ஷேஷா மேல கோவம் இருந்துச்சு இந்த எபி படிச்சதும் போயிடுச்சு...
அந்த நிறுவனம் ஷேஷாவோட அப்பா அவனுக்காக உருவாக்குனது அதை தூக்கி தேவாவுக்கு கொடுத்தது தப்பு... தேவாவும் அந்த நிறுவன பொறுப்பு தனக்கு வேணும் என்று கேட்டது தப்பு..
அவன் காதலிச்ச பொண்ணு தப்பானவளா இருந்தால் அதை அவனுக்கு புரிய வச்சிருக்கணும்... ஒரு இரண்டு மூன்று வருஷம் உன் அப்பா தொழிலை எடுத்து நடத்தி சக்ஸஸ் பண்ணி காட்டு உன் காதலுக்கு சம்மதிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது .. அவனும் இந்த இடைப்பட்ட காலத்தில் அமிர்தா குடும்பத்தோட பழகி இருந்தால் அவங்க யோக்கியதை நேரில் அவனுக்கே புரிஞ்சிருக்கும்.
காதலிக்கிற எல்லோரும் அவங்க காதலிக்கிறவங்களை பத்தி தப்பா சொன்னால் நம்ப மாட்டாங்க. இப்படி மிரட்டி எல்லாம் நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது .அவங்களே உணர்ந்தால் தான் உண்டு . அதுக்கான வாய்ப்பை பாட்டி கொடுக்கவே இல்லை.
சின்ன வயசில் இருந்தே பாட்டி அவனோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காமல் அவங்க இஷ்டத்துக்கு வளைச்சதால் தான் காதல் விஷயத்திலும் பாட்டி தன்னோட விருப்பத்தை மதிக்கல என்று நினைச்சுட்டான்.
அவன் வெளிநாட்டில் இருக்கும் போதே தேவா இந்த நிறுவனத்தை கேட்டு இருக்கா ஏன் பாட்டி சொல்ல வேண்டிய தான அது ஷேஷா அப்பாவுடையது உனக்கு நீ தனியா உருவாக்கிக்கோ என்று சொல்ல வேண்டிய தானே. ஷேஷா இவங்க பேச்சுக்கு தலை ஆட்டல என்றதும் அவங்களுக்கு ஜால்ரா தட்டுற பேத்திக்கு தூக்கி கொடுத்தாச்சு..
தேவாவுக்கு அவ அம்மாவோட பங்குல அவளுக்கு என்று ஒரு தொழிலை உருவாக்கி கொடுத்து இருக்கலாம்..
தேவா பாட்டி இரண்டு பேரும் சேர்ந்து சொத்தை காப்பாத்துறேன் என்று ஷேஷாவ நாசம் பண்ணிட்டிங்க. அது ஷேஷாவ காப்பாத்த என்று சொன்னாலும் போன வழி தப்பு தான்.
அவனோட கனவுகளை கொஞ்சம் புரிஞ்சிட்டு பாட்டி சரியா வழி நடத்தி இருந்தால் இந்த அளவுக்கு போயிருக்காது. அதை விட்டுட்டு எனக்கு அடங்கி தான் இருக்கணும் என்று திணிச்சது தவறு தான்.
கலை உங்க மருமகளை தாங்க நிறைய பேர் இருக்காங்க. உங்க மகனுக்கு தான் யாரும் இல்லை. சின்ன வயசில் இருந்தே அவன் கூட ஒட்டுதல் இல்லாமல் இருந்துட்டிங்க இனியாவது அவனை கவனிங்க.
காதலிச்சது மட்டும் தான் அவன் தப்பு. அதையும் அவனுக்கு புரிய வச்சிருக்கலாம். அதை விட்டுட்டு நாலு வருஷம் குடி பொண்ணுங்க கூட சுத்துறது என்று அவன் வாழ்க்கைய பாழாக்கியாச்சு.அவன் சொத்தை பிடிங்கி வச்சி கிட்டு தான் இவ்வளவு சீன் போட்டாளா