நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-21
கயல் படிக்கும் கல்லூரிக்கு கண்ணன் ஊரிலிருந்து அடிக்கடி பேருந்து இருக்காது...... கண்ணன் ஊருக்கு அருகில் இருக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் டவுன் பஸ்ஸோ அல்லது மினி பஸ்ஸோதான் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வரும்.... அதில்தான் வேலைக்கு சென்று வருபவர்கள்.... அன்றாட தேவைக்கு பொருள் வாங்கச் செல்பவர்கள்... சந்தைக்கு காய் கொண்டு செல்பவர்கள்.... காய் வாங்க.....செல்பவர்கள்..... மேலும் எட்டாம் வகுப்புக்கு மேலே படிப்பவர்கள்...... கயல் படிக்கும் கல்லூரி இருக்கும் ஊருக்கு சென்றுதான் படிக்க வேண்டும்..... அதனால் பஸ்ஸில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.......
கண்ணன் வீட்டில் கார் இருந்தாலும் அதை குடும்பமாக எங்காவது செல்லும் போதுதான் பயன்படுத்துவார்கள்...... கண்ணனும் வாசுவும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதால் மற்ற நேரங்களில் அதனையே பயன்படுத்துவார்கள்..... முத்துவும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று விடுவான்.......கயலும் தன் ஊரில் பஸ்ஸில் சென்று வந்ததால் அவளுக்கு இதுஒன்றும் பெரிதாக தெரியவில்லை....
கண்ணன் ஊரிலிருந்து இருபது...முப்பது பிள்ளைகள்..... கயலோடு பேருந்தில் வந்து முத்து படிக்கும் பள்ளியில் படிக்கின்றார்கள். கயலும் அவர்களோடு நன்கு பேசி பழகியதால்...... அவர்களும் அக்கா... அக்காவென்று சலசலவென்று பேசிக்கொண்டே வருவார்கள்...... கயலும் முன்பெல்லாம் அமுதாவோடு அரட்டை அடித்தபடி வருபவள்..... இப்போதெல்லாம் இந்த பிள்ளைகளுக்கு இணையாக பேசியபடி வருவாள்.......
கயலின் கல்லூரிக்கு அருகிலேயே பேருந்து நிலையம் இருப்பதால் அவள் நான்கு மணிக்கு கல்லூரி விடவும் அமுதாவோடு பேருந்து நிலையத்திற்கு வருபவள்..... நான்கு முப்பதுக்கு வரும் அந்த மினி பஸ்ஸில் ஏறி இருப்பாள்..... அடுத்த ஸ்டாப்பில் பள்ளி பிள்ளைகள் ஏறிவிடுவார்கள்...... கயல் கல்லூரிக்கு அருகில் புதிதாக ஒரு ஒயின்சாப் திறந்திருந்தார்கள்...... அன்றாட கூலி வேலைக்கு செல்லும் ஆண்கள் வாங்கிய கூலியில் பாதியை அந்த ஒயின்சாப்பில் குடித்து அழிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார்கள்...... காலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வருபவர்கள்..... திரும்பி வரும்போது..... எதையாவது.... உளறிக்கொண்டும்.... தேவையில்லாமல் அடுத்தவர்களோடு வம்பிழுத்து.....சண்டை போட்டுக்கொண்டும் வருவார்கள்.......
கயலுக்கும் காலையில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை...... மாலையில் வரும்போது அந்த நாத்தமே அவளுக்கு வாந்தி வருவதுபோல இருக்கும்......மேலும் அவர்கள் ஏதாவது உளறிக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் வருவதை பார்த்தால் பயமாக இருக்கும்..... கயலின் தந்தைக்கும்....தாமரையின் கணவருக்கும் குடிப்பழக்கம் இல்லை....... அதனால் குடிகாரர்கள்......தன்னை மறந்து பேசி வருவதை.... கண்ட இவளும் மற்ற பெண்பிள்ளைகளும் ஏதாவது தங்களுக்குள்....பேசி அரட்டை அடித்தாலும் கயலுக்கு பஸ்ஸைவிட்டு இறங்கினால்தான் மூச்சே..... வரும்.....அமுதாவோடு வரும்போது.... அவர்களுக்கு தெரிந்தவர்கள் கண்டிப்பாக யாராவது இருப்பார்கள்.......
சென்ற வாரத்தில் ஒருநாள்.... இவள் பிள்ளைகளோடு பேசியபடி வந்தவள்....அங்கிருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் பிள்ளை.... அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஒரு நடிகரோடு ஒப்பிட்டு அவர்கள் மாதிரி நடித்துக்காட்ட..... மற்ற அனைவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை..... அப்போது அந்த பெண் ஒருவரை காட்டி நடிகர் வடிவேல் மாதிரி நடித்துக்காட்ட..... இவளும் சிரித்தபடி அந்த ஆளை நிமிர்ந்து பார்க்க...... அவனோ.... கயல் தன்னைதான் பார்த்து சிரிப்பதாக நினைத்துக் கொண்டான்.....
அன்றிலிருந்து கயலை சைட் அடிப்பதை தவிர அவனுக்கு வேறு வேலையில்லை..... அவன் ஒரு வேலைவெட்டி இல்லாதவன்....சூதாடுவதும் ஏதாவது அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்கச் சொன்னால் அதற்கு ஆள் சேர்த்து கொடுத்து அரசியல்வாதிகளுக்கு கைகூலியாக திரிபவன்.... வேலை இல்லாத சமயங்களில் தன் இருசக்கர வாகனத்தில் சும்மா ஊரைச் சுற்றி வெட்டிபந்தா காட்டிவிட்டு நேராக ஒயின்சாப்பிற்கு செல்பவன்......ஆறு மணிவரை இருப்பவன்....பின் தன் வீட்டிற்கு கிளம்புவான்..... இன்று அவனுடைய வண்டி பஞ்சரானதால் அதை வேலைக்கு விட்டவன்.... வண்டி நாளைக்குதான் கிடைக்கும் என்று கடைபையன் சொன்னதால்.....அவனின் ஊருக்கு இந்த பஸ்ஸை விட்டால் மீண்டும் இரவு பத்து மணிக்கு என்பதால் அன்று அந்த பஸ்ஸில் ஏறியிருந்தான்.......
ஆனால் இந்த நிகழ்வுக்குபின்.... கயல் பஸ்டான்டில் நிற்கும் போது இவளை பார்த்து சிரித்தபடி இருக்க….
அமுதாவோ.....” ஏய் யாருடி இவன்..... உன்னைய பாத்து அப்பத்திலிருந்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்....”.
“ எவன்டி...” என்று அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தவள்....... இவன நேத்து பஸ்ல பாத்தமே........ என்று யோசித்தவள்......” இவன் ஒரு குடிகாரன்டி.... நேத்து பஸ்ல குடிச்சுப்புட்டு கம்பிய புடிக்க மாட்டேன்னு ஒரே..... அடம்..... பஸ்ல வந்த புள்ளங்க கூட....டிரைவர் அண்ணகிட்ட போய் அண்ணே.....ப்ளிஸ்..... வேகமா போய் பிரேக் புடிங்கண்ணே.... வடிவேலுமாதிரி பஸ்ஸுக்கு வெளிய போய் விழுகட்டும்னு சொன்னுச்சுக.......அந்த அண்ணே என்னனா......ஏம்மா....நான் புள்ளகுட்டிகாரன்....வீனா என்னைய போலிசுல மாட்டி விட்டுருவிக போலன்னு.......சொல்லிட்டாருடி......”.
அமுதா......” ம்ம்ம்…… அப்புடி விட்டுருந்தாக்கூட..... இந்நேரம் சங்கு ஊதிருப்பாங்கடி...... ஆனா இப்ப பாரு இவன் பார்வையே சரியில்லை...... அவன் மூஞ்சியும் முகரையும் தலைக்குள்ள நாலுகுருவிகூடு இருக்கும் போலடி...... எதுக்கும் பஸ்ல போகும் போது இவன்மேல கொஞ்சம் கவனமாவே இருடி.....”
“இவன்கிடக்குறான்டி....லூசுப்பய...... தேவையில்லாம இவனுக்கெல்லாம் ஓவர் பில்டப் குடுக்ககூடாதுடி........”
இவள் இப்புடி சொல்ல.......... அவனோ இந்த பொண்ணு நம்மள பத்திதான் என்னமோ பேசுது....... பாத்தா.....வெள்ளையா...... நல்ல அழகா.....இருக்கே....... இப்புடி இருக்குற புள்ளைகளுக்கு நம்மள மாதிரி உள்ளவங்களதானே பிடிக்கும்னு அன்னைக்கு ஒரு படத்துல பாத்தமே...... என்று கயலை பார்த்து ஒருமாதிரி இளித்து வைத்தான்.....கயல் அவனை கண்டுக்காமல் பஸ்ஸில் ஏறவும் இவனும் இவள் பின்னால் ஏறியிருந்தான்...... கயல் அடுத்த ஸ்டாப் வருவதற்குள்.....அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி வந்தான்....... பார்க்க...பார்க்க..... அவனுக்கு கயலை எப்புடியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியே ஏற்பட்டிருந்தது........
பக்கத்தில் இருந்த அவனுடைய கூட்டாளி.....” என்னப்பா..... அந்த பொண்ணையே பாத்துக்கிட்டு வார......”
“ஏண்டா.....பாத்தா.... என்ன...... நேத்து அந்த பொண்ணு என்னைய பாத்து சிரிச்சமாதிரி இருந்துச்சுடா......”
“ஏண்டா...... இது உனக்கே ஓவரா.....தெரியல...... உம்மூஞ்சிய நீ கண்ணாடியில பாத்தது இல்ல...... அந்த பொண்ணு என்ன கலரா...... அழகா..... இருக்கு...... ஆனா......அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா......”
“என்னது..... கல்யாணம் ஆகிடுச்சா.......”
“ஆமா..... எங்க பக்கத்தூருலதான் கட்டிக்குடுத்துருக்காங்கன்னு நினைக்கிறேன்...... அன்னைக்கு குன்னக்குடி கோயிலுல இந்த புள்ளய அவ புருசன் படியிலகூட இறங்க விடாம.....தூக்கிக்கிட்டு இறங்கி வந்தத நான் பாத்தேன்.....கூட வந்தவுக எல்லாம் எங்க பக்கத்து ஊருகாரங்க.........”
“கல்யாணம் எப்ப ஆச்சுடா.....”
“இருக்கும்.... அது ஒரு ரெண்டுமாசம் இருக்கும்டா......”
“ரெண்டு மாசம்தானே......நான்கூட.... ரெண்டுவருசம் ஆச்சோன்னு நினைச்சேன்...... பரவால்லடா.... எப்புடியாச்சும்.....அவள ஒருதடவையாவது அடையாம விடமாட்டேன்டா......” குடித்தில் அவனுக்கு சுயநினைவு இல்லாமல் கயலையே பார்க்ககூடாத இடங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்......
கயல் தலையை குனிந்திருந்தாலும் தன்னை யாரோ வெறிப்பதை உணர்ந்து.... சாலை ஒழுங்காக சரிபடுத்தினாள்........கயலை பொருத்தவரை எப்போதும் டிரஸை ஒழுங்காக போடுவாள்..... சிறுவயதிலிருந்தே...... பிள்ளைகள் மாடல் மாடலாக டிரஸ் போடும்போது இவளுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை.....கூட்டத்தில் தான் தனியாக தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்......
மறுநாளில் இருந்து அவன் தொல்லை ஒரு எல்லையில்லாமல் போய் கொண்டிருந்தது.. அவள் அருகில் வந்து உரசுவதும் ஒரு மாதிரியாக சிரிப்பதுமாக இருந்தான்...... இதை அந்த பள்ளிபிள்ளைகளும் கவனித்து இருந்தார்கள்.......” அக்கா..... அவன் பார்வையே....சரியில்லக்கா..... அவன் ஒருமாதிரியா பாக்குறான்கா.....”.
“இங்க பாருங்கப்பா..... இவன் குடிச்சிருக்கான்னு நினைக்குறேன்.......நாம கண்டுக்காம இருப்போம்.....” என்றபடி தங்களுக்குள் பேசி கொண்டிருந்தார்கள்....
வேண்டுமென்றே கயலை கவர்வதற்காகவே...... இவன் அங்கு பேசாமல் நின்றுக்கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் வம்பிழுக்க ஆரம்பிக்க....கயலும் அந்த பள்ளி பிள்ளைகளுமே பயந்து போயிருந்தனர்...... அவன் பேசிய பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை.....
மறுநாளில் இருந்து கயலிடம் நேரிடையாகவே..... பேச துவங்கியிருந்தான்......
“உன்னோட.....பேரு.... என்னம்மா....” என்று நேரிடையாக கேட்கவும்....கயல் உண்மையிலே பயந்து விட்டாள்...... மெதுவாக நழுவி முன்புறம் சென்றவள்..... அப்போது ஒரு பெண் சீட்டிலிருந்து எழவும்...... இவள் டக்கென்று அமர்ந்து கொண்டாள்........ அதிலிருந்து கயலுக்கு மாலை கல்லூரி விட்டு வருவது பெரும் சோதனையாகவே இருந்தது.......
அமுதாவோ......” ஏய் ...அவன பாத்தா.... எனக்கென்னமோ.....சரியாபடல....... கயலு..... ஒன்னு அண்ணன்ட்ட சொல்லு...... இல்லைனா உங்க அப்பாட்ட போன் பண்ணி சொல்லு இவனுக மாதிரி பாக்க சாதரணமா..... இருக்குறவங்கதாண்டி...... பொண்ணுகள லவ் பண்றேன் டார்ச்சர் குடுக்குறது...... ஒத்துவரலைனா......கத்தியாளா.....குத்துறதுன்னு நிறைய நடக்குது...... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு அவன் தெரிஞ்சும்..... அவன் இப்புடி பேசுறான்னா...... எனக்கென்னமோ....சரியா படல...... நீ இன்னைக்கே அண்ணகிட்ட சொல்லிரு......புரியுதா......”
அமுதா.... இவ்வளவு சொல்லும்போதும் அவன் நேற்று பஸ்ஸில் தன் அருகில் வந்தவன்.....” என்னமா.... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்ல.....பரவால்ல...ஒம் புருசன்.... அப்புடியே உன்னைய பூ போல கையாளுவான் போல....... அப்புடியே....புத்தம் புது ரோஜா மாதிரி இருக்க...... என்கிட்ட வா....... நீ போதும் போதும் சொல்லுர அளவுக்கு நான் உன்னைய விடாம என் கைக்குள்ள வச்சுக்குறேன்..... ஆனா உன் புருசன் மாதிரி சாப்டால்லாம் இருக்கமாட்டேன்.....நமக்கு எல்லாமே.....அடிதடிதான்......” என்று அவளின் லேசாக ஒதுங்கிய சாலை பார்த்தபடி சொன்னவனை பார்த்தவளுக்கு உண்மையில் கை காலெல்லாம் வெடவெடவென்று நடுங்க துவங்கியது........
“ஏய் கயலு என்ன....நான் சொன்னது புரிஞ்சதா.......”
“என்னடி.......”
“கிழிஞ்சது...... அண்ணகிட்ட சொல்லச் சொன்னேன்ல...... சொல்லிரு....”
“சொல்லிருவேன்டி....... ஆனா அவுகளே ரொம்ப கோபகாரவுக..... ஏதும் கைகலப்பு வந்துருமோன்னு பயமாயிருக்கு..... காலேஜ் சேரும் போதே.... அப்பா சொன்னாங்க...... நீ போறதும் தெரியக்கூடாது வாரதும் தெரியக்கூடாது....அப்புடி என்னமாச்சும் பிரச்சனை வந்தா முதல்ல படிப்பைதான் நிப்பாட்டுவேன்னு.........அதான்டி பெரிய யோசனையா... இருக்கு......”
“எனக்கென்னமோ......அண்ணன பாத்தா அப்புடி தெரியலடி.......”
அத்தியாயம்-21
கயல் படிக்கும் கல்லூரிக்கு கண்ணன் ஊரிலிருந்து அடிக்கடி பேருந்து இருக்காது...... கண்ணன் ஊருக்கு அருகில் இருக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் டவுன் பஸ்ஸோ அல்லது மினி பஸ்ஸோதான் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வரும்.... அதில்தான் வேலைக்கு சென்று வருபவர்கள்.... அன்றாட தேவைக்கு பொருள் வாங்கச் செல்பவர்கள்... சந்தைக்கு காய் கொண்டு செல்பவர்கள்.... காய் வாங்க.....செல்பவர்கள்..... மேலும் எட்டாம் வகுப்புக்கு மேலே படிப்பவர்கள்...... கயல் படிக்கும் கல்லூரி இருக்கும் ஊருக்கு சென்றுதான் படிக்க வேண்டும்..... அதனால் பஸ்ஸில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.......
கண்ணன் வீட்டில் கார் இருந்தாலும் அதை குடும்பமாக எங்காவது செல்லும் போதுதான் பயன்படுத்துவார்கள்...... கண்ணனும் வாசுவும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதால் மற்ற நேரங்களில் அதனையே பயன்படுத்துவார்கள்..... முத்துவும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று விடுவான்.......கயலும் தன் ஊரில் பஸ்ஸில் சென்று வந்ததால் அவளுக்கு இதுஒன்றும் பெரிதாக தெரியவில்லை....
கண்ணன் ஊரிலிருந்து இருபது...முப்பது பிள்ளைகள்..... கயலோடு பேருந்தில் வந்து முத்து படிக்கும் பள்ளியில் படிக்கின்றார்கள். கயலும் அவர்களோடு நன்கு பேசி பழகியதால்...... அவர்களும் அக்கா... அக்காவென்று சலசலவென்று பேசிக்கொண்டே வருவார்கள்...... கயலும் முன்பெல்லாம் அமுதாவோடு அரட்டை அடித்தபடி வருபவள்..... இப்போதெல்லாம் இந்த பிள்ளைகளுக்கு இணையாக பேசியபடி வருவாள்.......
கயலின் கல்லூரிக்கு அருகிலேயே பேருந்து நிலையம் இருப்பதால் அவள் நான்கு மணிக்கு கல்லூரி விடவும் அமுதாவோடு பேருந்து நிலையத்திற்கு வருபவள்..... நான்கு முப்பதுக்கு வரும் அந்த மினி பஸ்ஸில் ஏறி இருப்பாள்..... அடுத்த ஸ்டாப்பில் பள்ளி பிள்ளைகள் ஏறிவிடுவார்கள்...... கயல் கல்லூரிக்கு அருகில் புதிதாக ஒரு ஒயின்சாப் திறந்திருந்தார்கள்...... அன்றாட கூலி வேலைக்கு செல்லும் ஆண்கள் வாங்கிய கூலியில் பாதியை அந்த ஒயின்சாப்பில் குடித்து அழிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார்கள்...... காலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வருபவர்கள்..... திரும்பி வரும்போது..... எதையாவது.... உளறிக்கொண்டும்.... தேவையில்லாமல் அடுத்தவர்களோடு வம்பிழுத்து.....சண்டை போட்டுக்கொண்டும் வருவார்கள்.......
கயலுக்கும் காலையில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை...... மாலையில் வரும்போது அந்த நாத்தமே அவளுக்கு வாந்தி வருவதுபோல இருக்கும்......மேலும் அவர்கள் ஏதாவது உளறிக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் வருவதை பார்த்தால் பயமாக இருக்கும்..... கயலின் தந்தைக்கும்....தாமரையின் கணவருக்கும் குடிப்பழக்கம் இல்லை....... அதனால் குடிகாரர்கள்......தன்னை மறந்து பேசி வருவதை.... கண்ட இவளும் மற்ற பெண்பிள்ளைகளும் ஏதாவது தங்களுக்குள்....பேசி அரட்டை அடித்தாலும் கயலுக்கு பஸ்ஸைவிட்டு இறங்கினால்தான் மூச்சே..... வரும்.....அமுதாவோடு வரும்போது.... அவர்களுக்கு தெரிந்தவர்கள் கண்டிப்பாக யாராவது இருப்பார்கள்.......
சென்ற வாரத்தில் ஒருநாள்.... இவள் பிள்ளைகளோடு பேசியபடி வந்தவள்....அங்கிருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் பிள்ளை.... அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஒரு நடிகரோடு ஒப்பிட்டு அவர்கள் மாதிரி நடித்துக்காட்ட..... மற்ற அனைவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை..... அப்போது அந்த பெண் ஒருவரை காட்டி நடிகர் வடிவேல் மாதிரி நடித்துக்காட்ட..... இவளும் சிரித்தபடி அந்த ஆளை நிமிர்ந்து பார்க்க...... அவனோ.... கயல் தன்னைதான் பார்த்து சிரிப்பதாக நினைத்துக் கொண்டான்.....
அன்றிலிருந்து கயலை சைட் அடிப்பதை தவிர அவனுக்கு வேறு வேலையில்லை..... அவன் ஒரு வேலைவெட்டி இல்லாதவன்....சூதாடுவதும் ஏதாவது அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்கச் சொன்னால் அதற்கு ஆள் சேர்த்து கொடுத்து அரசியல்வாதிகளுக்கு கைகூலியாக திரிபவன்.... வேலை இல்லாத சமயங்களில் தன் இருசக்கர வாகனத்தில் சும்மா ஊரைச் சுற்றி வெட்டிபந்தா காட்டிவிட்டு நேராக ஒயின்சாப்பிற்கு செல்பவன்......ஆறு மணிவரை இருப்பவன்....பின் தன் வீட்டிற்கு கிளம்புவான்..... இன்று அவனுடைய வண்டி பஞ்சரானதால் அதை வேலைக்கு விட்டவன்.... வண்டி நாளைக்குதான் கிடைக்கும் என்று கடைபையன் சொன்னதால்.....அவனின் ஊருக்கு இந்த பஸ்ஸை விட்டால் மீண்டும் இரவு பத்து மணிக்கு என்பதால் அன்று அந்த பஸ்ஸில் ஏறியிருந்தான்.......
ஆனால் இந்த நிகழ்வுக்குபின்.... கயல் பஸ்டான்டில் நிற்கும் போது இவளை பார்த்து சிரித்தபடி இருக்க….
அமுதாவோ.....” ஏய் யாருடி இவன்..... உன்னைய பாத்து அப்பத்திலிருந்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்....”.
“ எவன்டி...” என்று அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தவள்....... இவன நேத்து பஸ்ல பாத்தமே........ என்று யோசித்தவள்......” இவன் ஒரு குடிகாரன்டி.... நேத்து பஸ்ல குடிச்சுப்புட்டு கம்பிய புடிக்க மாட்டேன்னு ஒரே..... அடம்..... பஸ்ல வந்த புள்ளங்க கூட....டிரைவர் அண்ணகிட்ட போய் அண்ணே.....ப்ளிஸ்..... வேகமா போய் பிரேக் புடிங்கண்ணே.... வடிவேலுமாதிரி பஸ்ஸுக்கு வெளிய போய் விழுகட்டும்னு சொன்னுச்சுக.......அந்த அண்ணே என்னனா......ஏம்மா....நான் புள்ளகுட்டிகாரன்....வீனா என்னைய போலிசுல மாட்டி விட்டுருவிக போலன்னு.......சொல்லிட்டாருடி......”.
அமுதா......” ம்ம்ம்…… அப்புடி விட்டுருந்தாக்கூட..... இந்நேரம் சங்கு ஊதிருப்பாங்கடி...... ஆனா இப்ப பாரு இவன் பார்வையே சரியில்லை...... அவன் மூஞ்சியும் முகரையும் தலைக்குள்ள நாலுகுருவிகூடு இருக்கும் போலடி...... எதுக்கும் பஸ்ல போகும் போது இவன்மேல கொஞ்சம் கவனமாவே இருடி.....”
“இவன்கிடக்குறான்டி....லூசுப்பய...... தேவையில்லாம இவனுக்கெல்லாம் ஓவர் பில்டப் குடுக்ககூடாதுடி........”
இவள் இப்புடி சொல்ல.......... அவனோ இந்த பொண்ணு நம்மள பத்திதான் என்னமோ பேசுது....... பாத்தா.....வெள்ளையா...... நல்ல அழகா.....இருக்கே....... இப்புடி இருக்குற புள்ளைகளுக்கு நம்மள மாதிரி உள்ளவங்களதானே பிடிக்கும்னு அன்னைக்கு ஒரு படத்துல பாத்தமே...... என்று கயலை பார்த்து ஒருமாதிரி இளித்து வைத்தான்.....கயல் அவனை கண்டுக்காமல் பஸ்ஸில் ஏறவும் இவனும் இவள் பின்னால் ஏறியிருந்தான்...... கயல் அடுத்த ஸ்டாப் வருவதற்குள்.....அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி வந்தான்....... பார்க்க...பார்க்க..... அவனுக்கு கயலை எப்புடியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியே ஏற்பட்டிருந்தது........
பக்கத்தில் இருந்த அவனுடைய கூட்டாளி.....” என்னப்பா..... அந்த பொண்ணையே பாத்துக்கிட்டு வார......”
“ஏண்டா.....பாத்தா.... என்ன...... நேத்து அந்த பொண்ணு என்னைய பாத்து சிரிச்சமாதிரி இருந்துச்சுடா......”
“ஏண்டா...... இது உனக்கே ஓவரா.....தெரியல...... உம்மூஞ்சிய நீ கண்ணாடியில பாத்தது இல்ல...... அந்த பொண்ணு என்ன கலரா...... அழகா..... இருக்கு...... ஆனா......அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா......”
“என்னது..... கல்யாணம் ஆகிடுச்சா.......”
“ஆமா..... எங்க பக்கத்தூருலதான் கட்டிக்குடுத்துருக்காங்கன்னு நினைக்கிறேன்...... அன்னைக்கு குன்னக்குடி கோயிலுல இந்த புள்ளய அவ புருசன் படியிலகூட இறங்க விடாம.....தூக்கிக்கிட்டு இறங்கி வந்தத நான் பாத்தேன்.....கூட வந்தவுக எல்லாம் எங்க பக்கத்து ஊருகாரங்க.........”
“கல்யாணம் எப்ப ஆச்சுடா.....”
“இருக்கும்.... அது ஒரு ரெண்டுமாசம் இருக்கும்டா......”
“ரெண்டு மாசம்தானே......நான்கூட.... ரெண்டுவருசம் ஆச்சோன்னு நினைச்சேன்...... பரவால்லடா.... எப்புடியாச்சும்.....அவள ஒருதடவையாவது அடையாம விடமாட்டேன்டா......” குடித்தில் அவனுக்கு சுயநினைவு இல்லாமல் கயலையே பார்க்ககூடாத இடங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்......
கயல் தலையை குனிந்திருந்தாலும் தன்னை யாரோ வெறிப்பதை உணர்ந்து.... சாலை ஒழுங்காக சரிபடுத்தினாள்........கயலை பொருத்தவரை எப்போதும் டிரஸை ஒழுங்காக போடுவாள்..... சிறுவயதிலிருந்தே...... பிள்ளைகள் மாடல் மாடலாக டிரஸ் போடும்போது இவளுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை.....கூட்டத்தில் தான் தனியாக தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்......
மறுநாளில் இருந்து அவன் தொல்லை ஒரு எல்லையில்லாமல் போய் கொண்டிருந்தது.. அவள் அருகில் வந்து உரசுவதும் ஒரு மாதிரியாக சிரிப்பதுமாக இருந்தான்...... இதை அந்த பள்ளிபிள்ளைகளும் கவனித்து இருந்தார்கள்.......” அக்கா..... அவன் பார்வையே....சரியில்லக்கா..... அவன் ஒருமாதிரியா பாக்குறான்கா.....”.
“இங்க பாருங்கப்பா..... இவன் குடிச்சிருக்கான்னு நினைக்குறேன்.......நாம கண்டுக்காம இருப்போம்.....” என்றபடி தங்களுக்குள் பேசி கொண்டிருந்தார்கள்....
வேண்டுமென்றே கயலை கவர்வதற்காகவே...... இவன் அங்கு பேசாமல் நின்றுக்கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் வம்பிழுக்க ஆரம்பிக்க....கயலும் அந்த பள்ளி பிள்ளைகளுமே பயந்து போயிருந்தனர்...... அவன் பேசிய பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை.....
மறுநாளில் இருந்து கயலிடம் நேரிடையாகவே..... பேச துவங்கியிருந்தான்......
“உன்னோட.....பேரு.... என்னம்மா....” என்று நேரிடையாக கேட்கவும்....கயல் உண்மையிலே பயந்து விட்டாள்...... மெதுவாக நழுவி முன்புறம் சென்றவள்..... அப்போது ஒரு பெண் சீட்டிலிருந்து எழவும்...... இவள் டக்கென்று அமர்ந்து கொண்டாள்........ அதிலிருந்து கயலுக்கு மாலை கல்லூரி விட்டு வருவது பெரும் சோதனையாகவே இருந்தது.......
அமுதாவோ......” ஏய் ...அவன பாத்தா.... எனக்கென்னமோ.....சரியாபடல....... கயலு..... ஒன்னு அண்ணன்ட்ட சொல்லு...... இல்லைனா உங்க அப்பாட்ட போன் பண்ணி சொல்லு இவனுக மாதிரி பாக்க சாதரணமா..... இருக்குறவங்கதாண்டி...... பொண்ணுகள லவ் பண்றேன் டார்ச்சர் குடுக்குறது...... ஒத்துவரலைனா......கத்தியாளா.....குத்துறதுன்னு நிறைய நடக்குது...... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு அவன் தெரிஞ்சும்..... அவன் இப்புடி பேசுறான்னா...... எனக்கென்னமோ....சரியா படல...... நீ இன்னைக்கே அண்ணகிட்ட சொல்லிரு......புரியுதா......”
அமுதா.... இவ்வளவு சொல்லும்போதும் அவன் நேற்று பஸ்ஸில் தன் அருகில் வந்தவன்.....” என்னமா.... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்ல.....பரவால்ல...ஒம் புருசன்.... அப்புடியே உன்னைய பூ போல கையாளுவான் போல....... அப்புடியே....புத்தம் புது ரோஜா மாதிரி இருக்க...... என்கிட்ட வா....... நீ போதும் போதும் சொல்லுர அளவுக்கு நான் உன்னைய விடாம என் கைக்குள்ள வச்சுக்குறேன்..... ஆனா உன் புருசன் மாதிரி சாப்டால்லாம் இருக்கமாட்டேன்.....நமக்கு எல்லாமே.....அடிதடிதான்......” என்று அவளின் லேசாக ஒதுங்கிய சாலை பார்த்தபடி சொன்னவனை பார்த்தவளுக்கு உண்மையில் கை காலெல்லாம் வெடவெடவென்று நடுங்க துவங்கியது........
“ஏய் கயலு என்ன....நான் சொன்னது புரிஞ்சதா.......”
“என்னடி.......”
“கிழிஞ்சது...... அண்ணகிட்ட சொல்லச் சொன்னேன்ல...... சொல்லிரு....”
“சொல்லிருவேன்டி....... ஆனா அவுகளே ரொம்ப கோபகாரவுக..... ஏதும் கைகலப்பு வந்துருமோன்னு பயமாயிருக்கு..... காலேஜ் சேரும் போதே.... அப்பா சொன்னாங்க...... நீ போறதும் தெரியக்கூடாது வாரதும் தெரியக்கூடாது....அப்புடி என்னமாச்சும் பிரச்சனை வந்தா முதல்ல படிப்பைதான் நிப்பாட்டுவேன்னு.........அதான்டி பெரிய யோசனையா... இருக்கு......”
“எனக்கென்னமோ......அண்ணன பாத்தா அப்புடி தெரியலடி.......”