பிராவவோட குணத்துக்கு மலர் கீர்த்தி பேச்சைக் கேட்டு நடக்கிறது நல்லது.
இப்ப கோபம் எல்லாம் மலர் மேல் திரும்புமா இல்லை அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்வானா?
மிரு அம்மாக்கிட்ட சொல்லி நல்லபடியாக திருமணத்தை நடத்தி இருக்கலாமே.
இப்ப பாதிக்கப்படுவது மலர் தான்.
எனக்கென்னவோ அவன் உண்மையான காதலை ,மலர் பழசை நினைச்சு ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் என தோன்றுகிறது.
அவன் எவ்வளவு கோபம் வந்தாலும் அவளிடம் சமாதானம் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லாம் மலர் கையில், செய்கையில் உள்ளது.
தவறு நடக்கும் இடங்களில் உடனடியாக எதையும் சரி செய்வது இயலாத காரியம்.
உடனே நடக்காது,மலர் பொறுமையை கடைபிடித்து இலவச மருத்துவமனையை அவன் போக்கிலே போய் சரி செய்ய வேண்டிய நேரம் இது.அவனுடைய முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் இது சாத்தியம் ஆகும். இல்லை என்றால் இருவரிடமும் வெறுப்பை உண்டாக்கி,சண்டையை ஏற்படுத்த ஒரு சில ஜென்மங்கள் தயாராக உள்ளனர்.
சீண்டல்கள், சண்டைகள்,சமாதானகள், தீடீர் திருப்பங்கள் நிறைந்த பதிவு.