நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-23
கண்ணன் கயலுக்கு தலை தீபாவளி கோலாகலமாக விடிய....... ஊருக்கு முதல் நாளே வரச்சொல்லி பலமுறை போன் பண்ணியிருந்தும்....கயல் இங்கு சாமிகும்பிட்டு விட்டு பின் வருவதாக..... சொல்லியிருந்தாள்..... .அதிகாலை 3 மணியிலிருந்து தன் அத்தையோடு சேர்ந்து பலகாரங்கள் செய்தவள்.....சூரியன் உதிப்பதற்குள் தலையில் எண்ணெய் வைத்து குளித்திருந்தாள்..... கண்ணனும் ராமனும் விடியற்காலையில் தான் தங்கள் கடையில் இருந்து வந்தனர்.... தீபாவளி வியாபாரம் கண்ணனுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருந்தது..... அதோடு சேர்த்து இந்த வருடம் வெடிக்கடையும் போட்டிருந்தான்..... விடிய விடிய வியாபாரத்தில் சகோதரர்கள் மூன்று பேரும் சேர்ந்து வேலை பார்த்ததில் இரு மடங்கு லாபம் கிடைத்தது....முத்துவை இரவு 1 மணி போல வீட்டிற்கு அனுப்பியவர்கள்..... இருவரும் விடியற்காலையில் வரும் போதே.... மட்டன்...சிக்கன்...என்று அனைத்தையும் வாங்கி வர....கயலும் சாவித்திரியும் சமைக்க துவங்கிவிட்டார்கள்.....
தான் குளித்து முடித்தவள்..... கண்ணனை ஆறு மணியிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தாள்...... கண்ணன் அசைய கூட இல்லை......
“ஏங்க எந்திரிங்க..... இப்ப குளிச்சு கிளம்புனாதானே....மத்தியானமாவது ஊருக்கு போக முடியும்.....நானாச்சும் நேத்தே ஊருக்கு போயிருப்பேன்.... முத்துவையும் ராமனையும் சேத்து ஊருக்கு கூட்டிட்டு போக நினைச்சதால இங்க இருந்தேன்....பாவம் அத்தையும் ஒத்த கையாலி எம்புட்டு வேலைதான் பாப்பாங்கன்னு நினைச்சு இருந்தேன்...பாருங்க என்னைய சொல்லனும்.....”என்று இவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க...
.படக்கென்று எழுந்த கண்ணன் அவளை இழுத்து கட்டிலில் உட்கார வைத்தவன்…..தன் தலையை எடுத்து அவள் மடியில் வைத்து அவள் ஒரு கையை பிடித்து தன் தலையை கோத சொல்லி மறு கையால் தன் காதை அடைத்திருந்தான்........ தலையை கோதியவள்....
“ஏங்க காதை அடைக்கிறீங்க.....”
“அதுவா...... அப்பத்திலிருந்து ஒரு எலி என்னோட காதுக்குள்ள கீச் கீச்ன்னு கத்துது..... அதான்.....”
“என்னது .... எலியா.....” என்றபடி தன் காலை படக்கென்று மேலே தூக்கியவள்....
“ எங்க.... எலி...கட்டிலுக்கு கீழயா இருக்கு.....”
“இல்ல.... அந்த எலிமேல தான் நான் தலைவச்சு படுத்துருக்கேன்.....”
“என்னையவா ..... எலின்னு சொன்னிங்க.... உங்கள இப்ப என்ன பண்ணுறேன் பாருங்க.....” என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் ஒன்றும் இல்லாததால் அப்போதுதான் குளித்துவிட்டு தன் தலையில் இருந்து வடிந்த தண்ணிரை அவன் முகத்தில் உதறி விட்டாள்....
“ஸ்ஸ்ஸ்........ எம்மேலயா தண்ணிய தெளிச்ச இப்ப நான் உன்னைய என்ன பண்ணுறேன்னு பாரு” என்றபடி அவள் கழுத்தில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்து முத்தம் கொடுக்க வர.....அவன் வாயை மூடியவள்.......
“போங்க.....போங்க....தீபாவளி அதுவுமா....... குளிக்க கூட இல்லாம..... ச்சு...ச்சு...போய் முதல்ல குளிங்க..... “அவனை விட்டு ஒட நினைத்தவளை..... எட்டி பின் புறமாக அணைத்தவன்.....
“. குளிச்சதுக்கு அப்புறமா.....தீபாவளி ஸ்பெசலா...... வாங்கிக்குறேன்..... இப்ப அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு வாங்கிட்டு போ.....”அப்புடியே அவள் ஈர கூந்தலில் முகத்தை புதைக்க...... மெதுவாக அவனிடமிருந்து நழுவியவள்.......
“ அதெல்லாம் அப்புறம்...... அத்தே உங்கள கீழ வரச்சொன்னாங்க.....” என்றபடி கீழே ஓடினாள்...... அங்கு முத்துவும் ராமனும் கொல்லைபுறத்தில் அமர்ந்து தன் தாயிடம் எண்ணெய் தேய்த்து கொண்டவர்கள் குளிக்கப் போக.......கண்ணன் துண்டு மட்டும் கட்டி கீழே வந்தான்....... அவனை பார்த்து பே... என்று விழித்தவள்...”.என்னங்க நடு வீட்டுக்குள்ள இப்புடி வாறிங்க...... யாராச்சும் வந்தா..... என்னாகும்......”
“வந்தா...வரட்டும் நான் என் வீட்டுல இப்புடித்தான் இருப்பேன்......” என்றபடி கொல்லைபுறத்திற்கு செல்ல.....
சாவித்திரி “கயலு..... ஆத்தா...கயலு.... இங்கன கொஞ்சம்வாடா....”.
“என்னத்தே........”
“இந்தா... இந்த எண்ணெய்ய உம்புருசனுக்கு தேய்ச்சு விடு..... வாத்தா.....”
“நான் தேய்ச்சு விடவா....வேணாத்தே..... எனக்கெல்லாம் தேய்க்க தெரியாது....நீங்களே தேய்ச்சு விட்டுருங்க.......”
“இல்லத்தா.... அவனுக்கு இனி நீதான் தேய்ச்சு விடனும் ...வா” என்றபடி அவள் கையில் எண்ணெய் கிண்ணத்தை கொடுக்க...... கயலுக்கு கண்ணனை பார்க்கவே கூச்சமாக இருந்தது.....
மெதுவாக அவன் அருகில் வந்தவள்.....” அத்தே உள்ள போனவுடனே நீங்களா....தேய்ச்சுக்கிறீங்களா..... எனக்கு கூச்சமாயிருக்கு.....”
“அப்புடியா..... இந்தா அம்மாவ கூப்புட்டு சொல்லுறேன்.....” என்று வாயை திறக்க போக.......” வேணா...வேணா....”.என்றபடி அவன் முன் நின்றிருந்தாள்......
பச்சப் புள்ள இவரு...நாம இவருக்கு எண்ணெய் தேச்சு விடனுமா.....கொஞ்சம்கூட கூச்சம் இல்லாம....நம்ம முன்னாடி உட்காந்திருக்குறத பாரு...... மெதுவாக அவன் தலையில் எண்ணெய் தேய்த்தவள்...... பின் கண்ணை மூடிக்கொண்டு அவன் மார்பில் கை வைக்க.....கண்ணன் உடம்பே....புல்லரித்தது.......கயலுக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.........சொல்லத் தெரியாத உணர்வு ஒன்று தோன்றியது...........கயல் கண்ணை மூடியபடி தேய்ப்பதை கண்ணன் கண்திறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.......மார்பில் தேய்த்து முடித்தவள் .......பின் கை....முதுகெல்லாம் தேய்த்து விட்டவள்......அவனை கண்திறந்து பார்க்க.... அவளுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.....”. ஏய் என்ன அப்புடி....சிரிப்பு.......”
“உங்கள பாத்தா ஒரு படத்துல வடிவேலு உடம்புல எண்ணெய தடவிட்டு ஒரு பொண்ணை கடத்த போவாருல அது மாதிரி இருக்கு.....”
“உன்னைய..... இந்தா வாரேன்....கொஞ்சமா தடவ சொன்னா.... அப்புடியே ஊத்திவச்சுட்டு ......சிரிச்சுக்கிட்டு இருக்கியா....” என்றபடி அவள் காதை திருக........
“ப்ளிஸ்....ப்ளிஸ்....நான் சும்மா சொன்னேன்....”என்றபடி உள்ளே ஓடியவள்....எல்லாருடைய புது துணிக்கும் மஞ்சள் வைத்து அதை ஒரு சுலகில் வைத்து சாமி அறையில் வைக்க.....எல்லா பலகாரங்களையும் தட்டில் எடுத்து வைக்க...... எல்லாரும் வந்து சாமி கும்பிட்டு சாவித்திரி கையால் புது துணிவாங்கி உடுத்தி வந்து.... அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினர்....... முத்து வெடியை கொளுத்திக்கொன்டிருந்தான்.....
அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க முத்து......”. எங்கண்ணி...... இவ்வளவு பலகாரம் இருக்கு....மைசூர்பாகு செய்ய போறேன் சொன்னிங்க...... அத மட்டும் காணோம்.....”
சாவித்திரி நமுட்டு சிரிப்பு சிரிக்க....”. கயலோ..அந்த கொடுமைய ஏன் கேக்குற முத்து நான் எல்லாம் கரெக்டாதான் போட்டேன்....... என்னாச்சுன்னு தெரியல..... அது கெட்டி ஆகாம....அப்புடியே கூலாவே... இருக்கு....நானும் என்னன்னமோ செஞ்சு பாத்துட்டேன்..... ம்ம்ம்..... ஒன்னும் வேலைக்கு ஆகல.....வெயில்ல கூட வச்சுப் பாத்துட்டேன்.... ரெண்டு நாளு வச்சுட்டு நேத்து வெளிய கொண்டு போறேன்...... நம்ம வீட்டுக்கு எப்பவும் ஒரு காக்கா வரும் பாரு அது என்னைய பாத்தவுடனே.....ஒரே ஓட்டமா பறந்துறுச்சு.... இன்னைக்கு காலையில இருந்து நானும் அத்தையும் மாத்தி மாத்தி கத்துறோம்.... அது நம்ம வீட்டு காம்பவுண்டலதான் இருக்கு.... ஆனா திரும்பி கூட மாட்டேங்குது....... முத்து.... ஒரு வேளை மைசூர் பாகு டேஸ்ட் பாத்திருக்குமோ...... அதுனால தான் எதுக்கு வம்புன்னு அத கொண்டுவரல..... வேணும்னா....கடையில வாங்கிக்குவோம்......சரியா....”
“வேணாம்....வேணவே....வேணாம்... எனக்கு மைசூர் பாகு ஆசையே விட்டுருச்சு அண்ணி.... ஆள விட்டுருங்க.....”னு சொல்ல எல்லோரும் சிரித்தபடி. சாப்பிட்டனர்..அனைவரும் சாப்பிட்டு ஊருக்கு கிளம்ப....கயலை மட்டும் ஆளையே காணவில்லை....
“என்னடா...நேரமாச்சு... நேரமாச்சுன்னு காலையில இருந்து குதிச்சா இப்ப இவள ஆளக் காணோம்....டேய்... நீங்க ரெண்டுபேரும் காரை எடுத்து வெளிய வைங்க நான் உங்க அண்ணிய கூட்டிட்டு வாரேன்....” என்றபடி மாடிக்கு வர... கயல் அங்கு பட்டு சேலைக்கு மடிப்பு வைக்க முடியாமல் திணறி கொண்டிருந்தாள்........
“ஏய்... என்ன பண்ணிகிட்டு இருக்க.....”
கயல் அவனை பார்த்து பரிதாபமாக விழிக்கவும்.....” என்ன இப்புடி முழிக்குற......”
“இல்லை இம்புட்டு நாளும் ஏழெட்டு பின்ன குத்தி... எப்புடியோ...சேலைய கட்டியிருந்தேன்... இப்ப கீழ் மடிப்பு வரவே மாட்டேங்குது.......”
“அவ்வளவுதானே... இதுக்கு ஏன் கஷ்டப்படுற....”என்றபடி வேட்டியை மடித்து கட்டிய கண்ணன் கீழே குனிந்து அவள் சேலையை அழகாக சரி செய்தான்.... அலை அலையான கேசம் அவள் கண்ணுக்கு பட புது வெள்ளை வேட்டி சட்டையில் கம்பிரமாக இருந்தவன்....... இவரு என்ன படக்குன்னு நம்ம சேலைக்கு இப்புடி மடிப்பெடுத்து விடுறாரு..... ஆம்பளகளெல்லாம்....இப்புடி வேலையெல்லாம் செய்யக்கூடாதுதானே.... என்று யோசித்தபடி இருக்க.....
“ம்ம்ம்....... இந்தா சரி பண்ணிட்டேன்....” என்று நிமிர்ந்தவன் அவளை கண்ணாடி பக்கம் திருப்பி காட்ட....கயல் விழியெடுக்காமல் கண்ணனையே பார்த்திருந்தாள்..... கண்ணனும் கயலையே பார்த்தான்..... அந்த கரும் அரக்கு சேலையில் நல்ல மஞ்சள் பார்டர் வைத்த அந்த பட்டு சேலை அவள் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது......
“எப்புடி என்னோட செலக்சன்...... “என்றவன் பீரோவை திறந்து அன்று வாங்கிய நகையை எடுத்தவன்...”..ம்ம்ம்...போடு.....”.
“வேணாங்க.....உள்ளதே போதும்........”.
“ஏய் போடுடி நான் வாங்குனது எப்புடி இருக்குன்னு பாக்கவேணாமா.....” என்றபடி அவளுக்கு நெக்லஸ் போட்டு விட்டவன் அவள் கழுத்தில் முத்தமிட்டு.... அவள் கையில் வளையலை மாட்ட அவள் இரு கைக்கு முத்தமிட்டவன்....ச்சே....ச்சே... இவளுக்கு லிப்ஸ்டிக் வாங்கி குடுத்திருக்கலாம்.... அப்புடியே அத போட்டுவிட்டு முத்தமாச்சும் குடுத்துருக்கலாம் நாம இப்ப குடுத்த இவகேள்வி கேட்டே நம்மள சாகடிச்சுருவாளே.... என்று நினைத்தவனை.....
“ஏங்க......மறந்தே போயிட்டேன்.... உங்கள ஒரு போட்டோ எடுத்துக்கவா......”
“எதுக்கு....”
“இல்ல என்னோட காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் உங்கள பாக்கனும்னு சொன்னாங்க....” என்றபடி தன் செல்லை எடுத்து அவனை போட்டோ எடுக்க போக.....
“ஏய்... இரு வா ரெண்டுபேரும் சேந்து எடுத்துக்குவோம்”….. என்றபடி அவளை தன் தோள் வளைவிற்குள் கொண்டு வந்தவன்..... இருவரையும் வைத்து விதவிதமாக எடுத்து கொண்டிருந்தான்.....
“ஏங்க போதும் இப்புடியே விட்டா அடுத்த தீபாவளி வந்துரும் வாங்க …..”என்றபடி அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே வந்தாள்....
“அத்தே....நீங்களும் வரலாம்ல....”
“இல்லத்தா.....மாடு... கன்னுல்லாம் இருக்கு கொஞ்சம் வேலையிருக்கு....அதான் முத்துவையும் ராமனையும் வம்புபண்ணி கூட்டிக்கிட்டு போறியேத்தா.... பத்தரமா போய்ட்டு வாங்கத்தா.... கண்ணா பாத்துப்பா.....”
“ம்ம் சரிம்மா.......”
அத்தியாயம்-23
கண்ணன் கயலுக்கு தலை தீபாவளி கோலாகலமாக விடிய....... ஊருக்கு முதல் நாளே வரச்சொல்லி பலமுறை போன் பண்ணியிருந்தும்....கயல் இங்கு சாமிகும்பிட்டு விட்டு பின் வருவதாக..... சொல்லியிருந்தாள்..... .அதிகாலை 3 மணியிலிருந்து தன் அத்தையோடு சேர்ந்து பலகாரங்கள் செய்தவள்.....சூரியன் உதிப்பதற்குள் தலையில் எண்ணெய் வைத்து குளித்திருந்தாள்..... கண்ணனும் ராமனும் விடியற்காலையில் தான் தங்கள் கடையில் இருந்து வந்தனர்.... தீபாவளி வியாபாரம் கண்ணனுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருந்தது..... அதோடு சேர்த்து இந்த வருடம் வெடிக்கடையும் போட்டிருந்தான்..... விடிய விடிய வியாபாரத்தில் சகோதரர்கள் மூன்று பேரும் சேர்ந்து வேலை பார்த்ததில் இரு மடங்கு லாபம் கிடைத்தது....முத்துவை இரவு 1 மணி போல வீட்டிற்கு அனுப்பியவர்கள்..... இருவரும் விடியற்காலையில் வரும் போதே.... மட்டன்...சிக்கன்...என்று அனைத்தையும் வாங்கி வர....கயலும் சாவித்திரியும் சமைக்க துவங்கிவிட்டார்கள்.....
தான் குளித்து முடித்தவள்..... கண்ணனை ஆறு மணியிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தாள்...... கண்ணன் அசைய கூட இல்லை......
“ஏங்க எந்திரிங்க..... இப்ப குளிச்சு கிளம்புனாதானே....மத்தியானமாவது ஊருக்கு போக முடியும்.....நானாச்சும் நேத்தே ஊருக்கு போயிருப்பேன்.... முத்துவையும் ராமனையும் சேத்து ஊருக்கு கூட்டிட்டு போக நினைச்சதால இங்க இருந்தேன்....பாவம் அத்தையும் ஒத்த கையாலி எம்புட்டு வேலைதான் பாப்பாங்கன்னு நினைச்சு இருந்தேன்...பாருங்க என்னைய சொல்லனும்.....”என்று இவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க...
.படக்கென்று எழுந்த கண்ணன் அவளை இழுத்து கட்டிலில் உட்கார வைத்தவன்…..தன் தலையை எடுத்து அவள் மடியில் வைத்து அவள் ஒரு கையை பிடித்து தன் தலையை கோத சொல்லி மறு கையால் தன் காதை அடைத்திருந்தான்........ தலையை கோதியவள்....
“ஏங்க காதை அடைக்கிறீங்க.....”
“அதுவா...... அப்பத்திலிருந்து ஒரு எலி என்னோட காதுக்குள்ள கீச் கீச்ன்னு கத்துது..... அதான்.....”
“என்னது .... எலியா.....” என்றபடி தன் காலை படக்கென்று மேலே தூக்கியவள்....
“ எங்க.... எலி...கட்டிலுக்கு கீழயா இருக்கு.....”
“இல்ல.... அந்த எலிமேல தான் நான் தலைவச்சு படுத்துருக்கேன்.....”
“என்னையவா ..... எலின்னு சொன்னிங்க.... உங்கள இப்ப என்ன பண்ணுறேன் பாருங்க.....” என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் ஒன்றும் இல்லாததால் அப்போதுதான் குளித்துவிட்டு தன் தலையில் இருந்து வடிந்த தண்ணிரை அவன் முகத்தில் உதறி விட்டாள்....
“ஸ்ஸ்ஸ்........ எம்மேலயா தண்ணிய தெளிச்ச இப்ப நான் உன்னைய என்ன பண்ணுறேன்னு பாரு” என்றபடி அவள் கழுத்தில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்து முத்தம் கொடுக்க வர.....அவன் வாயை மூடியவள்.......
“போங்க.....போங்க....தீபாவளி அதுவுமா....... குளிக்க கூட இல்லாம..... ச்சு...ச்சு...போய் முதல்ல குளிங்க..... “அவனை விட்டு ஒட நினைத்தவளை..... எட்டி பின் புறமாக அணைத்தவன்.....
“. குளிச்சதுக்கு அப்புறமா.....தீபாவளி ஸ்பெசலா...... வாங்கிக்குறேன்..... இப்ப அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு வாங்கிட்டு போ.....”அப்புடியே அவள் ஈர கூந்தலில் முகத்தை புதைக்க...... மெதுவாக அவனிடமிருந்து நழுவியவள்.......
“ அதெல்லாம் அப்புறம்...... அத்தே உங்கள கீழ வரச்சொன்னாங்க.....” என்றபடி கீழே ஓடினாள்...... அங்கு முத்துவும் ராமனும் கொல்லைபுறத்தில் அமர்ந்து தன் தாயிடம் எண்ணெய் தேய்த்து கொண்டவர்கள் குளிக்கப் போக.......கண்ணன் துண்டு மட்டும் கட்டி கீழே வந்தான்....... அவனை பார்த்து பே... என்று விழித்தவள்...”.என்னங்க நடு வீட்டுக்குள்ள இப்புடி வாறிங்க...... யாராச்சும் வந்தா..... என்னாகும்......”
“வந்தா...வரட்டும் நான் என் வீட்டுல இப்புடித்தான் இருப்பேன்......” என்றபடி கொல்லைபுறத்திற்கு செல்ல.....
சாவித்திரி “கயலு..... ஆத்தா...கயலு.... இங்கன கொஞ்சம்வாடா....”.
“என்னத்தே........”
“இந்தா... இந்த எண்ணெய்ய உம்புருசனுக்கு தேய்ச்சு விடு..... வாத்தா.....”
“நான் தேய்ச்சு விடவா....வேணாத்தே..... எனக்கெல்லாம் தேய்க்க தெரியாது....நீங்களே தேய்ச்சு விட்டுருங்க.......”
“இல்லத்தா.... அவனுக்கு இனி நீதான் தேய்ச்சு விடனும் ...வா” என்றபடி அவள் கையில் எண்ணெய் கிண்ணத்தை கொடுக்க...... கயலுக்கு கண்ணனை பார்க்கவே கூச்சமாக இருந்தது.....
மெதுவாக அவன் அருகில் வந்தவள்.....” அத்தே உள்ள போனவுடனே நீங்களா....தேய்ச்சுக்கிறீங்களா..... எனக்கு கூச்சமாயிருக்கு.....”
“அப்புடியா..... இந்தா அம்மாவ கூப்புட்டு சொல்லுறேன்.....” என்று வாயை திறக்க போக.......” வேணா...வேணா....”.என்றபடி அவன் முன் நின்றிருந்தாள்......
பச்சப் புள்ள இவரு...நாம இவருக்கு எண்ணெய் தேச்சு விடனுமா.....கொஞ்சம்கூட கூச்சம் இல்லாம....நம்ம முன்னாடி உட்காந்திருக்குறத பாரு...... மெதுவாக அவன் தலையில் எண்ணெய் தேய்த்தவள்...... பின் கண்ணை மூடிக்கொண்டு அவன் மார்பில் கை வைக்க.....கண்ணன் உடம்பே....புல்லரித்தது.......கயலுக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.........சொல்லத் தெரியாத உணர்வு ஒன்று தோன்றியது...........கயல் கண்ணை மூடியபடி தேய்ப்பதை கண்ணன் கண்திறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.......மார்பில் தேய்த்து முடித்தவள் .......பின் கை....முதுகெல்லாம் தேய்த்து விட்டவள்......அவனை கண்திறந்து பார்க்க.... அவளுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.....”. ஏய் என்ன அப்புடி....சிரிப்பு.......”
“உங்கள பாத்தா ஒரு படத்துல வடிவேலு உடம்புல எண்ணெய தடவிட்டு ஒரு பொண்ணை கடத்த போவாருல அது மாதிரி இருக்கு.....”
“உன்னைய..... இந்தா வாரேன்....கொஞ்சமா தடவ சொன்னா.... அப்புடியே ஊத்திவச்சுட்டு ......சிரிச்சுக்கிட்டு இருக்கியா....” என்றபடி அவள் காதை திருக........
“ப்ளிஸ்....ப்ளிஸ்....நான் சும்மா சொன்னேன்....”என்றபடி உள்ளே ஓடியவள்....எல்லாருடைய புது துணிக்கும் மஞ்சள் வைத்து அதை ஒரு சுலகில் வைத்து சாமி அறையில் வைக்க.....எல்லா பலகாரங்களையும் தட்டில் எடுத்து வைக்க...... எல்லாரும் வந்து சாமி கும்பிட்டு சாவித்திரி கையால் புது துணிவாங்கி உடுத்தி வந்து.... அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினர்....... முத்து வெடியை கொளுத்திக்கொன்டிருந்தான்.....
அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க முத்து......”. எங்கண்ணி...... இவ்வளவு பலகாரம் இருக்கு....மைசூர்பாகு செய்ய போறேன் சொன்னிங்க...... அத மட்டும் காணோம்.....”
சாவித்திரி நமுட்டு சிரிப்பு சிரிக்க....”. கயலோ..அந்த கொடுமைய ஏன் கேக்குற முத்து நான் எல்லாம் கரெக்டாதான் போட்டேன்....... என்னாச்சுன்னு தெரியல..... அது கெட்டி ஆகாம....அப்புடியே கூலாவே... இருக்கு....நானும் என்னன்னமோ செஞ்சு பாத்துட்டேன்..... ம்ம்ம்..... ஒன்னும் வேலைக்கு ஆகல.....வெயில்ல கூட வச்சுப் பாத்துட்டேன்.... ரெண்டு நாளு வச்சுட்டு நேத்து வெளிய கொண்டு போறேன்...... நம்ம வீட்டுக்கு எப்பவும் ஒரு காக்கா வரும் பாரு அது என்னைய பாத்தவுடனே.....ஒரே ஓட்டமா பறந்துறுச்சு.... இன்னைக்கு காலையில இருந்து நானும் அத்தையும் மாத்தி மாத்தி கத்துறோம்.... அது நம்ம வீட்டு காம்பவுண்டலதான் இருக்கு.... ஆனா திரும்பி கூட மாட்டேங்குது....... முத்து.... ஒரு வேளை மைசூர் பாகு டேஸ்ட் பாத்திருக்குமோ...... அதுனால தான் எதுக்கு வம்புன்னு அத கொண்டுவரல..... வேணும்னா....கடையில வாங்கிக்குவோம்......சரியா....”
“வேணாம்....வேணவே....வேணாம்... எனக்கு மைசூர் பாகு ஆசையே விட்டுருச்சு அண்ணி.... ஆள விட்டுருங்க.....”னு சொல்ல எல்லோரும் சிரித்தபடி. சாப்பிட்டனர்..அனைவரும் சாப்பிட்டு ஊருக்கு கிளம்ப....கயலை மட்டும் ஆளையே காணவில்லை....
“என்னடா...நேரமாச்சு... நேரமாச்சுன்னு காலையில இருந்து குதிச்சா இப்ப இவள ஆளக் காணோம்....டேய்... நீங்க ரெண்டுபேரும் காரை எடுத்து வெளிய வைங்க நான் உங்க அண்ணிய கூட்டிட்டு வாரேன்....” என்றபடி மாடிக்கு வர... கயல் அங்கு பட்டு சேலைக்கு மடிப்பு வைக்க முடியாமல் திணறி கொண்டிருந்தாள்........
“ஏய்... என்ன பண்ணிகிட்டு இருக்க.....”
கயல் அவனை பார்த்து பரிதாபமாக விழிக்கவும்.....” என்ன இப்புடி முழிக்குற......”
“இல்லை இம்புட்டு நாளும் ஏழெட்டு பின்ன குத்தி... எப்புடியோ...சேலைய கட்டியிருந்தேன்... இப்ப கீழ் மடிப்பு வரவே மாட்டேங்குது.......”
“அவ்வளவுதானே... இதுக்கு ஏன் கஷ்டப்படுற....”என்றபடி வேட்டியை மடித்து கட்டிய கண்ணன் கீழே குனிந்து அவள் சேலையை அழகாக சரி செய்தான்.... அலை அலையான கேசம் அவள் கண்ணுக்கு பட புது வெள்ளை வேட்டி சட்டையில் கம்பிரமாக இருந்தவன்....... இவரு என்ன படக்குன்னு நம்ம சேலைக்கு இப்புடி மடிப்பெடுத்து விடுறாரு..... ஆம்பளகளெல்லாம்....இப்புடி வேலையெல்லாம் செய்யக்கூடாதுதானே.... என்று யோசித்தபடி இருக்க.....
“ம்ம்ம்....... இந்தா சரி பண்ணிட்டேன்....” என்று நிமிர்ந்தவன் அவளை கண்ணாடி பக்கம் திருப்பி காட்ட....கயல் விழியெடுக்காமல் கண்ணனையே பார்த்திருந்தாள்..... கண்ணனும் கயலையே பார்த்தான்..... அந்த கரும் அரக்கு சேலையில் நல்ல மஞ்சள் பார்டர் வைத்த அந்த பட்டு சேலை அவள் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது......
“எப்புடி என்னோட செலக்சன்...... “என்றவன் பீரோவை திறந்து அன்று வாங்கிய நகையை எடுத்தவன்...”..ம்ம்ம்...போடு.....”.
“வேணாங்க.....உள்ளதே போதும்........”.
“ஏய் போடுடி நான் வாங்குனது எப்புடி இருக்குன்னு பாக்கவேணாமா.....” என்றபடி அவளுக்கு நெக்லஸ் போட்டு விட்டவன் அவள் கழுத்தில் முத்தமிட்டு.... அவள் கையில் வளையலை மாட்ட அவள் இரு கைக்கு முத்தமிட்டவன்....ச்சே....ச்சே... இவளுக்கு லிப்ஸ்டிக் வாங்கி குடுத்திருக்கலாம்.... அப்புடியே அத போட்டுவிட்டு முத்தமாச்சும் குடுத்துருக்கலாம் நாம இப்ப குடுத்த இவகேள்வி கேட்டே நம்மள சாகடிச்சுருவாளே.... என்று நினைத்தவனை.....
“ஏங்க......மறந்தே போயிட்டேன்.... உங்கள ஒரு போட்டோ எடுத்துக்கவா......”
“எதுக்கு....”
“இல்ல என்னோட காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் உங்கள பாக்கனும்னு சொன்னாங்க....” என்றபடி தன் செல்லை எடுத்து அவனை போட்டோ எடுக்க போக.....
“ஏய்... இரு வா ரெண்டுபேரும் சேந்து எடுத்துக்குவோம்”….. என்றபடி அவளை தன் தோள் வளைவிற்குள் கொண்டு வந்தவன்..... இருவரையும் வைத்து விதவிதமாக எடுத்து கொண்டிருந்தான்.....
“ஏங்க போதும் இப்புடியே விட்டா அடுத்த தீபாவளி வந்துரும் வாங்க …..”என்றபடி அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே வந்தாள்....
“அத்தே....நீங்களும் வரலாம்ல....”
“இல்லத்தா.....மாடு... கன்னுல்லாம் இருக்கு கொஞ்சம் வேலையிருக்கு....அதான் முத்துவையும் ராமனையும் வம்புபண்ணி கூட்டிக்கிட்டு போறியேத்தா.... பத்தரமா போய்ட்டு வாங்கத்தா.... கண்ணா பாத்துப்பா.....”
“ம்ம் சரிம்மா.......”
Last edited: