பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் :15. பிறனில் விழையாமை, குறள் எண்: 143 & 148.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 143:- விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்.

பொருள் :- ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.
 

Sasideera

Well-Known Member
குறள் 148:- பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

பொருள் :- பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

பிறன்மனை விழையாமை' ஆண்களுக்கென உரைக்கப்பட்ட பாடல் தொகுப்பாகும். காம இனபங்களைத் தன் மனைவியிடம் பெறுதல் ஒழுக்கம். பிறன் இல்லாளை விரும்பி அடைதல் மற்றவர் உரிமையில் தலையிடும் அறமற்ற தீயசெயல். உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இணைவிழைச்சு இயல்பூக்கமாயினும், புறத்தொழுக்கம் இருப்பின் இல்வாழ்க்கை சிறவாது என்பதால், மாந்தர்க்கு அது ஒரு வரையறைக்குள் கொண்டுவரப் பெற்றுள்ளது. பெண்ணுக்குக் கற்புப் போன்று ஆண்களுக்குப் பிறன்மனை நயவாமை வேண்டும் என்கிறது இவ்வதிகாரம். அடுத்தவனுடைய பொருளான மனைவிமீது காமுறுவது பேதைமை, தீமை, பழி,பாவம் என்று கடியும் அதிகாரம், 'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று பிறன்மனை விழையாமையைப் புகழ்கிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top