தோல்வியில் ஒரு துவக்கம்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer


"இன்பமும்

துன்பமும்
சமமாய் செல்கையில்
சறுக்கல் ஒன்று
சட்டென வாழ்க்கையில்
வந்திட
சூழ்ந்திருந்த சொந்தங்கள்
எல்லாம்
சடுதியில் சற்றுத்தொலைவில்
சுத்தமாய் புரியவில்லை
சுற்றி நடப்பது
என்னவென்று"


"அறியாத குழந்தையாய்
என் அகத்திடம்
நான் கேட்க


அதுவும்
அமைதி காத்தது
விடை தெரியாமல்"



"அகிலம்
அதற்கு
அர்த்தம் சொன்னது
இது தான்
தோல்வியென"


"ஏது செய்வது
அடுத்து என
எதுவும் புலப்படவில்லை
எனக்கு"


"தோல்விடமே
கேட்டேன்
நீ துயரம் தந்தது
ஏன் என"


"தோல்வி
என் தோள்
தட்டி சொன்னது
உனக்கு தோள்
தருவது
யாரென
என்னால்
அறிந்துகொள்
என்று"



"அழுகையில்
கரையாதே
நீ
அறிந்திட இங்கு
ஆயிரம் உண்டு
அதை தேடு
என்றது"


"தோல்வியின்
பேச்சில்
ஒரு தெளிவு
என்னுள்”



“எழுந்தேன்
எது நம்மை
கவிழ்த்தது என்று
சிந்தித்தேன்"


"சந்தேகமே இன்றி
சொன்னது நெஞ்சம்
வஞ்சம் கொண்ட
உறவினர்கள் என்று"


"உண்மை உறவென்று
ஒன்றும் இங்கில்லையோ
என எண்ணினேன்
உண்டு அது உலகத்தில்
உற்ற துணையாய்
காத்திடும் நம்மை அது
துயரத்தில்
என


நன்றாய் உரைக்கும்படி

என் அறிவு
சொன்னது"


"தோல்வியிலும்
ஒரு
துவக்கம் கண்டேன்
தொடர் ஓட்டம்
ஓடும்
வழி கண்டேன்"


"ஓடுகிறேன்
தோல்வியின்
பின் இருக்கும்
வெற்றியின்
வழி அறிந்திட"


"செல்லும்
வழியில் ஆயிரம்
செய்திகள்
அழகாய் அதை
அறிவு பதிவு
செய்து கொண்டது"


"பதிவில்
பிடித்தது
இங்கு
எதுவும்
நிரந்தரமில்லை
என்பது
நிரந்தரம் "




"ஒரு
புத்துணர்ச்சி
புது முயற்சி
பயிற்சியோடு
முயற்ச்சிக்கிறேன்
வெல்வேன் எனும்
நம்பிக்கையில்"


"வெற்றி வரவில்லையெனினும்
வேகம் வந்துவிட்டது
என்னுள்
எதிர்த்து நிற்பது
எமனாகினும்
அவனுக்கு
சமமாகிட"


"சடுதியில் வந்த
மாற்றமிதில்
சாதனையை
சந்திப்பேனோ?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
// ஓடுகிறேன்
தோல்வியின்
பின் இருக்கும்
வெற்றியின்
வழி அறிந்திட"


விரைவில் வலி மாறி வழி பிறக்கும் :)

//வெற்றி வரவில்லையெனினும்
வேகம் வந்துவிட்டது
என்னுள்
எதிர்த்து நிற்பது
எமனாகினும்
அவனுக்கு
சமமாகிட


நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் (y)(y)

//சடுதியில் வந்த
மாற்றமிதில்
சாதனையை
சந்திப்பேனோ?


சந்தேகமே வேண்டாம்.. :)

superb kani dear!! i always enjoy reading ur poems. romba rasichu padipen :love::love:
keep rocking
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
// ஓடுகிறேன்
தோல்வியின்
பின் இருக்கும்
வெற்றியின்
வழி அறிந்திட"


விரைவில் வலி மாறி வழி பிறக்கும் :)

//வெற்றி வரவில்லையெனினும்
வேகம் வந்துவிட்டது
என்னுள்
எதிர்த்து நிற்பது
எமனாகினும்
அவனுக்கு
சமமாகிட


நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் (y)(y)

//சடுதியில் வந்த
மாற்றமிதில்
சாதனையை
சந்திப்பேனோ?


சந்தேகமே வேண்டாம்.. :)

superb kani dear!! i always enjoy reading ur poems. romba rasichu padipen :love::love:
keep rocking
thank you akka love you
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top