Kaathal Sindhum Thooral - Precap 12

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
கண்மணியின் புன்னகை மேலும் விரிய, ‘என்ன இந்த பொண்ணு பேசாதா??’ என்று அதிரூபனைப் பார்த்தார்.

“கொஞ்சம் சைலென்ட் டைப்...” என்று அதிரூபன் சொல்ல,

“ஓஹோ... ரொம்ப தெரிஞ்சிருக்க...” என்றவரை அதிரூபன் கூர்ந்து பார்த்தானோ இல்லையோ கண்மணி கூர்ந்து பார்த்தாள்.

‘என்ன சொல்றார்..??’ என்று கண்களை இடுக்கி கண்மணி பார்க்க, சுப்பிரமணி என்னவோ இதனை சாதாரணமாய் சொன்னதுபோலத்தான் இருந்தது.

‘என்ன தெரிஞ்சிருக்கும் என்னை??’ என்ற கேள்வி கண்மணியினுள் எழ, அதிரூபனோ
மேற்கொண்டு அங்கே இருந்தால், தேவையில்லாத கேள்விகள் வரும் என்றெண்ணி, “கிளம்புவோமா மாமா??” என,
------------------------------------------------------
“ரொம்ப சந்தோசம்மா.. மேற்கொண்டு என்னன்னு பேசிட்டு போகலாம்னு வந்தேன்..” என்றவர்


“என்ன சடகோபா கண்ணன் என்ன சொல்றான்??” என்ற கேள்விக்கு போக,

அவரோ சியாமளாவை பார்த்தார் என்ன சொல்வது என்று. சியாமளாவும் ஒரு அவஸ்தையில் அமர்ந்திருக்க, கண்மணியோ என்ன பேசுவது என்று தெரியாது நிற்க, சடகோபன் மகளை நீ உள்ளே போ என்று பார்த்தார்..

‘எல்லாரும் என்னை கிளப்புறாங்க.. அவர் என்னன்னா கிளம்புன்னு பாக்குறார்.. அப்பா என்னன்னா உள்ளப்போன்னு பாக்குறார்...’ என்று அவள் மனது முணுமுணுக்க, திரும்ப திரும்ப அவளின் மனம் அதிரூபனிடம் சென்று நிற்பது அவளுக்கே பிடிக்கவில்லை.

------------------------------------------

“என்னடா புதுசா?? கெஞ்சல் எல்லாம்..” என்றார் அதட்டி..

“நீ அடிச்சுக்கோ ஆனா பேசாம இருக்காத.. எனக்கு.. அப்போ எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலைம்மா...”

“ம்ம்ம்...”

“நிஜமாம்மா..”

“அப்போ நீ எதையும் என்கிட்டே மறைக்கல அப்படிதானே...” என்று மஞ்சுளா கேட்டதும் இவனுக்கு திடுக்கென்று தான் இருந்தது.

எதை கேட்கிறார் அம்மா என்று.. பவித்ரா விசயமா?? இல்லை கண்மணி வசயமா?? இரண்டையுமே தானே மறைத்திருக்கிறான். இரண்டில் எது தெரிந்தாலும் நிச்சயம் இப்போது மஞ்சுளாவின் மனம் வருந்தும். ஆக வாயே திறக்கக் கூடாது என்று அம்மாவைப் பார்க்க,
-------------------------------------------------------------

‘மாமனோ மச்சானோ.. பாவம் அவனும் லவ் பண்ற ஒரு ஜீவன்.. அதான்..’ என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான்..

அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொரு முறை அழைப்பு வரும்போதும், ஒருவேளை அது கண்மணியாய் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிரூபனுள் கூடிக்கொண்டே போக,

‘ஹ்ம்ம் அவ நம்பரையும் வாங்கிருக்கணும்.. அட்லீஸ்ட் என்னாச்சுன்னு கேட்டாவது இருக்கலாம்..’ என்றுசொல்லி, அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கையில் கண்மணியே அழைத்தாள்.

“ஹ... ஹலோ நான்.. கண்மணி பேசுறேன்..” எனும்போதே அவள் குரலில் அப்படியொரு சந்தோசம்..
 

Joher

Well-Known Member
மாமா எட்டி பார்த்துட்டு போட்டு குடுத்துட்டாறா????
அம்மா போட்டு வாங்குறாங்களே...... டேய் வாயை மூடிக்கோ.... இல்லைனா காதை மூட வேண்டும்......

Telepathy call?????? கண்ஸ் happy......
மாமனோ மச்சானோ love பண்ணும் ஜீவன்.......:p:p:p
நீ இன்னும் சொல்லவே இல்லையே?????
உன் ஆளு வேற happy news சொல்லுறா......
நீ எப்போ உன் காதலை சொல்லப்போகிறாய்????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top