Chitrasaraswathi
Well-Known Member
Eagerly waiting for the episode
sema precap“உனக்கு வேணும்னா இது நார்மல் ரிலேஷன்ஷிப்பா இருக்கலாம்.. பட் எனக்கு அப்படியில்லை..” என்றவன் பார்வை இப்போது வேறெங்கோ காண,
“என்ன அப்படியில்லை..??!!” என்றாள் அனுராகாவும்..
“நீ தான் பிஸ்னஸ் ப்ளட் ஆச்சே.. கணக்கு போட்டு பாரு..” என்றவன், “டேய்.. சாரி... டோட்டலா மூட் ஆப்.. நான் பார் போறேன்...” என்று கிளம்ப,
அனுராகாவிற்கு பேசிக்கொண்டு இருக்கும்போதே இப்படி தீபன் சொன்னதும், அதுவும் நண்பர்கள் முன்னே இப்படி நடந்துகொண்டதும் எல்லாம் சேர்த்து மேலும் மேலும் ஆத்திரம் தான் கூடியது.
என்னை நீ உதாசீனம் செய்வதா என்று..??!!!
அவனைப் பார்த்தவளோ “மூட் ஆப் உனக்கு மட்டுமில்லை... நீ கூப்பிட்டன்னு கிளம்பி வந்தேன் இல்லையா எனக்கும் தான்.. சோ நீ பார்ல என்ன ஆர்டர் பண்றியோ அது தான் எனக்கும்.. ” என,
புனீத் “டேய் இவங்க ரெண்டு பெரும் நமக்கு கடைசி வரைக்கும் எதுவும் ட்ரீட் வைக்கப் போறதில்லை.. சாப்பாடா இருந்தாலும் சரி. தண்ணியா இருந்தாலும் சரி..” என்று தேவ்விடம் சொல்ல,
நீரஜாவோ “அனு...” என்று இப்போதும் அவளை அதட்ட,
“அவ என்னோடதானே வர்றா...” என்றான் தீபனும்..
---------------------------------------------------------
அனுராகாவிற்கு தான் ஏன் இப்படி நடந்துகொள்கிறோம் என்றே விளங்கவில்லை.. யாரோ மீதிருந்த கோபத்தினை தீபன் மீது காட்டியிருக்கிறோம் என்று இப்போது நன்கு புரிந்தது...
அவன் என்ன கேட்டுவிட்டான் உனக்கு உன் அலுவலகத்தில் எதுவும் பிரச்னையா என்றுதானே கேட்டான்.. அதற்கு பொறுமையாய் பேசியிருந்தால் என்ன தவறாகியிருக்கும்?? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனாலும் தீபனும் தானே அடுத்து மதிக்காமல் நடந்துகொண்டான்.
போதாத குறைக்கு குடித்துவிட்டு வேறு அப்படி பேச்சு..
“நீ.. நீ இருக்கப் பார்த்தியா.. ரொம்ப திமிர் டி உனக்கு...” என்றவனோ “ஆனா அந்த திமிர் தான் உன்னை செம்ம பிகர் சொல்ல வச்சுது...” என்று அவளின் செவியின் அருகே உளற,
இப்போதும் அவளுக்கு அவன் சொன்னது எண்ணி செவிகள் கூசியது..
‘ராஸ்கல்...’ என்று அவளின் இதழ்கள் முணுமுணுக்க, பாத் டப்பில் இருந்த நீரின் கதகதப்பை விட, தீபனின் கரங்கள் அவளை அணைத்த கதகதப்பு இன்னமும் அவள் உணர,
‘ச்சே சரியான ராஸ்கல் தான்..’ என்று எண்ணிக்கொண்டு அவனுக்கே அழைப்பு விடுத்தாள்.
-----------------------------------------
மிதுன் திடீரென்று சென்னை வருவான் என்று உஷாவும் எண்ணவில்லை, தீபனும் எண்ணவில்லை. உஷாவிற்கு சந்தோசம் தான் இருந்தாலும், பிள்ளைகள் இருவரும் இங்கே இருந்தாலும் வீட்டினில் இருக்கப் போவதில்லை என்பதால்,
வழக்கம்போல “என்னடா திடீர்னு..” என்றுதான் கேட்டார்..
தீபன் சக்ரவர்த்தியோ “எதுவும் பிரச்னையா??!!” என்று கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை.. வேலை இருந்தது சோ வந்துட்டேன்.. ம்மா.. அப்பா உன்னை அங்க வரச் சொன்னாராமே..” என,
“ஆமாடா.. பட் இங்க சில விசேஷங்கள் எல்லாம் இருக்கு.. அதெல்லாம் முடிச்சிட்டு தான் போகணும்..” என்று உஷாவும் சொல்ல,
“என்ன விசேசம்??” என்றான் தீபன் சக்ரவர்த்தி..
“அது நிறைய இருக்கு.. எப்பவும் எலெக்சன் முன்னாடி வீட்ல ஹோமம் செய்வோமே அது செய்யணும்...” என்றவர்,
“இந்த வருஷம் மிஸ்டர். லோகேஸ்வரன் பேமிலியை இன்வைட் பண்ணலாம்னு இருக்கேன்..” என, தீபனுக்கு முகம் யோசனையில் மாறியது என்றால், மிதுன் சக்ரவர்த்திக்கு நொடியில் ஒரு வெற்றிப் புன்னகை வந்து போனது..
---------------------------------------------
“நான்தான் தீப்ஸ்...” என்று அமரிக்கையாய் பதில் வந்தது மிதுனிடம் இருந்து.
திரும்பிப் பார்த்தவன் கேள்வியாய் நோக்க “என்னடா.. மாவட்ட செயலாளர்களுக்கு எல்லாம் எப்பவும் நம்ம பார்ம்ல விருந்து கொடுப்போம் தானே.. அதுக்கான ஏற்பாடு தான்..” என,
“அது தெரியுது.. பட்.. அப்பா இங்க இல்லாதப்போ.. இதை ஏன் செய்யனும்னு கேட்கிறேன்..” என்று தீபனும் சொல்ல,
“அப்பா இல்லைன்னா என்னடா.. நம்ம இருக்கோம்தானே.. நான் எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. நாளைக்கு நைட் எல்லாரும் வந்திடுவாங்க.. நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத.. இதை நான் பார்த்துக்கிறேன்..” என்று மிதுன் சொல்லிவிட்டு போக,
தீபனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது அவன் சொன்னதை கேட்டு..
அப்பா அல்லாது.. அப்பாவின் முடிவினை கேட்காது என்று எதுவும் மிதுன் இதுநாள் வரைக்கும் செய்ததில்லை.. இன்றோ??!!
‘இவனுக்கு என்னாச்சு...’ என்றுதான் பார்த்தான் தீபன்..