அருமையான பதிவு ரம்யா
.அகல்யாவை பெண் பார்க்க வந்தவர்கள் நிச்சயமும் செய்து விட்டனர்
.மகனின் விருப்பத்திற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தவர்களுக்கு, அவர்கள் வசதிக்கு ஏற்ப சீர் வரிசையுடன் மருமகள் வருவது மிகவும் சந்தோஷம்
.
என்னது இது அம்மாவ எல்லார் முன்னாடியும் காட்டி கொடுத்தானா
,இவ அம்மா செஞ்சது தப்புன்னு சந்திரனே சொல்லிட்டார்.ஆனா இவதான் அதை மனசுல வச்சுட்டு அண்ணா,அண்ணிய மரியாதை இல்லாம எடுத்தெறிஞ்சு பேசி,காமாட்சி பொண்ணுன்னு நிரூபிக்கறா
.
இவ அப்பா தான் அதிகமா வேலை செய்யறார்னா தனியா கூட்டிட்டு போக வேண்டியது தானே
. மகேஸ்வரி அண்ணன் பொண்ணு மருமகளா வரனும்னு இவள கட்டினா அவ்வளவு தான்.இத்தனை
வருசமா மாமியார்ட்ட மாட்டிட்டு இருந்தாங்க,அப்புறம் இவட்ட மாட்டிட்டு கஷ்டப்படுவாங்க
கர்ப்பிணி பெண்ணை தனியா வேலை செய்ய விட்டுட்டு எல்லாரும் வெளியே போயிடறாங்க, இதுக்கு நிலாவை அம்மா கிட்ட அனுப்பிட்டு கல்யாணத்துக்கு வரசொல்லியிருக்கலாம்
.
நிலாவிடம் பணம்,நகை வாங்கினால் கற்பகம் இளாக்காரமா பேசும்,அண்ணன்,தங்கைக்கு சண்டை வந்தால் ஒன்றுமில்லை நீ எதாவது சொன்னால் பிரச்சனை பெருசாகும் என பொறுமையாக ஜெய் அவளிடம் பேசாதது,அம்மா வீட்டுக்கு எப்போ போவோம்னு இருக்கு என அவள் அழ காரணம்
ஆகிவிட்டது
.இவனெல்லாம் என்னத்த காதலிச்சு கல்யாணம் பண்ணானோ
.