"வேக வைத்த காய்களோடு
விரத சாப்பாடு சாப்பிட்டு
சம்பாதித்தான் ஒரு குடும்பத்தலைவன்
கொடுமை வாழ்க்கையிலிருந்து விடுபட"
"வருடமெல்லாம்
வெளிநாட்டில் அவன் உழைக்க
வாழ்வின் வண்ணம் அதை தொலைக்க
தொடர்ந்த கடன்களையெல்லாம்
அவன் தொலைத்துவிட்டு வருகையிலே
தான் பெற்ற மகனை
தோள் ஏந்த விளைகையிலே
விக்கித்து நின்றான் தன் மகனின் கேள்வியில்
நீ யார் என மகன் கேட்க
நிற்காமல் வடியும் கண்ணீர்
நிஜமதை சொன்னது
பணம் மட்டும் வாழ்க்கையல்ல என்று"
"சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
செல்லமாய் தான் கொஞ்சாதே
மணக்கும் வெளிநாட்டின் வாசனைதிரவியம் தான்
இழந்த வசந்தகாலத்தை
இனிமேல் மீட்டு தராதே"
"எதையோ தேடி
எதற்காவோ அலைந்து
என்ன சேர்த்துவிட்டாய்
உன் வாழ்வில்"
"வெளிநாட்டில்
லட்சத்தில் சம்பாதிக்க ஆசைப்படுபனே
உன் வாழ்வின் மிச்சத்தை
கொஞ்சம் நெஞ்சத்தில் நினைத்துப்பார்
மஞ்சத்தில் கூட மறந்து விடுவாய்
வேதனையான வெளிநாட்டு வாழ்க்கையதை"
விரத சாப்பாடு சாப்பிட்டு
சம்பாதித்தான் ஒரு குடும்பத்தலைவன்
கொடுமை வாழ்க்கையிலிருந்து விடுபட"
"வருடமெல்லாம்
வெளிநாட்டில் அவன் உழைக்க
வாழ்வின் வண்ணம் அதை தொலைக்க
தொடர்ந்த கடன்களையெல்லாம்
அவன் தொலைத்துவிட்டு வருகையிலே
தான் பெற்ற மகனை
தோள் ஏந்த விளைகையிலே
விக்கித்து நின்றான் தன் மகனின் கேள்வியில்
நீ யார் என மகன் கேட்க
நிற்காமல் வடியும் கண்ணீர்
நிஜமதை சொன்னது
பணம் மட்டும் வாழ்க்கையல்ல என்று"
"சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
செல்லமாய் தான் கொஞ்சாதே
மணக்கும் வெளிநாட்டின் வாசனைதிரவியம் தான்
இழந்த வசந்தகாலத்தை
இனிமேல் மீட்டு தராதே"
"எதையோ தேடி
எதற்காவோ அலைந்து
என்ன சேர்த்துவிட்டாய்
உன் வாழ்வில்"
"வெளிநாட்டில்
லட்சத்தில் சம்பாதிக்க ஆசைப்படுபனே
உன் வாழ்வின் மிச்சத்தை
கொஞ்சம் நெஞ்சத்தில் நினைத்துப்பார்
மஞ்சத்தில் கூட மறந்து விடுவாய்
வேதனையான வெளிநாட்டு வாழ்க்கையதை"