புத்துலகம் படைப்போம் வா... (கவிதை)

Advertisement

புத்துலகு படைப்போம் வா.............
கவிதை

மனித நேயம்
இன்று
மரணித்ததேன்???
மானிடர்கள்
சுயநல திருடர்களாக
மாறிய
துரோகத்தை
துவக்கியதேன்???


அடுத்திருப்பவனின்
வலியை
உணர மறுத்து
அவனவன் பேராசைக்கு
அட்சாரம்
போட்டுக்கொண்ட
அரக்க மனம் வந்ததும் ஏன்???


மதத்தின் பேரில்
இனத்தின் பேரில்
சமுதாயத்தின் பேரில்
வர்க்கம், நிறம்
என்று சூழ்ச்சிகளை
திட்டமிட்டு
தன்னல தியாகம்
துறந்ததும் ஏன்???


மனிதனே எங்கே செல்கிறாய்?
ஆறறிவு உனக்கு
ஆண்டவன் அளித்தது
மனித நேயம் கொண்டிட
நீ.... மனிதனை கொன்று
மகிழ்த்திருப்பதற்கு
விலங்கின் ஐந்தறிவு போதுமே???


உழைத்து திரிந்த போது
உனக்கு மானுடம் தெரிந்திருந்தது....
குளிர்சாதன அறையில் உட்கார்ந்து
வியர்வை வராது உழைக்கும் வே(லை)ளையில்
சீர்கெட்ட சித்தாந்த
சிந்தனை வருவது
நலமா?... சுய நலமா???


கீழ்த்தரமான சிந்தைகளை
சமூக வலைதளத்தில்
பதிவிட்டு விட்டு
சிரித்து மகிழும்
நீ.....
சாக்கடை சமுதாயத்தின்
ஆணிவேராகி
போனதை அறிவாயா???


பாதிவெந்த உணவை
உண்ண துவங்கினாய்???
பாதிக்கப்பட்டது
உன் உடல்மட்டுமல்ல
மனித நேய ஆற்றலும் தான்.....


மாறி வா.... மனிதனே....
மானுடம் காக்க
மனித குலம் வாழ்வாங்கு வாழ
மயக்கம் தெளிந்து
மருட்சி துறந்து வா....


புது சமுதாயம் படைப்போம்
புழுத்துபோன அரசியல்
புதைப்போம்
புதுமை சித்தார்த்தம் பூண்டு
புத்துலகு படைப்போம்


அன்புடன்
மனிதன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top