சாரதாவோட வலியும் இழப்பும் சொல்லில் அடங்காது. ஆரம்பத்துலயே திருமண வாழ்க்கை சரியில்லைனா அது வேற. இப்படி இந்த மாதிரி எதிர்பார்க்க முடியாத கோணத்துல அவளுக்கு ஏற்பட்டுருக்கும் திருமணத்தோல்வி ரொம்ப கொடுமை.
எல்லாமே முன்னாடியே அனுமானிக்க நாம என்ன கடவுளா?
Unfortunately அவளுக்கு ரெண்டுமே ஆண் பிள்ளைகள் வேற. அப்பாவோட தேவை அதிகம். அந்த கேடுகெட்ட கமலுக்கு அந்த திமிரு தான்.
கமலோட அம்மா -அப்பா நிஜத்தை புரிஞ்சுக்கணும். அவளை தனியாக இருக்க விடணும். எவ்வளவு வேணுமோ உறுதுணையாக இருக்கலாம் ஆனால் அவள் தனியாக செயல்படணும். அதுவே அவளுக்கு ஒரு தைரியத்தையும் மனமாற்றத்தையும் கொடுக்கும்.
ஏன்பா பரணி, உங்க தேவைக்கு காயூ திடீர்ன்னு எப்படிப்பா வளருவா? அவளுக்கு இனியனோட கார்ட்டூன் பார்க்க தான் தெரியும். இப்படி ஒரு குழந்தையை விட்டு இன்னொரு குழந்தையை சமாளிக்க சொன்னா அவ என்ன செய்வா பாவம்.