Kaathal Sindhum Thooral - Precap 9

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
‘ம்ம்ஹும்.. பேசிட்டாலும்... பார்வைல பதில் சொல்வா இல்லையோ முணுமுணுன்னு பேசிட்டு போவா...’ என்றுதான் தோன்றியது அவனுக்கு..

மனது லேசாய் கண்மணியை கடிந்தாலும், அவளது நினைவு வரவும் தானாய் ஒரு புன்னகை வேறு அவனுக்கு வந்து ஒட்டிக்கொள்ள, தானாக சிரித்துக்கொண்டான்..

அதே நேரம் இவனுக்கு ஜூஸ் போட்டு எடுத்துக்கொண்டு மஞ்சுளா அறைக்குள்ளே வர, இவனோ இதழில் கசியும் புன்னகையோடு, பார்வையில் பொங்கும் காதலோடு, ஒரு மோன நிலையில் இருக்க, மஞ்சுளாவோ தான் வந்ததை கூட கவனிக்காது அப்படியே அமர்ந்திருக்கும் மகனை வித்தியாசமாய் தான் பார்த்தார்.

கையில் இருந்த டம்ப்ளரை டங்கென்று டேபிளில் வைக்க, அப்போதும் அவன் அசைவதாய் இல்லை. அசைவது என்ன கண் இமை கூட அடிக்கவில்லை.
---------------------------------------------

ஆக எத்தனை சூடாய் இருந்தாலும் தாங்கிக்கொண்டுத் தான் ஆகவேண்டும் என்ற திண்ணம் அவனுள். ஒருமுறை ஆழ மூச்செடுத்து விட்டு, கண்களை இறுக மூடித் திறந்தவன்,

“ஒண்ணு நீங்களே நல்லவிதமா சொல்லி நிறுத்துங்க, இல்லையா என்னை பேசவிடுங்க.. அதுவுமில்ல இதான் முடிவுன்னா...” என்று பேச்சை நிறுத்தியவன், ஒருமுறை கட்டுப் போட்டிருந்த தன் கரத்தினையும், வீட்டினர் மற்றவர்களின் முகத்தினையும் பார்த்தவன்,

“கையை தான் அடிபட வச்சேன்.. அடுத்து எப்படி போய் எங்க விழுவேன் தெரியாது...” என்றான் பார்வையை எங்கே பதித்தபடி.
அவ்வளவுதான் அடுத்தநொடி அங்கே அப்படியொரு நிசப்தம்,
----------------------------------------------------------


‘ஆகா.... பிள்ளையாரப்பா... கோடானு கோடி நன்றிகள்...’ என்று எண்ணிக்கொண்டவன், பக்கவாட்டில் அவளைப் பார்க்க, அவளின் கவனமோ சிறிதும் அவன்மீது இல்லை..

முகத்தினில் லேசாய் ஒரு வாட்டம் இருக்க, பார்வை எல்லாம் வேறெங்கோ இருக்க, அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தாள்..
‘என்னாச்சு இவளுக்கு..’ என்றெண்ணியவனின் கால்கள் நேராய் அவளிடம் போக விழைய,


‘நோ நோ..’ என்று சொல்லிக்கொண்டவன், அடுத்த சுற்று சுற்றி, வேண்டுமென்றே கண்மணியை தாண்டும்போது, “ஹலோ... நீங்க பேசுறது சரியா கேட்கல.. நான் கோவிலுக்குள்ள இருக்கேன்..” என்று வராத அழைப்பில் பேசிக்கொண்டே மெதுவாய் நடக்க, அவனின் இந்த குரலில் கண்மணி எனும் சிலைக்கும் உயிர் வந்திட, பார்வை அவனைத் தீண்டியது.
 

Joher

Well-Known Member
Ty சரயு.....
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி.....

உனக்கு ரொம்ப தான்......
பார்வையில் பேசும் போதே உயிரை விடுவேன்னு சொல்லுறியே......
So உயிர் பெற்ற சிலை உயிரை வாங்க போகுதா?????
டேய் பார்த்துடா..... வருண் காத்திட்டுருக்கான்......
அவளும் எப்படியாவது நிறுத்திடு புள்ளையாரப்பானு வேண்டிக்கொண்டாளா??????:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top