ThangaMalar
Well-Known Member
பனிமூட்டம் வந்திருக்க,
உயிரோட்டம் நில்லாது துடிக்க,
மீட்கும் கனலாய் நீ இருக்க,
அதில் உருக நான் வேண்டும்.
இளவேனில் காலையில்
இதமாய் உன் மடியில் இளைப்பாற,
இதழ் புன்னகை ஒன்றை நீ சிந்த
இவ்வுலகம் மறந்து நான் பார்க்க,
இதுதானா காதல் என்று உன் மைவிழி மயங்க
இமைக்குள் அதை பாதுகாக்க,
நான் வேண்டும்.
நான் வேண்டி நீ தவமிருக்க,
நீ வேண்டி நான் பரிதவிக்க,
நாம் வேண்டுமென,
நமக்குள் சங்கமிக்க காதல் வேண்டும்
உயிரோட்டம் நில்லாது துடிக்க,
மீட்கும் கனலாய் நீ இருக்க,
அதில் உருக நான் வேண்டும்.
இளவேனில் காலையில்
இதமாய் உன் மடியில் இளைப்பாற,
இதழ் புன்னகை ஒன்றை நீ சிந்த
இவ்வுலகம் மறந்து நான் பார்க்க,
இதுதானா காதல் என்று உன் மைவிழி மயங்க
இமைக்குள் அதை பாதுகாக்க,
நான் வேண்டும்.
நான் வேண்டி நீ தவமிருக்க,
நீ வேண்டி நான் பரிதவிக்க,
நாம் வேண்டுமென,
நமக்குள் சங்கமிக்க காதல் வேண்டும்