சித்திரையில் பிறந்த சித்திரமே 8

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 8
நிச்சயம் எல்லோரும் தனிதனியாக நின்று பேசி கொண்டிருக்க லெட்சுமியும்,கீர்த்தியும் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த உதயா அதை கேட்டான் ( ஒட்டு கேட்குது பயப்புள்ள )
“ லெட்சு நீ கரஸ்ல கூட கோர்ஸ் பண்ணலாம்ல டா ,இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியெ இருக்க போற சொல்லு “ என கேட்க
“ என்னடா கீது நீயும் இப்டி பேசுற நான் என்ன வேணும்னே வாடா இப்படி
பண்றேன் தம்பி நான் போலிஸ் ட்ரெயினிங் போறேன் அப்படினு சொல்றான் அம்மாவாலையும் நிறைய வேலை பார்க்க முடியாது,இந்த மாதிரி சமயத்துல முதல்ல குடும்பத்த பாப்போம் அப்புறம் மத்தத பத்தி யோசிப்போம் “ என லெட்சுமி கூற
“ இல்லை பாப்பு நீ பின்னாடி ஃபீல் பண்ணுவடா நம்ம படிச்சுருக்கலாம்னு “
டாடி உயிரோட இல்லைங்கறத தவிர வேற எந்த கவலையும் என்ன பாதிக்காது டா கீது,இப்போ இந்த நிமிஷம் அம்மா இறந்தாகூட நான் அந்த அளவுக்கு ஃபீல் பண்ணாலும் இந்த அளவுக்கு வேதனைபட மாட்டேன் டா கீது “
“ அப்பா இறந்த்து எல்லா விதத்துலையுமே என்ன பாதிச்சுருச்சுடா என்னோட படிப்பு போய்,நான் எவ்ளோ நேசிச்சு ஒவ்வோரு பேச்சு போட்டிக்கும் போய் எல்லா மேடையையும் எனக்கான மேடையா மட்டும் பண்ணணோ அது எதுமே இப்போ இல்ல,அது மட்டும் இல்ல இனிமே மேடை ஏறி என்னால பேச முடியுனு கூட தோணலை கீது,நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு தலை கீழா ஒரு லைப் டா இது,எதை பத்தியும் யோசிக்காம
பணம் அப்படின்ற ஒரு விஷயத்துக்கே கவலை படாம இருந்த நான் தாண்டா இன்னைக்கு பணத்துக்காக வேலைக்கு போய் கஷ்டப்படுறேன்,அதுவும் இந்த வசயல வேலைக்கு போகும் போது எல்லாரோட பார்வையும் ஓரெ மாதிரியும் இருக்காது டா,இதெல்லாம் விட
வேற எந்த வகையிலயாவது கஷ்ட படுவேன்னு நினைக்கிற “
என அழுகையுடன் லெட்சுமி நிறுத்த கண்ட அவள் அக்காவிற்க்கு
” தன் நெஞ்சில் ஆணி வைத்து யாரோ ஓங்கி குத்துவது போன்ற ஓரு உணர்வு “
இது எல்லாத்தையும் வைச்சுக்கிட்டு எப்படி பாப்பு இப்படி நார்மல் இருக்கிற மாதிரி இருக்க “ என கீர்த்தி கேட்க
“ அதுவா கீது செல்லக்குட்டி l
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
இந்த பாட்டை வைச்சு தான் டா “ என கூற
“ சாரி பாப்பு நான் எதாவது உன் மனசை கஷ்டபடுத்திருந்தா சாரி “என கூற
“போடி லூசு சரி வா உன்னோட ஆளு என்ன பண்ணுறார்ருனு பார்க்கலாம்”
என கூறி இழுத்து சென்றால்.
இவை எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த உதயாவுக்கு தான் “இனிமே இவளுக்கு ஒரு அப்பாவா நம்ம இருக்கனும் “
என உறுதிமொழி எடுத்து கொண்டான் (இப்ப தான் சார் நீங்க உண்மையான ஹிரோ)
(இங்கு ஒரு வழியாக அர்ஜுன் கீர்த்தி கிட்ட பேசப்போறரு பா
என்னனு கேட்ப்போம் சாரி படிப்போம்)
“ ஹாய் என் பெயர் அர்ஜுன் ”உன் பெயர் “
“ கீர்த்தி “
‘ இங்க பாரு கீர்த்தி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு சும்மா ஸுகூல் பையன் மாதிரி கையில லவ் லெட்டர் வைச்சுக்கிட்டு உன் பின்னாடி சுத்த முடியாது “என கூற
“ ஏன் சார்க்கு அது கூட பண்ண முடியாதோ “ என கீது கேட்க
அதெல்லாம் நீ என்ன லவ் பண்னுரியானு தெரிஞ்சுக்கனும்னா தான்
எனக்கு தான் அது தெளிவாவே தெரியுமே நீ என்ன தான் லவ் பண்ணுரெனு அப்ரம் என்ன “
“ அதெல்லாம் இல்ல நான் உங்கள எல்லாம் லவ் பண்ணலை “
“ ஓ அப்டியா மேடம் ஒன்னும் பிரச்சனை இல்ல கல்யாணம் பண்ணி உன்ன அமெரிக்கா கூட்டிட்டு போய் அங்க என்னோட பொண்ணு பிறக்கற வரைக்கும் லவ் பண்ணலாம், அப்படி இல்லைனா அடுத்து ஒரு பையன் பெத்து நம்ம லவ் பண்ணலாம் கீது “ என கூறி சிரிக்க
“ என்னது “ என விழி விரித்து கேட்டவளின் விழி விரிந்த அழகில் கவரபட்டவனாய்
அவளை இழுத்து அவள் கண்களில் முத்தமிட்டு
” ஐ லவ் யூ டி என் பொண்டாட்டி “
என கூறியவனிடம் இது எப்போல இருந்து என நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டு கேட்டவளிடம்
“ எது டி ‘ என வினவ
“ இந்த பொண்டாட்டி தான் “
அதுவா இப்போ தான் இரண்டு வீட்டுலையும் சம்மதம் சொன்னாங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்ச அடுத்த முகூர்த்தத்துல நமக்கு கல்யாணம்”
அவள் மறுபடியும் விழிவிரிக்க ஏய் கண்ண விரிச்சு விரிச்சு என்ன கெட்ட பையன் ஆக்காதடி கல்யாணம் வரைக்கும் உன் மாமாவ நல்ல பிள்ளை கெத்த மெயிண்டையின் பண்ண விடுடி பிளிஸ் “
என கூற
“ சரி பொழைச்சு போங்க போங்க “ என கூற
இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
(சரி நம்ம ஹிரோவ எங்க ஆளையே காணோம் இந்தா இருக்கான்)
அங்கு ஒரு மறைவான இடத்துல லெட்சுமிய குறுக்கு விசாரணை பண்ணி கொண்டிருந்தான் உதயா
“ உன் பெயர் என்ன “
‘ லெட்சுமி “
ஹம் லெட்சுமி நான் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்
“ அதுக்கு முன்னால நான் யாருனு சொல்லிடுறென் “
“ நான் மாப்பிள்ளையோட தம்பி பேரு உதயா ஐபிஸ் முடிச்சுருக்கேன் இப்போ கையர் போஸ்டிங்காக வைட் பண்ணிக்கிட்டு இருக்கேன் “
“ ஸ்டாப் இதெல்லாம் என் கிட்ட ஏன் சொல்லுறீங்கனு தெரிஞ்சுக்கலாமா “
“ நாளைக்கு உன்னோட புருசன் என்ன பண்ணுறானு கேட்டா நீ சொல்லனும் இல்ல அதுக்காக தான் “
“ உங்களுக்கு என்ன பைத்தியமா நீங்க இப்படி பேசுறது எங்க வீட்டுக்கு தெரிஞ்சது உங்கள என்ன பண்ணுவாங்கனு தெரியுமா “
புருசன் பொண்டாட்டிக்குள்ள வேற யாரும் வர மாட்டாங்க டி என் கருவா டார்லிங் ”
“ஆமா இவர் அப்படியே பால் கலரு சொல்ல வந்துட்டாரு “
“ அப்பறம் கருவா டார்லிங் நமக்கு இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் இரண்டு வீட்டுலயும் பேசி சம்மதம் வாங்கியாச்சு “
“ என்ன எல்லாருமா சேர்ந்து விளையாடுறிங்களா என்னை கேட்காம என்னோட கல்யாணத்த முடிவு பண்ண நீங்க யாரு?
இப்போவே போய் இந்த கல்யாணத்த நிறுத்த போறேன் “
என வேகமாய் கிளம்பியவளின் கைகளை பிடித்து இழுத்தவன்
“ உன்ன நல்லா தெரிஞ்சுக்கோ நீ தான் என் பொண்டாட்டி நா தான் உன் புருசன் இதை எவனாலையும் மாத்த முடியாது உன் தம்பி போலிஸ் டிரைனிங் அட்டன் பண்ணனும்னா அவன் மேல கேஸு இருக்க கூடாது
புரிஞ்சுதா “
“ உன் தம்பி வாழ்க்கை உன் கையில வரட்டா மாமா உன்னை அப்றம் பாக்குறேன் “
என கூறி விட்டு நகர்ந்தவனை கண்டு அவள் கால்கள் நகர மறுத்தன
“ சாரிடி கருவா உன்னை சம்மதிக்க வைக்க எனக்கு வேற வழி தெரியல் நீ வீட்ல சம்மதம் கேட்கும் போது மாட்டேன்னு சொல்லிருவியோ அப்படின்ற பயத்துல தாண்டி உன் கிட்ட அப்படி பேசுணேன் கண்டிப்பா என்ன ஒரு நாள் உனக்கு புரிய வைப்பேண்டி சாரிடி”
எனக் கூறிக் கொண்டே சென்றவனுக்கு தெரியாது தன்னவளின் எண்ண ஓட்டத்தை பற்றி
அது தெரியும் போது நம்ம வாழ்கைக்கு நம்மளே குழிதோண்டிக்கொண்ட உணர்வு வரும் என்பது மறுக்க முடியாத உண்மை
சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top