Kaathal Sindhum Thooral - Precap 2

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“கண்ஸ் வாட்ச் உங்க அண்ணனுக்கு தானே...” என்றதும்,

தீபாவை பார்த்து சிரித்த கண்மணி “எங்க அண்ணனோட பியான்சி இவ....” என்று தீபாவை சொல்ல,

அண்ணன் தம்பி இருவருமே ‘ஓ...!!!!!!!’ என்றுமட்டும் மனதினுள் சொல்லிக்கொள்ள முடிந்தது.

‘மறுபடியும் முதல்ல இருந்தா...’ அப்படி என்பதுபோல் தீபா திரும்பவும் அதிரூபனின் கடிகாரம் காட்டி கேட்க,

அதனுள் வேகமாய் கண்மணி “இதேபோல இல்லைன்னாலும், கொஞ்சம் அல்டர் பண்ணி...” என்று அவள் கண்களை மட்டும் லேசாய் விரித்து, அதிரூபனை நேருக்கு நேராய் பார்த்து கேட்க,

‘இல்லை....’ என்று சொல்ல எண்ணியவனின் வாய்க்கு தான் மனம் இல்லை என்று சொல்லி, தலையை சரி என்று ஆட்ட வைத்தது.

-----------------------------------------------------------

“அப்பா....” என்றாள் வேகமாய்.. ஆனால் சத்தமே வரவில்லை.

கண்மணியின் முகத்தினில் இருந்த பதற்றம் விட, தீபாவின் முகத்தினில் அதிகம் இருந்ததுபோல் இருந்தது ஆண்கள் இருவருக்கும்.. அனைவரும் கண்மணியைப் பார்க்க, அவளோ ஒரு அவஸ்தையில் நிற்பது போலிருந்தது. சட்டென்று தள்ளிப் போயும் பேச முடியவில்லை..

“நா... நா... டைலர் ஷாப்ல இருக்கேன் ப்பா...” என்று அவள் வார்த்தைகளை மென்று விழுங்க, தீபாவை தவிர, அண்ணன் தம்பி இருவருக்கும் லேசாய் ஒரு அதிர்வு..
பின்னே இது அப்பட்டமாய் ஒரு பொய் தானே.. இருவரும் ஒருவரை பார்த்துக்கொள்ள, கண்மணியும் சங்கடமாய் பார்த்துவைத்தாள்.. பார்வை இவர்களில் இருக்க, பேச்சு அவளின் அப்பாவோடு இருந்தது.


-----------------------------------------------------------------

“அம்மாக்கு இந்த ரெண்டு பொண்ணுமே ரொம்ப பிடிச்சிருக்குண்ணா...” எனும்போதே,
“அப்போ உனக்கொன்னு எனக்கொன்னு பேசி முடிக்கப் போறாங்களா???” என்றான் அதிரூபன் கிண்டலாய்..


“ண்ணா...!!!!” என்று நிவின் அதிர்ந்து பார்த்தவன், அண்ணன் முகத்தினில் இருந்த சிரிப்பினை கண்டு “நீ இருக்க பாரேன்...” என்று சிரித்திட,

“பின்ன என்னடா.. நானுமே ரெண்டும் பிடிச்சிருக்குன்னு சொன்னா எனக்கு ரெண்டு பேரையும் கட்டி வைப்பாங்களா??” என்று அடுத்த சிக்ஸர் போட,

நிவினோ “தெய்வமே....” என்று கை எடுத்து கும்பிட்டவன், “நீயே வந்து அம்மாக்கிட்ட
பேசிக்கோ..” என்று கிளம்ப,


-----------------------------------------------------------------

“என்னடி டைலர் என்ன சொன்னான்..?? வெறும் கையோட வந்திருக்க இன்னும் தச்சு முடிக்கலையா???” என்றபடியே பின்னோடு அம்மா வருவார் என்று அவளுக்கு தெரியுமோ என்னவோ,

“ஒரு வாரம் ஆகுமாம் ம்மா.. அவரே சொல்றேன் சொல்லிருக்கார்.. முகூர்த்த வேலையாம் அதுனால நம்மளது கொஞ்சம் லேட்..” என்று தயாராய் ஒரு பதில் சொன்னாள்.

பின்னே அடுத்த வாரம் எப்படியும் அந்த வாட்ச் வாங்க தீபா இவளையும் அழைப்பாள், அதற்கு ஏற்றபடி இப்போதே சொள்ளியும்விட்டாள். இல்லையெனில் அடுத்த வாரமும் ஒரு காரணம் தேடவேண்டுமே..
 

Joher

Well-Known Member
Ty Sarayu.....
ரெண்டு பொண்ணும் புடிச்சிருந்தா ரெண்டு பேரையும் கட்டிவைப்பங்களா????
பேராசைடா உனக்கு......
கண்மணி வந்து உன் கண்விழியை நோண்டபோறா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top