ஹாய் friends அடுத்த கதையோட வந்துட்டேன். இந்த தடவ இலங்கை பக்கம் போலாமா?
சாருமதி
"அடியேய் சாரு. எழுந்திருடி... கடைக்கு போக வேணாம்? அம்மா இல்லாத பொண்ணுன்னு பாசம் காட்டினா. தலைல ஏறி உக்காந்து வீட்டு வேல ஒன்னத்தையும் செய்யிறது இல்ல. கேட்டா கடைக்கு போயிட்டு வந்தா டயடா இருக்காம். நான் மட்டும் தேல காட்டுல கொழுந்து பரிச்சிட்டு வரேன் எனக்கு டயடா இல்லையா?" பஞ்சவர்ணம் தனது கீச்சுக்க குரலில் கத்திக் கொண்டே இருக்க,
"சே நிம்மதியா தூங்க விடுறாளா? காலங்காத்தால ஆரம்பிச்சிடுறாளே" முணுமுணுத்த சாருமதி காலுக்கு வைத்திருந்த தலையணையை தூக்கி தலையில் வைத்து, தலையை மூடி படுத்துக் கொண்டாள்.
"கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போனாதான் தெரியும். மாமியார்காரி மண்டையிலையே போட்டு வேல வாங்கும் போது விளங்கும்" வளமை போல் விடாது தூற்றலானாள் பஞ்சவர்ணம்.
"நீ கவலை படாத சாரு நான் உனக்கு வாழ்க தரேன்" பாதி சவரம் செய்த முகத்தோடு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தவாறு அவள் அத்தை பெத்த ஒரே செல்ல மகன் முத்து அன்னையை மேலும் உசுப்பேற்றி விட்டான்.
"ஆமான்டா நான் சாகுறவரைக்கும் இவளுக்கு சேவகம் செய்யணும் இல்ல. வந்தேன்னாவை சவரம் செய்யிற கத்தியாலையே உன் கழுத்த வெட்டுறேன். எனக்கு மருமகளா வரவேண்டிய வீட்டு வேல செய்ய கூடியவளா இருக்கணும். இவள மாதிரி சோம்பேறியா இருக்கக் கூடாது" பஞ்சவர்ணம் கத்த
"அத்த கத்தாதே, நான் எல்லாம் உன் பையன கல்யாணம் பண்ண மாட்டேன். வாழ்க கொடுக்குற மூஞ்சிய பாரு. நான் கல்யாணம் பண்ண போறவன் பெரிய பணக்காரனா இருப்பான். பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறேனா இல்லையானு பாரு" போர்வையை உதறியவாறே எழுந்தவள் குளியலறைக்கு சென்றாள்.
"ஆமா இவ பெரிய மஹாராணி. பணத்துலையே பிறந்து பணத்துலையே வளர்ந்தவ. ராஜகுமாரன் குதிரைல வந்து கடத்திட்டு போய் கல்யாணம் பண்ண போறான். பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்கா பழைய சோறு சாப்பிடுற கழுத. இவளுக்கு நானே என் பையன கட்டி வைக்க யோசிக்கிறேன். யாரு இவள கட்டிக்க போறானோ? அவன் நிலம பாவம்தான்" உச்சக்கொட்டிவிட்டு மீண்டும் சமயலறைக்குள் நுழைந்தாள் பஞ்சவர்ணம்.
லஹிரு துஷார வீரசிங்க
"எனக்கும் வேல இருக்கு சித்தி. அது மட்டுமா? பாட்டி மட்டும்தான் வீட்டுல தனியா இருக்காங்க. அவங்க கண்டிய விட்டு எங்கயும் போறதுமில்லை. இந்த வயசுலயும் டீ எஸ்டேட்டையெல்லாம் அவங்க தானே நிர்வாகிக்கிறாங்க. அதனாலயே அவங்க வர்றதுமில்லை. அவங்களும் கூட வந்திருந்தா நானும் ரெண்டு நாள் என்ன ஒரு வாரம் கூட தங்கி இருப்பேனே" என்றான் லஹிரு.
என்னதான் அவன் காரணத்தோடு விளக்கம் கொடுத்தாலும், மெனிகேவின் மனம் ஏற்க மறுத்தது. "ஆமா அந்த வீட்டுல புதையல் இருக்குறது போலவும், இந்தம்மா பாம்பு போலவும் காக்குது" மனத்துக்குள்ளே முணுமுத்தாள்.
கோவில் புதையல்களை ராஜநாகம் காப்பதாக பண்டைய காலத்திலிருந்தே நம்பப்பட்டு வருவதால் பழைய வளவ்வகளிலும் புதையல்கள் இருக்கக் கூடும் என்று வதந்திகள் பரவிக் கிடக்க அது உண்மையோ பொய்யோ, மெனிக்கே மாமியாரை பாம்பு என்று சொல்ல உபயோகிப்பாள். அதுவும் ராஜநாகம்.
வளவ்வே ஹாமினே எனும் சுது மெனிக்கே {ஜமீனாம்மா}
அது மட்டுமா? லஹிருவின் பெற்றோர் இறக்கும் பொழுது அவனுக்கு எட்டு வயதுதான். அவனை வளர்க்க மெனிக்கே மாமியாரிடம் கேட்ட பொழுது கிழவி கடுமையாக மறுத்து விட, தான் என்ன? கொடுமை செய்யப் போவது போல் மாமியார் இப்படி முகத்தில் அடித்தது போல் மறுத்து விட்டாரே என்று கணவனிடம் புலம்பலானாள் மெனிக்கே.
ஹரித தினெத் வீரசிங்க
புஞ்சி நிலமேயும் "அம்மா தனிமையில் இருக்கிறாள். அதனால்தான் மறுக்கிறாள். அண்ணனும் அண்ணியும் இல்லாமல் அவள் மட்டும் வீட்டில் எப்படி தனியாக இருப்பாள்? அவள் மனநிலைமையை புரிந்துகொள்" என்று அறிவுரை செய்ய, மெனிக்கேவிற்கு கோபம்தான் கூடியது. அந்த கோபம் பல வருடங்கள் கடந்தும் மனதுக்குள் இருக்க, அடிக்கடி எதையாவது பேசி தீர்த்துக் கொள்வாள்.
புஞ்சி நிலமே, மெனிக்கே ஹரிதவின் அப்பா அம்மா, லஹிருவின் சித்தப்பா, சித்தி.
சாருமதி
"அடியேய் சாரு. எழுந்திருடி... கடைக்கு போக வேணாம்? அம்மா இல்லாத பொண்ணுன்னு பாசம் காட்டினா. தலைல ஏறி உக்காந்து வீட்டு வேல ஒன்னத்தையும் செய்யிறது இல்ல. கேட்டா கடைக்கு போயிட்டு வந்தா டயடா இருக்காம். நான் மட்டும் தேல காட்டுல கொழுந்து பரிச்சிட்டு வரேன் எனக்கு டயடா இல்லையா?" பஞ்சவர்ணம் தனது கீச்சுக்க குரலில் கத்திக் கொண்டே இருக்க,
"சே நிம்மதியா தூங்க விடுறாளா? காலங்காத்தால ஆரம்பிச்சிடுறாளே" முணுமுணுத்த சாருமதி காலுக்கு வைத்திருந்த தலையணையை தூக்கி தலையில் வைத்து, தலையை மூடி படுத்துக் கொண்டாள்.
"கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போனாதான் தெரியும். மாமியார்காரி மண்டையிலையே போட்டு வேல வாங்கும் போது விளங்கும்" வளமை போல் விடாது தூற்றலானாள் பஞ்சவர்ணம்.
"நீ கவலை படாத சாரு நான் உனக்கு வாழ்க தரேன்" பாதி சவரம் செய்த முகத்தோடு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தவாறு அவள் அத்தை பெத்த ஒரே செல்ல மகன் முத்து அன்னையை மேலும் உசுப்பேற்றி விட்டான்.
"ஆமான்டா நான் சாகுறவரைக்கும் இவளுக்கு சேவகம் செய்யணும் இல்ல. வந்தேன்னாவை சவரம் செய்யிற கத்தியாலையே உன் கழுத்த வெட்டுறேன். எனக்கு மருமகளா வரவேண்டிய வீட்டு வேல செய்ய கூடியவளா இருக்கணும். இவள மாதிரி சோம்பேறியா இருக்கக் கூடாது" பஞ்சவர்ணம் கத்த
"அத்த கத்தாதே, நான் எல்லாம் உன் பையன கல்யாணம் பண்ண மாட்டேன். வாழ்க கொடுக்குற மூஞ்சிய பாரு. நான் கல்யாணம் பண்ண போறவன் பெரிய பணக்காரனா இருப்பான். பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறேனா இல்லையானு பாரு" போர்வையை உதறியவாறே எழுந்தவள் குளியலறைக்கு சென்றாள்.
"ஆமா இவ பெரிய மஹாராணி. பணத்துலையே பிறந்து பணத்துலையே வளர்ந்தவ. ராஜகுமாரன் குதிரைல வந்து கடத்திட்டு போய் கல்யாணம் பண்ண போறான். பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்கா பழைய சோறு சாப்பிடுற கழுத. இவளுக்கு நானே என் பையன கட்டி வைக்க யோசிக்கிறேன். யாரு இவள கட்டிக்க போறானோ? அவன் நிலம பாவம்தான்" உச்சக்கொட்டிவிட்டு மீண்டும் சமயலறைக்குள் நுழைந்தாள் பஞ்சவர்ணம்.
லஹிரு துஷார வீரசிங்க
"எனக்கும் வேல இருக்கு சித்தி. அது மட்டுமா? பாட்டி மட்டும்தான் வீட்டுல தனியா இருக்காங்க. அவங்க கண்டிய விட்டு எங்கயும் போறதுமில்லை. இந்த வயசுலயும் டீ எஸ்டேட்டையெல்லாம் அவங்க தானே நிர்வாகிக்கிறாங்க. அதனாலயே அவங்க வர்றதுமில்லை. அவங்களும் கூட வந்திருந்தா நானும் ரெண்டு நாள் என்ன ஒரு வாரம் கூட தங்கி இருப்பேனே" என்றான் லஹிரு.
என்னதான் அவன் காரணத்தோடு விளக்கம் கொடுத்தாலும், மெனிகேவின் மனம் ஏற்க மறுத்தது. "ஆமா அந்த வீட்டுல புதையல் இருக்குறது போலவும், இந்தம்மா பாம்பு போலவும் காக்குது" மனத்துக்குள்ளே முணுமுத்தாள்.
கோவில் புதையல்களை ராஜநாகம் காப்பதாக பண்டைய காலத்திலிருந்தே நம்பப்பட்டு வருவதால் பழைய வளவ்வகளிலும் புதையல்கள் இருக்கக் கூடும் என்று வதந்திகள் பரவிக் கிடக்க அது உண்மையோ பொய்யோ, மெனிக்கே மாமியாரை பாம்பு என்று சொல்ல உபயோகிப்பாள். அதுவும் ராஜநாகம்.
வளவ்வே ஹாமினே எனும் சுது மெனிக்கே {ஜமீனாம்மா}
அது மட்டுமா? லஹிருவின் பெற்றோர் இறக்கும் பொழுது அவனுக்கு எட்டு வயதுதான். அவனை வளர்க்க மெனிக்கே மாமியாரிடம் கேட்ட பொழுது கிழவி கடுமையாக மறுத்து விட, தான் என்ன? கொடுமை செய்யப் போவது போல் மாமியார் இப்படி முகத்தில் அடித்தது போல் மறுத்து விட்டாரே என்று கணவனிடம் புலம்பலானாள் மெனிக்கே.
ஹரித தினெத் வீரசிங்க
புஞ்சி நிலமேயும் "அம்மா தனிமையில் இருக்கிறாள். அதனால்தான் மறுக்கிறாள். அண்ணனும் அண்ணியும் இல்லாமல் அவள் மட்டும் வீட்டில் எப்படி தனியாக இருப்பாள்? அவள் மனநிலைமையை புரிந்துகொள்" என்று அறிவுரை செய்ய, மெனிக்கேவிற்கு கோபம்தான் கூடியது. அந்த கோபம் பல வருடங்கள் கடந்தும் மனதுக்குள் இருக்க, அடிக்கடி எதையாவது பேசி தீர்த்துக் கொள்வாள்.
புஞ்சி நிலமே, மெனிக்கே ஹரிதவின் அப்பா அம்மா, லஹிருவின் சித்தப்பா, சித்தி.
Last edited: