பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் :14. ஒழுக்கமுடைமை, குறள் எண்: 134 & 140.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 134:- மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

பொருள் :- கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

பார்ப்பான் (பிராமணர்) தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
 

Sasideera

Well-Known Member
குறள் 140:- உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

பொருள் :- உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
தனிமனித வாழ்வும் சமுதாய அமைப்பு முறைகளும் சீராகச் செல்லக் கடைப்பிடிக்கப்படுவது ஒழுக்கநெறிகளாகும். ஒழுக்கமுடைமை பிறப்பிற்குப் பெருமை சேர்க்கும்; ஒழுக்கக்குறைவு பிறப்பிற்கு இழிவு தரும் என்பது இவ்வதிகாரத்தில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. ஒழுக்கம் மக்கள் கூட்டுறவிற்குத் துணையாய் நின்று பொதுநலப்பயன் நல்குவதுமாகும். இதனாலேயே 'ஒழுக்கமுடைமை குடிமை' என்று சொன்னதோடு நில்லாமல் 'உலகத்தோ டொட்ட ஒழுகல்' எனவும் அதிகாரம் விதிக்கிறது. இக்கூட்டுறவே சமுதாயத்தை இயக்கி முன்னெடுத்துச் செல்லும். விழுப்பம் தருவதால் ஒழுக்கம் ஒருவனுக்கு உயிரைவிட மேலாகும்; அதுதான் குடிப்பிறப்பு; அதுதான் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக அமைவது. அதுதான் நன்மைக்கெல்லாம் அடிப்படை; ஏட்டில் எழுதப் பெற்றது எல்லாம் ஒழுக்கமன்று; உலகத்தோடு ஒத்ததே ஒழுக்கம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top