Novel-reader
Well-Known Member
கதைனாலே அதுல ஹீரோ தான் உயர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்படணும் என்று ஒரு பிடித்தம் /கொள்கை உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் அதற்கு என்னிடம் எந்த எதிர்வாதமும் இல்லை.அப்படி என்ன துப்பில்லாமல் செஞ்சுட்டான். அவன் காதலுக்கு பாட்டி கிட்ட சம்மதம் கேட்டான். அவங்க முடியாது என்று சொன்னாலும் அவங்க சம்மதத்துக்காக போராடுனான் . ஆத்ம நாதன் கிட்டயும் போய் பேசினான். இரண்டு பக்க குடும்பத்தையும் சம்மதிக்க வைக்க முயற்சி செய்தான். பாட்டி அவனோட கனவான அப்பாவோட கம்பெனிய தர மாட்டேன் என்று மிரட்டின போதும் அந்த கம்பெனிய தேவா கிட்ட கொடுத்த போதும் எங்க காதலுக்கு உங்கள் சம்மதம் தான் வேண்டும் என்று நின்னான். ஆனால் இந்த கேப்ல அந்த கேடு கெட்ட நாதன் அந்த பொண்ணை பேசியே கொன்னுட்டான் .
அவன் வெளிநாட்டில் இருக்கும் போதே ஷேஷாவோட அப்பா கம்பெனிய தனக்கு வேண்டும் என்று கேட்டவள் தான். இந்த காதலை வச்சு பாட்டி பேரன் நடுவில் இருந்த பிரச்சினைய பயன் படுத்தி அந்த கம்பெனிய சொந்தம் ஆக்கிகிட்டா ...
பாட்டி நஷ்டத்தில் போற அந்த கம்பெனிய திறமையா எடுத்து நடத்தி ஜெயிச்சு காட்டு என்று ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ஷேஷாவுக்கு .
காதல் விஷயத்தில் எதிர்க்க எதிர்க்க தான் பிடிவாதம் கூடும். அவனோட காதல் தப்பா இருந்தால் அதை அவனுக்கு சாதகமான வழியிலே போய் சரி செஞ்சு இருக்கலாம்.
கலை இத்தனை வருஷம் தன் மகனுக்காக எதையும் செய்யல இப்போ தான் முதல் முறையா மகனுக்காக தேவா கிட்ட பேசுனாங்க அதையும் தேவா ஒன்னும் இல்லாமல் ஆக்கிட்டா இனி அந்த அம்மா மகனுக்காக ஒரு வார்த்தை பேசாது..
அம்மாவ பத்தி ஷேஷாவுக்கு எதுவும் தெரியாத மாதிரி காட்டுறாங்க.. ஆனால் அந்த அம்மாவுக்கு மகனை பத்தி என்ன தெரியும். சின்ன வயசில் இருந்தே அவனுக்காக என்ன செஞ்சாங்க.. பாட்டி தேவா என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் தலை ஆட்ட சொன்னாங்க.
இனியும் கதை தேவாவுக்கு சாதகமா தான் போகும். தேவாவுக்கு மட்டும் தான் திறமை இருக்க மாதிரி அவளால் மட்டும் தான் இந்த கம்பெனிய தூக்கி நிறுத்த முடியும் என்றும் ஷேஷாவால ஒன்னும் செய்ய முடியாமல் கடைசியா தேவா வந்து காப்பாத்துற மாதிரி போகும்.
ஆனால் ஆரம்பம் முதல் இறுதி வரை வரும் கதையின் நடையை பொருத்து கதாபாத்திரங்களின் செயல்பாடுகளையும் அதில் காட்சிப்படுத்தப்படும் நிலைதன்மையையும் தான் சரி தவறென்று விமர்சிக்கலாம்.
Coming to the present story scenario, ஒருத்தன் காதல்ன்னு வந்தாலே குடும்பத்தில் உள்ளவங்க அதைக் கொண்டாடணும்ன்னு அவசியமில்லை. அவங்க NO சொல்லவதற்கான காரணத்தை உடனே வெளிய சொல்ல முடியாததால அதுக்கு வலுவில்லை என்று சொல்ல முடியாது. போகப்போக தெரிய வரும் போது தான் அவனோட செல்ல அப்பாவே உயிரோடு இருந்தாலும் ஒத்துக்கொண்டு இருப்பாரான்னு தெரிய வரும்.
அடுத்து இவன் போராடி புரிய வைக்கற வரை அமுருதாவிற்கு காத்திருக்க முடியாமல் போனதற்கு யாரு காரணம்? பிரகாவா?
Living together style-ல கிட்டத்திட்ட வாழ்ந்தவனுக்கு பாட்டியோட சம்மதம் தான் ஒரு கேடு. தயவு செய்து இதை எல்லாம் காதல் என்று சொல்லி காதலை கொச்சைப்படுத்தாதீங்க. ஏன்னா அப்படிப்பட்ட காதலுடன் கூடிய காமம் காதலி உடனேயே மறித்து போய் இருக்கும். இன்னொரு உடலில் காதலியை தேடத் தூண்டாது. [ பிற பெண்களுடன் அவன் இருப்பதைப் பற்றி முழுமையா தெரியாததால நான் குறிப்பிடுவது அவன் தேவாவிடம் அம்மு என்று உளறிக்கொண்டு நெருங்குவதைத் தான் ]
நீங்க சொன்னது ஒன்னு ரொம்ப சரி தான். பிள்ளைக்காக கலை எதுவுமே செய்யலை தான். ஆனால் பாருங்க இருந்திருந்து அவனை மாமியார் பேச்சை மீறி foreign அனுப்புனதுக்கு இன்னைக்கும் அனுபவிக்கறாங்க. இவனுக்கெல்லாம் அம்மாவா இருப்பதே பெரிய சாதனை- வாழ்வது சோதனை-வேதனை .
இந்த கேடு கெட்டவன் வருந்தி திருந்தி வரும் பொழுது இவனோட வாழணும். அது தானே தேவா கிட்ட எதிர்பார்க்கப்படும். அந்த அவல நிலைக்கு அந்த குடும்பமோ இல்லை சமூகமோ அவளுக்கு எந்த ஒரு நஷ்ட ஈட்டையும் தர இயலாது. So இந்த கம்பெனி எல்லாம் வெறும் தூசு. அதையும் இப்ப திருப்பி கொடுத்துட்டா.
இவன் அதை நல்லா கொண்டுவந்து தான் தன்னை நிரூபிக்கணும் என்று இல்லை. வாழ்க்கையில் காதலைத் தாண்டி குடும்பத்திற்கான கடமையை செய்ய நினைத்து சுய நினைவோடு, தொழிலின் நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட்டாலே போதும். இவனுக்கான மரியாதை உயரும்.
இவனை மாதிரி நடிப்பு கலையில் தேவசேனாவையும், அவளை மாதிரி தொழில் நிர்வாகத்தில் இவனையும் compare செய்து இவன் தொழிலில் ஜெயித்தால் தான் ஹீரோ-என்று நான் சொல்லமாட்டேன்.
In my POV, a character's values and valour only defines him/her and elevates him/her as a protagonist.
சேனா எப்ப networks company-ஐ கேட்டா பாட்டிகிட்ட.
Context-Epi number please.
Last edited: