லில் வடிக்க இயலாது..
தீபன் கண்கள் மூடி அப்படியே சாய்ந்திருக்க, அவனின் மீது சாய்ந்திருந்த அனுராகாவும் மௌனத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டாள். காரினுள் மெல்லிய பாட்டுச் சத்தம்.. அது இப்போதுதான் அவர்களின் செவிகளுக்கே எட்டியது.
இத்தனை நேரம் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டு இருந்ததா என்றே இருவரும் அறியிலார்.
“ஒரு பொழுது ஓர் ஆசை.. சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்..
ஒரே வீணை ஒரே ராகம்....”
என்ற வரிகள் கசிந்துகொண்டு இருக்க, இருவரின் மனதுள் அவ்வரிகளில் லயித்து, பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, தீபன் மேலும் அனுராகாவை இறுக அணைத்துக்கொண்டான்.
------------------------------------------------
ஆர்த்தி சரியாய் அந்நேரம் பார்த்து அங்கே வர அவனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது.
“ஆன்ட்டி என்னோட ஸ்மால் கிப்ட்...” என்று அழகிய வைர நெக்லஸ் ஆர்த்தி உஷாவிற்கு பரிசளிக்க,
“ஓ!! ஆர்த்தி பொண்ணு.. எப்போ வந்த நீ??! இப்போதான் இங்க வர தெரிஞ்சதா..” என்றார் சிறுவயதில் இருந்து பழகிய உரிமையில்.
அவளோ “தீப்ஸ்க்கு தெரியுமே ஆன்ட்டி.. உங்கக்கிட்ட சொல்லலையா??!!” என,
“அவன் எங்க வீட்ல இருக்கான்.. இருந்தாலும் இதெல்லாம் சொல்வானா என்ன??!” என்றவர்,
“சொல்லுடா எப்படி இருக்க??!” என, மிதுன் வந்தவனோ “ஆர்த்திக்கு என்னம்மா சந்தோசமா இருப்பா..” என்றபடி அம்மாவை ஒருபார்வை பார்த்துக்கொண்டே “தென் ஆர்த்தி வீட்ல பூஜை இருக்கு.. தீப்ஸ் எப்படியும் உன்னை இன்வைட் பண்ணிருப்பான்..” என,
---------------------------------------------
லோகேஸ்வரன் வந்தது தாராவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது. முதல் நாள் வரைக்குமே அவர் வருகிறேன் என்று சொல்லவேயில்லை.. “பார்க்கலாம்..” என்றுமட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தார்.
“அப்போ நான் மட்டும் போய்ட்டு வந்திடுறேன்...” என்று தாரா சொல்ல,
“ஏன் அனு இருக்காதானே.. அவளும் வரட்டுமே..” என்றவர் “நான் பார்த்துட்டு சொல்றேன்..” என்றிட, இதோ இப்போது வந்து நிற்பார் என்று நினைக்கவேயில்லை.
“லோகேஷ்..!!!” என்று பார்க்க,
“ஹவ் இஸ் மை சர்ப்ரைஸ்..” என்று அவரும் கேட்கும்போதே அனுராகாவும் அங்கே வந்துவிட்டாள்.
“டாட்...!!!” என்று ஆச்சர்யமாய் பார்க்க “என்னடா நீயும் எதிர்பார்க்கலையா??!” என்றார் சிரித்தபடி.
“நோ..!!” என்று அம்மா மகள் இருவரும் தலையை ஆட்ட,
“நாளைக்கு எவ்வளோ இம்பார்டன்ட் டே.. நான் வராம இருப்பேனா..” என, இப்போது அம்மா மகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
அனுராகாவோ “டாட்.. நான் உங்களோட கொஞ்சம் பேசணும்..” என,
“பேசலாமே.. பட்.. இப்போ அப்பா செம டயர்ட்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்..” என்றார் தாராவை ஒருபார்வை பார்த்துவிட்டு.
--------------------------------------------------
மிதுனுக்கு எங்கே எப்படி எத்தனை பேர் வைத்துத் தேடினாலும் ஷர்மா இருக்குமிடம் மட்டும் கண்டுபிடிக்கவே முடியாது போனது. அந்த கோபம் எரிச்சல் கடுப்பு எல்லாம் தீபன் மீது தான் திரும்பியது. இது போதாது என்று அவனுக்கும் அனுராகாவிற்குமான பழக்கம் தொகுதி ஆட்களுக்குத் தெரிந்துபோனது இவனுக்குத் தெரிய வர,
“ச்சேய்...!!!!” அவன் முன்னே இருந்த மேஜையை எட்டி உதைத்தாதன்.
“தம்பிக்கு பொண்ணு வந்திடுச்சு.. உங்களுக்கு எப்போன்னு என்கிட்டயே வந்து கேட்கிறான்... என்ன தைரியம்...” என்று பல்லைக் கடித்து முணுமுணுத்தவன்,
“காட்றேன் டா.. அந்த பொண்ணு யாருக்குன்னு காட்டுறேன்...” என்றும் சொல்லிக்கொள்ள, மறுநாள் விடிந்தால் பூஜை.
ஆர்த்தி விஷயம் தவிர வேறெதுவும் அவன் நினைத்ததுபோல் நடந்திடவில்லை. ஆனால் அவனே எதிர்பாராத விதமாய், அவனுக்குச் சாதகமாய் ஒன்றும் நடந்தேறியது.
மாறாக இருவர் மனதிலும் ஒரு அமைதியும் நிம்மதியும்..
அந்த நள்ளிரவு நேர அமைதியையும் தாண்டி இருவரின் அருகாமையும் மற்றவர்க்கு கொடுத்த அமைதி சொல்லில் வடிக்க இயலாது..
தீபன் கண்கள் மூடி அப்படியே சாய்ந்திருக்க, அவனின் மீது சாய்ந்திருந்த அனுராகாவும் மௌனத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டாள். காரினுள் மெல்லிய பாட்டுச் சத்தம்.. அது இப்போதுதான் அவர்களின் செவிகளுக்கே எட்டியது.
இத்தனை நேரம் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டு இருந்ததா என்றே இருவரும் அறியிலார்.
“ஒரு பொழுது ஓர் ஆசை.. சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்..
ஒரே வீணை ஒரே ராகம்....”
என்ற வரிகள் கசிந்துகொண்டு இருக்க, இருவரின் மனதுள் அவ்வரிகளில் லயித்து, பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, தீபன் மேலும் அனுராகாவை இறுக அணைத்துக்கொண்டான்.
------------------------------------------------
ஆர்த்தி சரியாய் அந்நேரம் பார்த்து அங்கே வர அவனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது.
“ஆன்ட்டி என்னோட ஸ்மால் கிப்ட்...” என்று அழகிய வைர நெக்லஸ் ஆர்த்தி உஷாவிற்கு பரிசளிக்க,
“ஓ!! ஆர்த்தி பொண்ணு.. எப்போ வந்த நீ??! இப்போதான் இங்க வர தெரிஞ்சதா..” என்றார் சிறுவயதில் இருந்து பழகிய உரிமையில்.
அவளோ “தீப்ஸ்க்கு தெரியுமே ஆன்ட்டி.. உங்கக்கிட்ட சொல்லலையா??!!” என,
“அவன் எங்க வீட்ல இருக்கான்.. இருந்தாலும் இதெல்லாம் சொல்வானா என்ன??!” என்றவர்,
“சொல்லுடா எப்படி இருக்க??!” என, மிதுன் வந்தவனோ “ஆர்த்திக்கு என்னம்மா சந்தோசமா இருப்பா..” என்றபடி அம்மாவை ஒருபார்வை பார்த்துக்கொண்டே “தென் ஆர்த்தி வீட்ல பூஜை இருக்கு.. தீப்ஸ் எப்படியும் உன்னை இன்வைட் பண்ணிருப்பான்..” என,
---------------------------------------------
லோகேஸ்வரன் வந்தது தாராவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது. முதல் நாள் வரைக்குமே அவர் வருகிறேன் என்று சொல்லவேயில்லை.. “பார்க்கலாம்..” என்றுமட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தார்.
“அப்போ நான் மட்டும் போய்ட்டு வந்திடுறேன்...” என்று தாரா சொல்ல,
“ஏன் அனு இருக்காதானே.. அவளும் வரட்டுமே..” என்றவர் “நான் பார்த்துட்டு சொல்றேன்..” என்றிட, இதோ இப்போது வந்து நிற்பார் என்று நினைக்கவேயில்லை.
“லோகேஷ்..!!!” என்று பார்க்க,
“ஹவ் இஸ் மை சர்ப்ரைஸ்..” என்று அவரும் கேட்கும்போதே அனுராகாவும் அங்கே வந்துவிட்டாள்.
“டாட்...!!!” என்று ஆச்சர்யமாய் பார்க்க “என்னடா நீயும் எதிர்பார்க்கலையா??!” என்றார் சிரித்தபடி.
“நோ..!!” என்று அம்மா மகள் இருவரும் தலையை ஆட்ட,
“நாளைக்கு எவ்வளோ இம்பார்டன்ட் டே.. நான் வராம இருப்பேனா..” என, இப்போது அம்மா மகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
அனுராகாவோ “டாட்.. நான் உங்களோட கொஞ்சம் பேசணும்..” என,
“பேசலாமே.. பட்.. இப்போ அப்பா செம டயர்ட்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்..” என்றார் தாராவை ஒருபார்வை பார்த்துவிட்டு.
--------------------------------------------------
மிதுனுக்கு எங்கே எப்படி எத்தனை பேர் வைத்துத் தேடினாலும் ஷர்மா இருக்குமிடம் மட்டும் கண்டுபிடிக்கவே முடியாது போனது. அந்த கோபம் எரிச்சல் கடுப்பு எல்லாம் தீபன் மீது தான் திரும்பியது. இது போதாது என்று அவனுக்கும் அனுராகாவிற்குமான பழக்கம் தொகுதி ஆட்களுக்குத் தெரிந்துபோனது இவனுக்குத் தெரிய வர,
“ச்சேய்...!!!!” அவன் முன்னே இருந்த மேஜையை எட்டி உதைத்தாதன்.
“தம்பிக்கு பொண்ணு வந்திடுச்சு.. உங்களுக்கு எப்போன்னு என்கிட்டயே வந்து கேட்கிறான்... என்ன தைரியம்...” என்று பல்லைக் கடித்து முணுமுணுத்தவன்,
“காட்றேன் டா.. அந்த பொண்ணு யாருக்குன்னு காட்டுறேன்...” என்றும் சொல்லிக்கொள்ள, மறுநாள் விடிந்தால் பூஜை.
ஆர்த்தி விஷயம் தவிர வேறெதுவும் அவன் நினைத்ததுபோல் நடந்திடவில்லை. ஆனால் அவனே எதிர்பாராத விதமாய், அவனுக்குச் சாதகமாய் ஒன்றும் நடந்தேறியது.