Yeah, that was what I'd mentioned...
Hero character காக மகாம்மா character அ assasinate செய்ய தேவை இருக்கல ன்னு தான் சொன்னேன்...
அது கதை போக்குலயே justify ஆகிடுச்சி once Karthigai started to accept him...
கார்த்திகாக்கு அவனை accept பண்ணிக்கொள்வதைத் தவிர வேற option இல்லை. பின்னாளில் அவனது குணத்தை அவளது பக்குவமான யோசிக்கும் திறன், அவளுக்கு புரிய வைக்கிறது.
கிட்டதிட்ட அவளோட அம்மா கோவப்படற மாதிரி தான் இவனும் அவளுக்கு தெரியறான் ஆரம்பத்தில். போகப்போக அவன் இவளோட சுயவிருப்பதிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் இவனை அவ பார்வையில் மேம்படுத்திக்காட்டுது, அவனை கொஞ்சம் உரிமையோட பார்க்க வைக்குது.
கார்த்திகா மாதிரி ஒரு பொண்ணு அவங்க அப்பா சொன்ன வசந்தை கல்யாணம் செய்திருந்தாலும் அவ தன் நிதானத்தால வாழ்க்கையை நல்லாவே வாழ்ந்துருப்பா. I mean அவள் best one choose பண்ணிக்கொள்ளும் சலுகை வாய்த்தவளில்லை. தனக்கு கிடைத்ததை ஏற்றுக்கொண்டு அதை எப்படி best ஆக்கிக்கலாம் என்று யோசித்து செயல்படும் நிதானம் கொண்டவள்.
நான் சொல்ல வருவது ஹீரோ தப்பு செஞ்சாலும் அதை தப்புன்னு கேள்வி கேட்க உரிமை உள்ளவங்க கேட்கணும். கேட்கும்படியான காட்சிகள் கதையில் வரவேண்டும்.
அவளை இவன் கடத்தி கொண்டு போன உண்மை தெரிய வரும் போது, மஹா என்ன கதிர் கூட கேள்வி கேட்க உரிமை உள்ளவன் தான், ஏனென்றால் அவன் அவசரமா பண்ணிக்கிட்டாலும் அவனை விரும்பினவளைத் தான் கல்யாணம் செய்து கொண்டான். அது abduction category-யில வராது. So அவனுக்கு தங்கை மேல அக்கறை இல்லைங்கிறதெல்லாம் secondary justifications. முதலில் அவனுக்கோ அவங்க அம்மாக்கோ குமரனை, (பிரியா மற்றும் ராணியை ) கார்த்திகாக்கு செஞ்ச அநீதிக்கு கேள்வி கேட்க கூட தோணாத அளவுக்கு தான் கதையில் காட்சி(கள்) வருது(இல்லை).
இது எப்படி இருக்கு தெரியுமா ஒரு கோடு போட்டு அதை சின்னக்கோடா காட்ட பக்கத்துல அதை விட ஒரு பெரிய கோடு போடுவது போல தான். அதை தான் நான் சொன்னேன்.