மிகவும் அருமையான பதிவு மகேஷ்
.இங்கே பேசுனா அது எல்லாரையும் பாதிக்கும் நம்ம வீட்ல பேசிக்கலாம்னு இவனே சொல்லிட்டு,இப்போ பேசித்தான் ஆகனும்னு வீம்பு புடிக்கிறான்
.என்னது...இவ வாய கடிச்சு வச்சா என்னனு சின்ன புள்ள மாதிரி யோசிக்கிறான்
.
நோட்டீஸ் அனுப்புனது பத்தி அனுட்ட சொல்லிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது
.
அவ வருத்தப்படுவான்னு ஜெய் சொல்லாம இருக்க,கிழவி அதை சொல்லி காட்டவும் அந்த நேரம் கோபத்தில் வீட்டை விட்டு கிளம்பிட்டேன்னு சொன்ன பிறகும் ரொம்பவும் சிலுத்துக்கறான்
.
திருமணத்துக்கு பிறகு முதன் முதலாக அன்னம் வீட்டில் இருந்து வந்திருப்பவர்களுக்கு விருந்து சமைத்து தேவகி அசத்த
,மங்களம்,தேவகி குடும்பத்தினருக்கு ஜெய்யின் அத்தைகளால் எந்த அவமானமும் வரக்கூடாது என அவரை இதுவரை அழைக்கவில்லை என ஜெய்யிடம் சொன்னதை
கேட்டு மங்களத்தின் நல்ல மனதை புரிந்து வியப்பில் தேவகி
.
ஜெய்,அனுக்கு ஜூனியர் வரப்போற சந்தோஷத்தில் அனைவரும் மகிழ்ச்சியில்
.அனுக்கு
இந்த நேரம் மனநிம்மதி தேவை,அது இங்கே கிடைக்காது என தன்னுடன் அழைத்து செல்லும் ஜெய்
அவளை பார்த்து பார்த்து கவனித்து கொள்வது அருமை
.
வீராசாமிக்கு பொண்ணு தர ஆளுங்க லைன்ல நிக்கறாங்களா
.கவிய அழைச்சுட்டு போனது மாமாங்களுக்கு ஆப்பு வைக்க தானா
.ரம்யா அவங்களுக்கு ஒரு துருப்பு சீட்டு போல என ஜெய் சொன்னதை புரிந்து ரம்யா அவர்களிடமிருந்து ஒதுங்கி நின்றதே சந்தோஷம்
.
இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என நினைக்க,பிரசவத்திலும் மனைவியுடன் இருந்து இப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்க வைத்து விட்டான்
.
திருமணம் ஆனதும் ஜெய் அப்பா மேல் கொண்ட கோபத்திலும்,தன் கனவுக்காகவும்,மனைவியை விட்டு பிரிந்துசெல்ல,அதனால் அன்னம் படும் கஷ்டங்கள், ஜெய்யுடன் சேர்ந்ததை எடுத்து சொன்ன விதம் அருமை
.கதையை சீக்கிரம் முடித்தது போல தோனுது
.கவி, ரூபி ஜோடி சேர்வார்கள் என நினைத்தேன்
.
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.இனிமையான முடிவு.வாழ்த்துக்கள் மகேஷ்