Priyamehan
Well-Known Member
அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் வீட்டுக்கு எப்போ வர என்ற கேள்வியிலையே வந்து நிற்கவும்...வேந்தனை முறைத்தவள்..
"இப்போதைக்கு அந்த எண்ணமில்ல.." என்றாள்.
அதில் வேந்தன் என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ள... அவன் முகம் இறுகிப்போனது.
"என்ன எண்ணமில்ல..? ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு"
"இல்லைனா"
"காலை உடைச்சி தூக்கிட்டு போக வேண்டியிருக்கும்" என்று அலுங்காமல் சொன்னவன் வெளியேப் பார்க்க..
அதற்குள் மற்றவர்களும் வந்துவிட்டதால் அருவியில் எதுவும் பேச முடியாமல் போனது.
தேவா வேகமாக வந்து வேந்தனின் அருகில் அமர்ந்து அவனது கையை பிடித்துக்கொண்டாள்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்த அருவி, எழுந்து சென்று கார்த்திக் இனியனுடன் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
"என்ன அரு எங்க அண்ணா என்ன சொல்றார்?" என்று விசமமாக கேட்டான் கார்த்திக்.
"ஏண்டா திங்கறப்பக் கூட நிம்மதியா இருக்க விடமாட்டியா....?இதுக்கு தான் அவன் வந்தா நான் வரலைன்னு சொன்னேன் இப்போ நீங்க ரெண்டுப் பேரும் என்னைய இந்த காருக்கு தள்ளிட்டு கவலை இல்லாம வரீங்க, ஒழுங்கா ஏதாவது பண்ணி அந்தக் காருக்கு கூட்டிட்டு போங்க, இல்லையா நீங்க இந்த காருக்கு வாங்க, அவனோட தனியா எவனாவது போவாங்களா? சரியான ரோபோ... அயன் பண்ணி வெச்ச சட்டை மாறி வெரப்பா வரான் ஒரு பாட்டு போட மாட்டிங்கிறான் ஜாலியா பேச மாட்டிங்கிறான், கடவுளே இவனோட என்னைய கோர்த்து விட்டு வேடிக்கைப் பார்க்கறீங்களே" என்று படபடவென்று பட்டாசாக வெடித்துத் தள்ள..
"தெரியாம கேட்டுட்டேன் விட்டுடு தாயி,என்னால அண்ணாகிட்ட பேச முடியாது " என்று கை எடுத்து கும்பிட்டு விட்டான் கார்த்திக்.
"சரியான அண்ணா சொம்புங்க" என்று அதற்கும் திட்ட
எங்களுக்கு சூடு சுரணையே கிடையாது என்பது போல அருவியின் திட்டை காதில் வாங்காமல் ராமசேரி இட்லியை உண்டுக் கொண்டிருந்தனர் இருவரும்.
சாப்பிட்டு முடித்துவிட்டு அவரவர் காரில் ஏற அருவி இனியனை ஏக்கமாக பார்த்தாள்.
"நீயாவது இங்க வாடா" என்று சைகை செய்ய
"ஏன் நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா?" என்று ஓடிவிட்டான் இனியன்.. இந்த முறை கார்த்திக் தான் காரை ஓட்டினான்.
முன்னால் செல்லும் காரை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவளை "ஏற ஐடியா இருக்கா இல்லையா?" என்று வேந்தன் கேக்க
"நீங்க வேணும்னு தானே இப்படி பண்றீங்க...நான் அவங்க கூட போனா உங்களுக்கு என்ன கஷ்டமா இருக்கு?" என்றாள் அழுது விடுபவள் போல்
"என்ன வேணும்னு பண்றேன்.. நான்தான் எதுமே பண்ணலையே" என்று வேந்தன் உள்ளர்த்ததுடன் சொல்ல..
"நான் சந்தோசமா இருந்தாலே இவனுக்கு புடிக்காது மூக்கு வேர்த்த மாதிரி ஏதாவது பண்ணிடுவான்" என்று புலம்பியப்படியே காரில் ஏறினாள்.
கார் கிளம்ப கேரளாவின் அழகு அருவியை உள்ளே இழுத்துக் கொண்டது
பிரம்மாண்டமான மலைகள் மற்றும் அழகிய நீர்நிலைகளின் கரங்களில் இருக்கிறது சிறந்த கேரள பூமி...
சேரர்கள் ஆண்ட பூமி சேரளம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மறுவி கேரளம் என்றாகிவிட்டதாக கூறுகின்றனர், இயற்கை அன்னையின் ஆசிர்வாதம் பெற்ற கேரளத்தில் பசுமையை தவிர மற்ற எதுவுமே கண்ணுக்கு அகப்படவில்லை எங்கு திரும்பினாலும் மலைகளும் காடுகளுமாகவே காட்சியளித்தது, என்றுமே மன நிறைவையும் அமைதியையும் கொடுக்கும் இயற்கை, அருவியை மட்டும் விட்டு விடுமா என்ன... அமைதியாக வந்தவள் பசுமை தாயின் அழகில் சொக்கி அலைபேசியில் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டாள்...
அவளின் ஆசையை நிறைவேற்ற அவனையும் அறியாமல் மெதுவாக வண்டியை ஓட்டி அருவிக்கு ஒத்துழைப்பைக் கொடுத்தான் வேந்தன்.
"எவ்வளவு அழகா இருக்கு... இந்நேரம் இனியன் இருந்தா போட்டோ எடுத்திருப்பான், கார்த்திக்கா இருந்தா காரை நிறுத்திருப்பான்" என்று அவர்கள் புராணத்தையேப் பாடிக்கொண்டு வந்தாள்.
"உனக்கு என்னதாண்டி பிரச்சனை?"
"எனக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு தான் எல்லாமே பிரச்சனை..."
"இப்போ என்ன பண்ணனும்?"
"வெளியே நின்னு போட்டோ எடுக்கணும்" என்றதும் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்...
பசுமையான கொடிப் போர்த்தப்பட்ட மரத்தில் சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கின...
"வாவ்...வியூ செமையா இருக்கு, என்னைய போட்டோ எடுங்க" என்று அலைபேசியை வேந்தன் கையில் திணித்து விட்டு மலைச் சரிவில் ஏறினாள்.
"ஹேய் பார்த்துடி"
"ம்ம் அதுலாம் பார்த்து தான் போவோம் நாங்களா வடிவேல் சார் மாதிரி விழுந்தாலும் சேதாரம் நிலத்துக்கு தான்" என்றப்படியே அந்த பூக் கூட்டத்தில் தானும் ஒரு பூவாக நின்றாள்.
எவ்வளவு சேட்டை செய்தாலும் அதை முகத்தில் காட்டாமல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ்க் கொடுக்க... வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து தள்ளினான் வேந்தன்.
வேந்தனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது...
அருவியின் பின்னால் கிர் கிர் என்று சத்தம் கேக்கவும் ...என்ன என்று திரும்பிப் பார்த்தவள்
"ஆஆஆஆ" என்ற அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து வேந்தனை அணைத்துக் கொண்டாள்
அருவியின் அலறலில் என்ன என்று எட்டிப் பார்த்த வேந்தனால் சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை மடித்துக் கடித்து சமாளித்தவன்
குரங்கு குட்டி தலையை நீட்டி எட்டிப் பார்க்கவும்
"ஏய் அது உன் தம்பியோ தங்கச்சியோ தானே எதுக்கு அதைப் பார்த்து பயப்படற...?" என்று நக்கல் செய்ய குரங்கை திரும்பிப் பார்த்தவள் மீண்டும் கத்தியவாறு அவன் மார்பில் முகம் புதைக்க அருவியை வேகமாக விலக்கி விட்டு "அவங்க ரொம்ப தூரம் போயிருப்பாங்க வா" என்று காருக்கு சென்று விட்டான்.
பயத்தில் இருந்தவளுக்கு வேந்தனை அணைத்ததெல்லாம் நியாபகமே இல்லை...
கார் கிளம்ப வேந்தனின் முகத்தில் இருந்த மந்தகாசப் புன்னகையை பார்த்தவள்... முகத்தை ஜன்னல் வழியாக திருப்பிக் கொண்டாள்.
கார்த்திக்கின் கையில் கார் கொச்சினை நோக்கி பறந்துக் கொண்டிருக்க அவனோ புலம்பியவாரு வந்தான்.
"அரு மட்டும் இந்த கார்ல இருந்திருந்தா இந்நேரம் எவ்வளவு ஜாலியா என்ஜோய் பண்ணிட்டு வந்துருப்போம் ரெண்டு தூங்கிற மாட்டை உள்ளே தூக்கி போட்டுட்டு வந்து ஏறுனதுல இருந்து தூங்கிட்டே வருதுங்க" என்று இனியனிடம் சொல்ல
அவனோ "தூங்கிட்டாவது வராங்களேன்னு சந்தோசப்படு எந்திரிச்சா சமாளிக்க முடியாது.." என்றவன் "இவ்வளவு புலம்பறவன் அண்ணாகிட்ட கேக்க வேண்டியது தானே" என்க
"எதுக்கு திரும்பி அப்படியே ஊரைப் பார்த்து கிளம்பவா.. அவர் எந்த நிமிஷம் எப்படி இருப்பார்னு சொல்லவே முடியாது" என்றவன் "இந்த தேவா நல்லா தானே இருந்தா இனி திடீர்னு ஏன் அருவிக்கு எதிரா திரும்பிட்டா எப்போ பாரு அருவியை ஏதாவது சொல்லிட்டே இருக்கா" என்று மெதுவாக இனியனிடம் கேக்க
அதற்கான பதிலை நிரு சொல்லவும் இருவருமே வாயாடைத்து தான் போனார்கள்..
கார் கொச்சின் ஒண்றலாவில் நின்றுது.... கார்த்திக் கார் சென்று பத்து நிமிடத்தில் வேந்தனின் காரும் வந்து சேர... அருவி வேகமாக இறங்கி இனியன், கார்த்திக்குடன் இணைந்துக் கொண்டாள்
ஒண்றலா என்பது நம்ப ஊரில் உள்ள ப்ளாக் தெண்டரைப் போல் இரண்டு மடங்கு பெரிய சுற்றுலாத்தளம் கொச்சின் சென்றால் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய ஒரு இடம்.
நுழைவு வாயிலில் பெரிய கொரில்லா குரங்கு பொம்மையுடன் ஒரு குகை தான் அனைவரையும் வரவேற்றது..
அதனுள் நுழைந்து உள்ளே செல்ல டிக்கெட் கவுண்டர்கள் வரிசையாக இருந்தன..
இவர்கள் முன்பே இணையத்தில் முன்பதிவு செய்து வந்ததால் அதனுடைய ரசீதை மட்டும் சரிப் பார்த்து உள்ளே அனுப்பினர்.
கார்த்திக், இனியன், அருவி மூவரும் தனியாக செல்லப் போவதாக சொல்ல...அருவி நிருவையும் உடன் அழைத்தாள்.
"எல்லோரும் சேர்ந்தே போவோம்... அது என்ன ரெண்டா பிரிஞ்சி போறது?" என்று வேந்தன் அருவி சொன்னதற்கு மறுத்து சொல்லிக் கொண்டிருக்க
"நாங்க தான் முதல வரோம்னு சொன்னோம் எங்க கூட போட்டி போட்டுட்டு நீங்க கிளம்புனா அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்... நீங்க தனியா போங்க, நாங்க தனியா போறோம்.. இல்ல எல்லோரும் ஒன்னா தான் போகணும்னா நீங்க மட்டும் போங்க நான் வரல" என்று அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து விட்டாள் அருவி.
வேந்தனுடன் சென்றால் எங்கு அதற்கு போகாதே இதற்கு போகாதே அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஆயிரம் ரூல்ஸ் பேசி நல்ல மூடை கெடுத்து விடுவானோ என்று பயந்து தான் அவனுடன் செல்ல மாட்டேன் என்றாள்.
"சரி நீங்க வாங்க" என்று வேந்தன் அருவியை முறைத்துவிட்டு தேவாவின் கையை பிடித்து அழைத்துச் சென்றான்.
இருவரையும் பார்த்துவிட்டு அருவி முகத்தைத் திருப்பிக் கொள்ள
"ஹப்பா இப்போவாது பிரீ கிடைச்சதே" என்று அருவின் அருகில் அமர்ந்தான் இனியன்.
"நீங்களா....? எதவாது சொல்லிடப் போறேன் அவரை எதிர்த்து ஒன்னுக் கூடவா கேக்க மாட்டீங்க... அந்த அளவுக்கு அண்ணா மேல பயமா ச்சை உங்களை நினைச்சாலே கோவம் தான் வருது..." என்று அருவி முனக...
"அது பயம் இல்ல அரு வேந்தன் மேல அவங்க வெச்சிருக்க மரியாதை"என்று நிரு சொல்லவும்
"பெரிய மரியாதை பொல்லாத மரியாதை..."
"சரி விடு உனக்கு வேந்தனை குறை சொல்லலைனா ஆகாதே ....வா ரைடு போலாம்" என்று அழைக்கவும்
"நீ அவருக்கு சொம்பு தூக்கு நிரு" என்றவள்... "முதல் ரைடே தாரு மாறா இருக்கனும் எதுக்கு போலாம்" என்றாள் ஆவலாக..
"ட்ரெயின் ரைடு போவோமா?"
"அதுல முதல் சீட் கிடைக்கனும் அப்போதான் வியூ சூப்பரா இருக்கும் ஒரு திரில் இருக்கும்" என்றாள்.
"சரி" என்று ட்ரெயின் ரைடுக்கு போக... அங்கு அவர்களுக்கு முன் வேந்தன் குரூப் இருந்தது...
அவர்களைப் பார்த்ததும் "வேண்டாம் வேற எதுக்காவது போலாம்" என்றாள்.
"அவங்க இதுல வரதுல உனக்கு என்ன பிரச்சனை? நீ சொன்ன மாதிரி முதலையே வேந்தன் கிட்ட ஒரு சீட் இருக்குல்ல அதுல உக்காரு நாங்க பின்னாடி உக்கார்ந்துகிறோம்" என்று நிரு சொல்லஉன்
"நீ போ அவரோட, நாங்க வேற ரைடு போறோம்" என்று குண்டூசிப் போல் குச்சி முனையில் வட்டமாக இருக்க அது பெண்டுலம் போல் கீழிருந்து மேல் வரை சென்று வந்தது... பார்க்கும் போதே எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பை கொடுக்கவும்
நிரு வேந்தனுடன் சென்று விட்டான் கார்த்திக் இனியனுடன் அருவி சென்று அந்த ரைடை கூச்சல் சத்தத்துடன் அனுபவித்தாள்.
"இப்போதைக்கு அந்த எண்ணமில்ல.." என்றாள்.
அதில் வேந்தன் என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ள... அவன் முகம் இறுகிப்போனது.
"என்ன எண்ணமில்ல..? ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு"
"இல்லைனா"
"காலை உடைச்சி தூக்கிட்டு போக வேண்டியிருக்கும்" என்று அலுங்காமல் சொன்னவன் வெளியேப் பார்க்க..
அதற்குள் மற்றவர்களும் வந்துவிட்டதால் அருவியில் எதுவும் பேச முடியாமல் போனது.
தேவா வேகமாக வந்து வேந்தனின் அருகில் அமர்ந்து அவனது கையை பிடித்துக்கொண்டாள்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்த அருவி, எழுந்து சென்று கார்த்திக் இனியனுடன் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
"என்ன அரு எங்க அண்ணா என்ன சொல்றார்?" என்று விசமமாக கேட்டான் கார்த்திக்.
"ஏண்டா திங்கறப்பக் கூட நிம்மதியா இருக்க விடமாட்டியா....?இதுக்கு தான் அவன் வந்தா நான் வரலைன்னு சொன்னேன் இப்போ நீங்க ரெண்டுப் பேரும் என்னைய இந்த காருக்கு தள்ளிட்டு கவலை இல்லாம வரீங்க, ஒழுங்கா ஏதாவது பண்ணி அந்தக் காருக்கு கூட்டிட்டு போங்க, இல்லையா நீங்க இந்த காருக்கு வாங்க, அவனோட தனியா எவனாவது போவாங்களா? சரியான ரோபோ... அயன் பண்ணி வெச்ச சட்டை மாறி வெரப்பா வரான் ஒரு பாட்டு போட மாட்டிங்கிறான் ஜாலியா பேச மாட்டிங்கிறான், கடவுளே இவனோட என்னைய கோர்த்து விட்டு வேடிக்கைப் பார்க்கறீங்களே" என்று படபடவென்று பட்டாசாக வெடித்துத் தள்ள..
"தெரியாம கேட்டுட்டேன் விட்டுடு தாயி,என்னால அண்ணாகிட்ட பேச முடியாது " என்று கை எடுத்து கும்பிட்டு விட்டான் கார்த்திக்.
"சரியான அண்ணா சொம்புங்க" என்று அதற்கும் திட்ட
எங்களுக்கு சூடு சுரணையே கிடையாது என்பது போல அருவியின் திட்டை காதில் வாங்காமல் ராமசேரி இட்லியை உண்டுக் கொண்டிருந்தனர் இருவரும்.
சாப்பிட்டு முடித்துவிட்டு அவரவர் காரில் ஏற அருவி இனியனை ஏக்கமாக பார்த்தாள்.
"நீயாவது இங்க வாடா" என்று சைகை செய்ய
"ஏன் நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா?" என்று ஓடிவிட்டான் இனியன்.. இந்த முறை கார்த்திக் தான் காரை ஓட்டினான்.
முன்னால் செல்லும் காரை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவளை "ஏற ஐடியா இருக்கா இல்லையா?" என்று வேந்தன் கேக்க
"நீங்க வேணும்னு தானே இப்படி பண்றீங்க...நான் அவங்க கூட போனா உங்களுக்கு என்ன கஷ்டமா இருக்கு?" என்றாள் அழுது விடுபவள் போல்
"என்ன வேணும்னு பண்றேன்.. நான்தான் எதுமே பண்ணலையே" என்று வேந்தன் உள்ளர்த்ததுடன் சொல்ல..
"நான் சந்தோசமா இருந்தாலே இவனுக்கு புடிக்காது மூக்கு வேர்த்த மாதிரி ஏதாவது பண்ணிடுவான்" என்று புலம்பியப்படியே காரில் ஏறினாள்.
கார் கிளம்ப கேரளாவின் அழகு அருவியை உள்ளே இழுத்துக் கொண்டது
பிரம்மாண்டமான மலைகள் மற்றும் அழகிய நீர்நிலைகளின் கரங்களில் இருக்கிறது சிறந்த கேரள பூமி...
சேரர்கள் ஆண்ட பூமி சேரளம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மறுவி கேரளம் என்றாகிவிட்டதாக கூறுகின்றனர், இயற்கை அன்னையின் ஆசிர்வாதம் பெற்ற கேரளத்தில் பசுமையை தவிர மற்ற எதுவுமே கண்ணுக்கு அகப்படவில்லை எங்கு திரும்பினாலும் மலைகளும் காடுகளுமாகவே காட்சியளித்தது, என்றுமே மன நிறைவையும் அமைதியையும் கொடுக்கும் இயற்கை, அருவியை மட்டும் விட்டு விடுமா என்ன... அமைதியாக வந்தவள் பசுமை தாயின் அழகில் சொக்கி அலைபேசியில் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டாள்...
அவளின் ஆசையை நிறைவேற்ற அவனையும் அறியாமல் மெதுவாக வண்டியை ஓட்டி அருவிக்கு ஒத்துழைப்பைக் கொடுத்தான் வேந்தன்.
"எவ்வளவு அழகா இருக்கு... இந்நேரம் இனியன் இருந்தா போட்டோ எடுத்திருப்பான், கார்த்திக்கா இருந்தா காரை நிறுத்திருப்பான்" என்று அவர்கள் புராணத்தையேப் பாடிக்கொண்டு வந்தாள்.
"உனக்கு என்னதாண்டி பிரச்சனை?"
"எனக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு தான் எல்லாமே பிரச்சனை..."
"இப்போ என்ன பண்ணனும்?"
"வெளியே நின்னு போட்டோ எடுக்கணும்" என்றதும் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்...
பசுமையான கொடிப் போர்த்தப்பட்ட மரத்தில் சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கின...
"வாவ்...வியூ செமையா இருக்கு, என்னைய போட்டோ எடுங்க" என்று அலைபேசியை வேந்தன் கையில் திணித்து விட்டு மலைச் சரிவில் ஏறினாள்.
"ஹேய் பார்த்துடி"
"ம்ம் அதுலாம் பார்த்து தான் போவோம் நாங்களா வடிவேல் சார் மாதிரி விழுந்தாலும் சேதாரம் நிலத்துக்கு தான்" என்றப்படியே அந்த பூக் கூட்டத்தில் தானும் ஒரு பூவாக நின்றாள்.
எவ்வளவு சேட்டை செய்தாலும் அதை முகத்தில் காட்டாமல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ்க் கொடுக்க... வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து தள்ளினான் வேந்தன்.
வேந்தனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது...
அருவியின் பின்னால் கிர் கிர் என்று சத்தம் கேக்கவும் ...என்ன என்று திரும்பிப் பார்த்தவள்
"ஆஆஆஆ" என்ற அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து வேந்தனை அணைத்துக் கொண்டாள்
அருவியின் அலறலில் என்ன என்று எட்டிப் பார்த்த வேந்தனால் சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை மடித்துக் கடித்து சமாளித்தவன்
குரங்கு குட்டி தலையை நீட்டி எட்டிப் பார்க்கவும்
"ஏய் அது உன் தம்பியோ தங்கச்சியோ தானே எதுக்கு அதைப் பார்த்து பயப்படற...?" என்று நக்கல் செய்ய குரங்கை திரும்பிப் பார்த்தவள் மீண்டும் கத்தியவாறு அவன் மார்பில் முகம் புதைக்க அருவியை வேகமாக விலக்கி விட்டு "அவங்க ரொம்ப தூரம் போயிருப்பாங்க வா" என்று காருக்கு சென்று விட்டான்.
பயத்தில் இருந்தவளுக்கு வேந்தனை அணைத்ததெல்லாம் நியாபகமே இல்லை...
கார் கிளம்ப வேந்தனின் முகத்தில் இருந்த மந்தகாசப் புன்னகையை பார்த்தவள்... முகத்தை ஜன்னல் வழியாக திருப்பிக் கொண்டாள்.
கார்த்திக்கின் கையில் கார் கொச்சினை நோக்கி பறந்துக் கொண்டிருக்க அவனோ புலம்பியவாரு வந்தான்.
"அரு மட்டும் இந்த கார்ல இருந்திருந்தா இந்நேரம் எவ்வளவு ஜாலியா என்ஜோய் பண்ணிட்டு வந்துருப்போம் ரெண்டு தூங்கிற மாட்டை உள்ளே தூக்கி போட்டுட்டு வந்து ஏறுனதுல இருந்து தூங்கிட்டே வருதுங்க" என்று இனியனிடம் சொல்ல
அவனோ "தூங்கிட்டாவது வராங்களேன்னு சந்தோசப்படு எந்திரிச்சா சமாளிக்க முடியாது.." என்றவன் "இவ்வளவு புலம்பறவன் அண்ணாகிட்ட கேக்க வேண்டியது தானே" என்க
"எதுக்கு திரும்பி அப்படியே ஊரைப் பார்த்து கிளம்பவா.. அவர் எந்த நிமிஷம் எப்படி இருப்பார்னு சொல்லவே முடியாது" என்றவன் "இந்த தேவா நல்லா தானே இருந்தா இனி திடீர்னு ஏன் அருவிக்கு எதிரா திரும்பிட்டா எப்போ பாரு அருவியை ஏதாவது சொல்லிட்டே இருக்கா" என்று மெதுவாக இனியனிடம் கேக்க
அதற்கான பதிலை நிரு சொல்லவும் இருவருமே வாயாடைத்து தான் போனார்கள்..
கார் கொச்சின் ஒண்றலாவில் நின்றுது.... கார்த்திக் கார் சென்று பத்து நிமிடத்தில் வேந்தனின் காரும் வந்து சேர... அருவி வேகமாக இறங்கி இனியன், கார்த்திக்குடன் இணைந்துக் கொண்டாள்
ஒண்றலா என்பது நம்ப ஊரில் உள்ள ப்ளாக் தெண்டரைப் போல் இரண்டு மடங்கு பெரிய சுற்றுலாத்தளம் கொச்சின் சென்றால் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய ஒரு இடம்.
நுழைவு வாயிலில் பெரிய கொரில்லா குரங்கு பொம்மையுடன் ஒரு குகை தான் அனைவரையும் வரவேற்றது..
அதனுள் நுழைந்து உள்ளே செல்ல டிக்கெட் கவுண்டர்கள் வரிசையாக இருந்தன..
இவர்கள் முன்பே இணையத்தில் முன்பதிவு செய்து வந்ததால் அதனுடைய ரசீதை மட்டும் சரிப் பார்த்து உள்ளே அனுப்பினர்.
கார்த்திக், இனியன், அருவி மூவரும் தனியாக செல்லப் போவதாக சொல்ல...அருவி நிருவையும் உடன் அழைத்தாள்.
"எல்லோரும் சேர்ந்தே போவோம்... அது என்ன ரெண்டா பிரிஞ்சி போறது?" என்று வேந்தன் அருவி சொன்னதற்கு மறுத்து சொல்லிக் கொண்டிருக்க
"நாங்க தான் முதல வரோம்னு சொன்னோம் எங்க கூட போட்டி போட்டுட்டு நீங்க கிளம்புனா அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்... நீங்க தனியா போங்க, நாங்க தனியா போறோம்.. இல்ல எல்லோரும் ஒன்னா தான் போகணும்னா நீங்க மட்டும் போங்க நான் வரல" என்று அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து விட்டாள் அருவி.
வேந்தனுடன் சென்றால் எங்கு அதற்கு போகாதே இதற்கு போகாதே அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஆயிரம் ரூல்ஸ் பேசி நல்ல மூடை கெடுத்து விடுவானோ என்று பயந்து தான் அவனுடன் செல்ல மாட்டேன் என்றாள்.
"சரி நீங்க வாங்க" என்று வேந்தன் அருவியை முறைத்துவிட்டு தேவாவின் கையை பிடித்து அழைத்துச் சென்றான்.
இருவரையும் பார்த்துவிட்டு அருவி முகத்தைத் திருப்பிக் கொள்ள
"ஹப்பா இப்போவாது பிரீ கிடைச்சதே" என்று அருவின் அருகில் அமர்ந்தான் இனியன்.
"நீங்களா....? எதவாது சொல்லிடப் போறேன் அவரை எதிர்த்து ஒன்னுக் கூடவா கேக்க மாட்டீங்க... அந்த அளவுக்கு அண்ணா மேல பயமா ச்சை உங்களை நினைச்சாலே கோவம் தான் வருது..." என்று அருவி முனக...
"அது பயம் இல்ல அரு வேந்தன் மேல அவங்க வெச்சிருக்க மரியாதை"என்று நிரு சொல்லவும்
"பெரிய மரியாதை பொல்லாத மரியாதை..."
"சரி விடு உனக்கு வேந்தனை குறை சொல்லலைனா ஆகாதே ....வா ரைடு போலாம்" என்று அழைக்கவும்
"நீ அவருக்கு சொம்பு தூக்கு நிரு" என்றவள்... "முதல் ரைடே தாரு மாறா இருக்கனும் எதுக்கு போலாம்" என்றாள் ஆவலாக..
"ட்ரெயின் ரைடு போவோமா?"
"அதுல முதல் சீட் கிடைக்கனும் அப்போதான் வியூ சூப்பரா இருக்கும் ஒரு திரில் இருக்கும்" என்றாள்.
"சரி" என்று ட்ரெயின் ரைடுக்கு போக... அங்கு அவர்களுக்கு முன் வேந்தன் குரூப் இருந்தது...
அவர்களைப் பார்த்ததும் "வேண்டாம் வேற எதுக்காவது போலாம்" என்றாள்.
"அவங்க இதுல வரதுல உனக்கு என்ன பிரச்சனை? நீ சொன்ன மாதிரி முதலையே வேந்தன் கிட்ட ஒரு சீட் இருக்குல்ல அதுல உக்காரு நாங்க பின்னாடி உக்கார்ந்துகிறோம்" என்று நிரு சொல்லஉன்
"நீ போ அவரோட, நாங்க வேற ரைடு போறோம்" என்று குண்டூசிப் போல் குச்சி முனையில் வட்டமாக இருக்க அது பெண்டுலம் போல் கீழிருந்து மேல் வரை சென்று வந்தது... பார்க்கும் போதே எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பை கொடுக்கவும்
நிரு வேந்தனுடன் சென்று விட்டான் கார்த்திக் இனியனுடன் அருவி சென்று அந்த ரைடை கூச்சல் சத்தத்துடன் அனுபவித்தாள்.