நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-24
சுதா உள்ளுரிலே இருப்பதால் அன்று இரவே அவளும் வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்..... காந்திமதி தன் மகனிடமும் மருமகளிடமும்..அன்று இரவே.. கோயிலில் குறி சொல்லியதிலிருந்து சுதா திருமணம் வரை சொல்லியிருந்தார்.... மாணிக்கம் அப்படியே இடிந்து போனார்.....
“இங்க பாரு மாணிக்கம் நீ இப்புடி மனசு உடஞ்சு போயிருவன்னு தான் உன்கிட்ட நான் சொல்லவேயில்ல... ஆனா இப்ப என்னவோ எனக்கு நடக்குறது சரின்னு படலப்பா.... ஏதோ தப்புன்னு என்னோட மனசுக்கு படுது..... சுதாவும் என்னோட பேத்திதான் அதுக்காக அவ செஞ்சது சரின்னு நான் சொல்லமாட்டேன்..... இவளால நம்ம மத்த பொண்ணுகளோட வாழ்க்கையும் வீணா போக பாத்துச்சு .....நம்ம கயல மட்டும் அவுக கட்டலைனா இன்னைக்கு பஞ்சாயத்து வரைக்கும் போய் எல்லா பொண்ணு வாழ்க்கையும் கெட்டு குட்டிச்சுவரா போயிருக்கும்....கயல கட்டி வச்சுட்டு எம்மனசுக்குள்ள வதையா வதைச்சுருச்சுப்பா.... அதான் மனசு கேக்காம அவுக வீட்ல ரெண்டு நாளு போய் தங்குனேன்.... பரவால்லப்பா.... அந்த பையன் நம்ம கயல தாய் மாதிரி அன்பு காட்டுறதுலயும் தகப்பன் மாதிரி கண்டிப்பு காட்டிட்டு அப்புறம் அரவணைச்சு அனுசரிச்சும் போறாரு.....அதுக ரெண்டும் நூறு வருசம் பிள்ளகுட்டிகளோட நல்லாயிருக்கனும்பா.....
ஆனா இன்னைக்கு ஏன் இத உன்கிட்ட சொல்றேன்னா.... உனக்கு இன்னும் ரெண்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்... இந்த சுதா உள்ளுர்ல கல்யாணம் பண்ணியிருக்கா... இவ நடந்துக்குறத வச்சு நம்ம மத்த பொண்ணுகள எடை போட்ற கூடாதுல...நம்ம வீட்ல பொண்ணு எடுக்குறவுங்க அக்கம் பக்கம் விசாரிக்காம இருக்கமாட்டாங்க.....என்னடா ….. ஆத்தா.... இவ்வளவு பெரிய காரியம் பண்ணியிருக்கு நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லைன்னு நீ நினைக்கக் கூடாது.... எல்லாம் உன்னோட உடம்பு சூழ்நிலையை மனசுக்குள்ள வச்சுதாம்பா சொல்லல.... ஆனா போற போக்கப் பாத்தா .உன்னோட பொண்ணு புகுந்த வீட்லயும் நல்லபேரு எடுக்கமாட்டான்னு நினைக்கிறேன்... புகுந்தவீட்ல இருக்கவுகள அனுசரிச்சு போகனும்னு கூட தெரியாம அவ இஷ்டத்துக்கு நடந்துக்கிறதா கேள்விப்பட்டேன்.... நாங்க புத்தி சொன்னா கேப்பான்னு எங்களுக்கு நம்பிக்கையில்லப்பா...........”
“ஆத்தா சகுந்தலா என்னடா அயித்த இப்புடி பேசுதுன்னு நினைக்காத.... நான் என்ன சொன்னாலும் எம் பேரன் பேத்திகளோட நல்லதுக்குதாத்தா இருக்கும்......”
“என்னத்தே .... இப்புடி சொல்லிப்புட்டிக....நான் வாக்கப்பட்டு வந்த நாள்ளயிருந்து உங்கள எங்க அம்மாமாதிரிதானே நினைக்கிறேன்.... உங்களுக்கு உங்க பேரன் பேத்திகளுகிட்ட இல்லாத உரிமையா..... நீங்க எப்புடி எம்புள்ளைகள வளத்திகன்னு நான் பாத்துகிட்டுதானேத்தே இருந்தேன்.... உங்கள ஏதாச்சும் சொன்னா.... அந்த பாவத்த நான் போய் எங்கத்த தொலைப்பேன்....” என்றபடி அழ ஆரம்பிக்க.....
“ஆத்தா விடு.... எனக்கென்ன மகளா இருக்கு.... உன்னையதானே.... எம்மகளா நினைச்சிருக்கேன்.... எனக்கென்ன இந்த விசயத்தை இப்ப உங்க கிட்ட சொல்லனும்னு தோனுச்சு..... சொல்லிட்டேன்..... மேக்கொண்டு என்ன செய்யனும்னு பாத்து செய்ங்க......”..என்றபடி அவர் உள்ளே செல்ல...........
சகுந்தலா.... தன் கணவரின் காலடியில் அமர்ந்தவர்......” அத்த சொன்னது உண்மைதாங்க....சுதா புருசன்வீட்ல ஒழுங்கா சொல்றத கேட்டு நடக்கலைன்னு நானும் கேள்விப்பட்டேங்க.......இத எப்புடி உங்ககிட்ட சொல்றதுன்னுதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்..... இப்ப என்னங்க பண்ணுறது......நாம நம்ம பொண்ண நல்லா வளக்காம விட்டுட்டோமோ...... “
மாணிக்கம்.... அவர் உச்சந்தலையில் கைவைத்து வருடிக்கொடுத்தவர்....
“ நீ கவலை படாதம்மா நான் என்ன செய்யலாம்னு பாக்குறேன்....”
மாணிக்கம் பக்கா கிரமத்துக்காரர்.... தான் ஒற்றையாளாக வளர்ந்தவர்.... சித்தப்பா மகன்கள்மகள்கள் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒட்டுதல் இல்லை.... திருவிழா.... தேதிகளில் பார்ப்பதுதான்...... தனக்கு அடுத்தடுத்து ஐந்து பெண் குழந்தைகள் பிறந்த போதும் ஒருநாளும் அதற்காக கவலைபடவில்லை....தன்னால் உழைத்து அந்த புள்ளகளை கரையேற்றமுடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.... ஆனால் பெண்பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் எந்த கெட்டபேரும் எடுக்காமல் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.... அதனால் தான் கயலை கல்லூரியில் சேர்க்கும் போதே சொல்லியிருந்தார்........ ஆத்தா... இன்னைக்கு அப்பா சொல்லறத நல்லா கேட்டுக்கத்தா.... நீ காலேஜ்க்கு போறதும் தெரியக்கூடாது...வாரதும் தெரியக்கூடாது.... மாணிக்கம் மகள அங்கன பாத்தேன்...இங்கன பாத்தேன்னு யாரும் சொல்லக்கூடாது.... அத எப்பவும் ஞாபகத்துல வச்சுக்க.....தங்கள் மற்ற பெண்பிள்ளைகளிடமும் முதல்ல ஒழுக்கம்தான் முக்கியம் படிப்பெல்லாம் அப்புறம்தான்.....என்று சொல்லியிருந்தார்....
தன் தாய் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பதால்.... தான் அவர் பெரிதாக தன் பிள்ளைகளை கண்டிக்க மாட்டார்....... பிள்ளைகள் வீட்டில் ஆடலும் பாடலுமாக இருந்தாலும் அதை ரசிப்பாரே தவிர அவர்கள் மனம் புண்பட பேசமாட்டார்....அவருக்கு வீடு எப்போதும் கலகலவென்று இருக்கவேண்டும்.... காலமெல்லாம் அவர்கள் சந்தோசமாக இருப்பதற்காக உழைக்க அவர் தயங்கியதில்லை.... இன்று முதல் முறையாக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியாமல் இருந்தார்.......
இங்கு கண்ணன் வீட்டில் .... கயலிடம்....” இன்னும் மூனுமாசத்துக்கு எனக்கு வயல்ல வேலையில்ல... உனக்கும் இப்ப காலேஜ் லீவுதானே.... வா... உனக்கு வண்டி ஓட்ட கத்து தாறேன்......”
கயலோ தன் கன்னத்தில் கை வைத்தபடி....”. வேணாங்க.... எனக்கு வண்டி ஓட்ட வராது ப்ளிஸ் வேணாமே....”
“ஏய் அன்னைக்கு அடிச்சதுனால சொல்றியா..... இனிமே அடிக்கமாட்டேன்.....”
கயல் மீண்டும் மீண்டும் மறுக்கவும் கண்ணனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது..... “இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ நைட்டிய மாத்திட்டு கீழ வார......அவ்வளவுதான்.....போ....”
ஸ்கூட்டி வாங்கும் போது நம்மகிட்ட ஒருவார்த்தை கூட கேக்கல.... நமக்குதான் சைக்கிளே ஓட்டத்தெரியாதே.... எனக்கு கத்துக் குடுக்குறேன்னு வீட்ல என்னைய தவிர அம்புட்டும் கத்துகிச்சுக.... நான் கடைசி வரைக்கும் அதுக பின்னாடி ஓடி ஓடி மூச்சு வாங்குனதுதான் மிச்சம்....ஒரு தரம் அதுககிட்ட வாங்கி நானா ஓட்டுறேன்னு ஓட்டி வேலிகாத்தான் முள்ளுக்குள்ள பாஞ்சு உடம்புபூரா முள்ளு குத்துனதுதான் மிச்சம்.....ம்ம்ம் இன்னைக்கு எங்க பாய போறேன்னு தெரியலயே..... ஆத்தா.... கண்ணாத்தா... என்னைய நல்லபடியா காப்பாத்தி குடுத்தீனா இந்த வருசம் திருவிழாவுக்கு உனக்கு உருவம் வாங்கி போடுறேத்தா..... என்று மனதிற்குள் நினைத்தபடி சுடிதார் மாற்றி வர.... கண்ணன் கயலை ஸ்கூட்டியில் ஏற்றி ஒரு பொட்டல் காட்டிற்கு கூட்டிச் சென்றான்......
அத்தியாயம்-24
சுதா உள்ளுரிலே இருப்பதால் அன்று இரவே அவளும் வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்..... காந்திமதி தன் மகனிடமும் மருமகளிடமும்..அன்று இரவே.. கோயிலில் குறி சொல்லியதிலிருந்து சுதா திருமணம் வரை சொல்லியிருந்தார்.... மாணிக்கம் அப்படியே இடிந்து போனார்.....
“இங்க பாரு மாணிக்கம் நீ இப்புடி மனசு உடஞ்சு போயிருவன்னு தான் உன்கிட்ட நான் சொல்லவேயில்ல... ஆனா இப்ப என்னவோ எனக்கு நடக்குறது சரின்னு படலப்பா.... ஏதோ தப்புன்னு என்னோட மனசுக்கு படுது..... சுதாவும் என்னோட பேத்திதான் அதுக்காக அவ செஞ்சது சரின்னு நான் சொல்லமாட்டேன்..... இவளால நம்ம மத்த பொண்ணுகளோட வாழ்க்கையும் வீணா போக பாத்துச்சு .....நம்ம கயல மட்டும் அவுக கட்டலைனா இன்னைக்கு பஞ்சாயத்து வரைக்கும் போய் எல்லா பொண்ணு வாழ்க்கையும் கெட்டு குட்டிச்சுவரா போயிருக்கும்....கயல கட்டி வச்சுட்டு எம்மனசுக்குள்ள வதையா வதைச்சுருச்சுப்பா.... அதான் மனசு கேக்காம அவுக வீட்ல ரெண்டு நாளு போய் தங்குனேன்.... பரவால்லப்பா.... அந்த பையன் நம்ம கயல தாய் மாதிரி அன்பு காட்டுறதுலயும் தகப்பன் மாதிரி கண்டிப்பு காட்டிட்டு அப்புறம் அரவணைச்சு அனுசரிச்சும் போறாரு.....அதுக ரெண்டும் நூறு வருசம் பிள்ளகுட்டிகளோட நல்லாயிருக்கனும்பா.....
ஆனா இன்னைக்கு ஏன் இத உன்கிட்ட சொல்றேன்னா.... உனக்கு இன்னும் ரெண்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்... இந்த சுதா உள்ளுர்ல கல்யாணம் பண்ணியிருக்கா... இவ நடந்துக்குறத வச்சு நம்ம மத்த பொண்ணுகள எடை போட்ற கூடாதுல...நம்ம வீட்ல பொண்ணு எடுக்குறவுங்க அக்கம் பக்கம் விசாரிக்காம இருக்கமாட்டாங்க.....என்னடா ….. ஆத்தா.... இவ்வளவு பெரிய காரியம் பண்ணியிருக்கு நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லைன்னு நீ நினைக்கக் கூடாது.... எல்லாம் உன்னோட உடம்பு சூழ்நிலையை மனசுக்குள்ள வச்சுதாம்பா சொல்லல.... ஆனா போற போக்கப் பாத்தா .உன்னோட பொண்ணு புகுந்த வீட்லயும் நல்லபேரு எடுக்கமாட்டான்னு நினைக்கிறேன்... புகுந்தவீட்ல இருக்கவுகள அனுசரிச்சு போகனும்னு கூட தெரியாம அவ இஷ்டத்துக்கு நடந்துக்கிறதா கேள்விப்பட்டேன்.... நாங்க புத்தி சொன்னா கேப்பான்னு எங்களுக்கு நம்பிக்கையில்லப்பா...........”
“ஆத்தா சகுந்தலா என்னடா அயித்த இப்புடி பேசுதுன்னு நினைக்காத.... நான் என்ன சொன்னாலும் எம் பேரன் பேத்திகளோட நல்லதுக்குதாத்தா இருக்கும்......”
“என்னத்தே .... இப்புடி சொல்லிப்புட்டிக....நான் வாக்கப்பட்டு வந்த நாள்ளயிருந்து உங்கள எங்க அம்மாமாதிரிதானே நினைக்கிறேன்.... உங்களுக்கு உங்க பேரன் பேத்திகளுகிட்ட இல்லாத உரிமையா..... நீங்க எப்புடி எம்புள்ளைகள வளத்திகன்னு நான் பாத்துகிட்டுதானேத்தே இருந்தேன்.... உங்கள ஏதாச்சும் சொன்னா.... அந்த பாவத்த நான் போய் எங்கத்த தொலைப்பேன்....” என்றபடி அழ ஆரம்பிக்க.....
“ஆத்தா விடு.... எனக்கென்ன மகளா இருக்கு.... உன்னையதானே.... எம்மகளா நினைச்சிருக்கேன்.... எனக்கென்ன இந்த விசயத்தை இப்ப உங்க கிட்ட சொல்லனும்னு தோனுச்சு..... சொல்லிட்டேன்..... மேக்கொண்டு என்ன செய்யனும்னு பாத்து செய்ங்க......”..என்றபடி அவர் உள்ளே செல்ல...........
சகுந்தலா.... தன் கணவரின் காலடியில் அமர்ந்தவர்......” அத்த சொன்னது உண்மைதாங்க....சுதா புருசன்வீட்ல ஒழுங்கா சொல்றத கேட்டு நடக்கலைன்னு நானும் கேள்விப்பட்டேங்க.......இத எப்புடி உங்ககிட்ட சொல்றதுன்னுதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்..... இப்ப என்னங்க பண்ணுறது......நாம நம்ம பொண்ண நல்லா வளக்காம விட்டுட்டோமோ...... “
மாணிக்கம்.... அவர் உச்சந்தலையில் கைவைத்து வருடிக்கொடுத்தவர்....
“ நீ கவலை படாதம்மா நான் என்ன செய்யலாம்னு பாக்குறேன்....”
மாணிக்கம் பக்கா கிரமத்துக்காரர்.... தான் ஒற்றையாளாக வளர்ந்தவர்.... சித்தப்பா மகன்கள்மகள்கள் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒட்டுதல் இல்லை.... திருவிழா.... தேதிகளில் பார்ப்பதுதான்...... தனக்கு அடுத்தடுத்து ஐந்து பெண் குழந்தைகள் பிறந்த போதும் ஒருநாளும் அதற்காக கவலைபடவில்லை....தன்னால் உழைத்து அந்த புள்ளகளை கரையேற்றமுடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.... ஆனால் பெண்பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் எந்த கெட்டபேரும் எடுக்காமல் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.... அதனால் தான் கயலை கல்லூரியில் சேர்க்கும் போதே சொல்லியிருந்தார்........ ஆத்தா... இன்னைக்கு அப்பா சொல்லறத நல்லா கேட்டுக்கத்தா.... நீ காலேஜ்க்கு போறதும் தெரியக்கூடாது...வாரதும் தெரியக்கூடாது.... மாணிக்கம் மகள அங்கன பாத்தேன்...இங்கன பாத்தேன்னு யாரும் சொல்லக்கூடாது.... அத எப்பவும் ஞாபகத்துல வச்சுக்க.....தங்கள் மற்ற பெண்பிள்ளைகளிடமும் முதல்ல ஒழுக்கம்தான் முக்கியம் படிப்பெல்லாம் அப்புறம்தான்.....என்று சொல்லியிருந்தார்....
தன் தாய் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பதால்.... தான் அவர் பெரிதாக தன் பிள்ளைகளை கண்டிக்க மாட்டார்....... பிள்ளைகள் வீட்டில் ஆடலும் பாடலுமாக இருந்தாலும் அதை ரசிப்பாரே தவிர அவர்கள் மனம் புண்பட பேசமாட்டார்....அவருக்கு வீடு எப்போதும் கலகலவென்று இருக்கவேண்டும்.... காலமெல்லாம் அவர்கள் சந்தோசமாக இருப்பதற்காக உழைக்க அவர் தயங்கியதில்லை.... இன்று முதல் முறையாக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியாமல் இருந்தார்.......
இங்கு கண்ணன் வீட்டில் .... கயலிடம்....” இன்னும் மூனுமாசத்துக்கு எனக்கு வயல்ல வேலையில்ல... உனக்கும் இப்ப காலேஜ் லீவுதானே.... வா... உனக்கு வண்டி ஓட்ட கத்து தாறேன்......”
கயலோ தன் கன்னத்தில் கை வைத்தபடி....”. வேணாங்க.... எனக்கு வண்டி ஓட்ட வராது ப்ளிஸ் வேணாமே....”
“ஏய் அன்னைக்கு அடிச்சதுனால சொல்றியா..... இனிமே அடிக்கமாட்டேன்.....”
கயல் மீண்டும் மீண்டும் மறுக்கவும் கண்ணனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது..... “இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ நைட்டிய மாத்திட்டு கீழ வார......அவ்வளவுதான்.....போ....”
ஸ்கூட்டி வாங்கும் போது நம்மகிட்ட ஒருவார்த்தை கூட கேக்கல.... நமக்குதான் சைக்கிளே ஓட்டத்தெரியாதே.... எனக்கு கத்துக் குடுக்குறேன்னு வீட்ல என்னைய தவிர அம்புட்டும் கத்துகிச்சுக.... நான் கடைசி வரைக்கும் அதுக பின்னாடி ஓடி ஓடி மூச்சு வாங்குனதுதான் மிச்சம்....ஒரு தரம் அதுககிட்ட வாங்கி நானா ஓட்டுறேன்னு ஓட்டி வேலிகாத்தான் முள்ளுக்குள்ள பாஞ்சு உடம்புபூரா முள்ளு குத்துனதுதான் மிச்சம்.....ம்ம்ம் இன்னைக்கு எங்க பாய போறேன்னு தெரியலயே..... ஆத்தா.... கண்ணாத்தா... என்னைய நல்லபடியா காப்பாத்தி குடுத்தீனா இந்த வருசம் திருவிழாவுக்கு உனக்கு உருவம் வாங்கி போடுறேத்தா..... என்று மனதிற்குள் நினைத்தபடி சுடிதார் மாற்றி வர.... கண்ணன் கயலை ஸ்கூட்டியில் ஏற்றி ஒரு பொட்டல் காட்டிற்கு கூட்டிச் சென்றான்......
Last edited: