என்னது...அருள் ஆறு மாசத்துக்கு முன்னாடியே வீட்ட விட்டு ஓடிப்போய்ட்டான்னு சொல்லி, இவங்கள வெளியே தொரத்தி கதவை பூட்டுனாங்களா
.இது என்ன புதுக்கதை
.
அருள் இல்லாதது தெரிஞ்சு மிரட்டுனவங்க,போட்டோ எடுக்கறதா சொல்லவும் ஓடிட்டாங்க,என்ன நடக்குது இங்கே,இவங்க யாரோட ஆளுங்க
.
போலிஸ்ல கம்பிளைண்ட் செய்ய போனா,கல்யாண போட்டோ,சீமந்த படம்,வீடியோன்னு காட்டின பிறகும் நம்பாதவங்க
,மினிஸ்டர்ட்ட இருந்து போன் வந்ததும்,மினிஸ்டரை தெரியும்னு முன்னாடியே சொல்லக் கூடாதான்னு சொல்றாங்க என்னத்தை சொல்ல
.
அருளாசினி ஸ்கூலுக்கு ஹேண்ட் பேக் தவிர எதுவும் எடுத்துட்டு போகலைன்னு வாணி சொல்றா, அப்படின்னா அவளோட நகை,துணி எல்லாம் எப்படி மாயமாச்சு
.பள்ளிகூடம் முடிஞ்சு எப்பவும் போலத்தான் கிளம்பியிருக்கா,வீட்டுக்கு வர்றதுகுள்ள என்ன நடந்துச்சு
.
வருணை பார்த்தா பேசக்கூட மாட்டா
.அவளது சொந்தக்காரங்களே நல்லபடியா பேசி அருள அழைச்சுட்டு போய் வேற எங்கேயாவது அடச்சு வச்சிருக்காங்களா
.என்னதான் நடக்குது, அருள் இப்ப எங்கேயிருக்கா
.