Kaathal Sindhum Thooral - Precap 10

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
கேட்டால் ‘லூசா நீ...’ என்றுதான் கண்மணி நிச்சயம் பார்ப்பாள் என்று தெரியும்..
அக அதைவிட்டு “கண்ணாடி டேபிள் இடிச்சிடிச்சு...” என்றுமட்டும் சொன்னான்..


‘ஓ..!!!’ என்று இதழ் குவித்தவள், “டேபிள்... அதா இடிக்குமா???” என்றாள் பார்வையை மட்டும் அவன் முகத்தை பார்த்து நிறுத்தி..

‘ஆகா....!!!!!!!!! கண்மணி அடுத்த மஞ்சுளா.....’ என்று எண்ணியது அவனின் மனம்.. ஆனால் தலையோ ‘இல்லையென்று...’ ஆட,

‘பின்ன??!!’ என்று கண்களை சுருக்கி, கேள்வியை மட்டும் கண்ணில் காட்டினாள்.

“அது... அது... நானே இடிச்சிட்டேன்...”

“ஏன் ஏன்??” என்று கண்மணி வேகமாகவே கேட்டாலும், சத்தம் என்னவோ அத்தனை எட்டவில்லை அவனுக்கு..

ஆனாலும் அவனின் பார்வை எல்லாம் அவளின் முகத்திலேயே இருக்க, அவளின் ஒவ்வொரு இதழ் அசைப்பும் அவனுக்கு அர்த்தம் சொல்ல,
----------------------------------------------
கண்ணன் வந்ததுமே “என்னண்ணா...” என்று கண்மணி கேட்க,
“ம்ம்ச் கடுப்பா இருக்கு...” என்றபடி இவனும் அமர,
“உ... உனக்கு பிடிக்கலையா???” என்றாள் கண்மணி பாவமாய்..
“என்ன பிடிக்கலையா??”
“அ.. அதான் இந்த வரன்...”
“உனக்கு பிடிச்சிருக்கா?? அதையே உனக்கு உருப்படியா சொல்ல தெரியலை.. என்னவோ செய்ங்க...” என்று கண்ணன் கடியும் போதே, சியாமளா வேகமாய் உள்ளே வந்தவர்,
-----------------------
மனதில் ஒரு அமைதி தேவைபட, சியாமளாவிடம் கோவிலுக்கு போகிறேன் என்றுசொல்ல, அவரோ முறைத்தார்..


“கொஞ்சம் டென்சனா இருக்கும்மா...” என்றவளை பார்த்து என்ன நினைத்தாரோ “நல்லதே நடக்கனும்னு வேண்டிட்டு வா..” என்று அனுப்பிவிட்டார்..

இங்கே வந்தாலோ, என்னதான் இறைவனிடம் முறையிட்டாலும் மனதினில் எழும் குழப்ப அலைகள் அடங்குவதாய் இல்லை

அடுத்து என்ன நடக்கும்??

தான் என்ன செய்ய வேண்டும்??

இந்த இரு கேள்விகளே அவள் முன் நிற்க, இப்போதோ அதிரூபன் முன் நின்றிருந்தாள் அவள்.
---------------------
“கேட்க மறந்துட்டேன் உங்களுக்கு பிக்ஸ் ஆகிடுச்சுன்னு நிவின் சொன்னான்...” என்று கண்மணி சொல்ல,


‘ரொம்ப முக்கியம்...’ என்றெண்ணியவன் “அதெல்லாம் இல்லை டிராப் ஆகிடுச்சு...” என்றான் அதிரூபன் வேகமாய்..

“அச்சோ.. ஏன்?? எப்படி?? என்னாச்சு?? அதான் டென்சனா...” என்றவள் திரும்பவும் அவனின் கரங்களைப் பார்க்க, அவளின் முகத்தினில் ஏதோ ஒரு ஓரத்தில் சின்னதாய் ஒரு நிம்மதி தெரிவது போல் இருந்தது அதிரூபனுக்கு..

அது அவனின் மனபிராந்தி அல்ல, காதல் பிராந்தி.. தனக்கு சாதகமாவே அனைத்தையும் பார்த்துக்கொள்ளும், பருகிக்கொள்ளும்..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மன பிராந்தியா?
இல்லை, விஸ்கியா?
வடிவேலு சொல்றமாதிரி
முடியல டாக்டர் முடியல
சே, சே முடியல சரயு டியர்
முடியல
 

Joher

Well-Known Member
Ty சரயு.......
மனபிராந்தி அதிரூபனுக்கு தானா????? ரெண்டு தடவை வந்திருக்கே.......

கண்ஸ்க்கும் drop ஆயிடுச்சா????? இல்லை வருண் வீட்டில் ஏதும் பிரச்சனையா?????
என்ன tension and கோயிலுக்கு போகிறாள்...... அம்மா வேற நல்லது நடக்கட்டும்னு சொல்றாங்களே.....

இப்பவே அடுத்த மஞ்சுளா...... இன்னும் கல்யாணம் ஆனால்?????
 
Last edited:

Pramo

Well-Known Member
:):):)
"காதல் பிராந்தி.. தனக்கு சாதகமாவே அனைத்தையும் பார்த்துக்கொள்ளும், பருகிக்கொள்ளும்..:"
side dishum keakumah....???????
Nice precap ....:)
Epi oda vaanga waiting...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top