Romila Robert
Well-Known Member
பிள்ளைகளை கட்டிக் கொடுக்கும் இடங்களில் வார்த்தைகளை விடும் போது யோசித்து பேச வேண்டும்.இல்லை என்றால் அதன் விளைவுகள் விபரீதமாக மாறிவிடும். அருமை சகோதரி, பெண்ணாக பிறந்து விட்டாலே இரண்டு பக்கமும் இடி தான்.
Exactlyஜமுனா சரியான பதில் கொடுத்தா பெத்தவங்களுக்கும் புருஷனுக்கும். அத்தனையும் நியாயம்.
கேசவன் மேல் அவள் வைத்துள்ள மரியாதை, யுவராஜ் தன் அப்பாக்காக கோபப்பட்டதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளுதல் எல்லாமே super.
"என்ன செஞ்சா முடிச்சு வைப்ப" ன்னு கேட்ட நியாயஸ்தன் இப்பயாவது அவ செயலை தண்டனையா ஏத்துக்கிட்டு அவளுக்கு support பண்ணனும். அதெங்க? இவனே போனாலும் இவனோட ego அழியாது.
பொண்டாட்டி குடுக்கற தண்டனை கூட இவர் இஷ்டப்படி இவரால சகிச்சுக்க கூடிய கால அளவுக்கு தான் இருக்கணும். அப்பிடி இல்லைனா இவர் மொத்தமா ஒதுங்க முடிவு செய்வார். எல்லாரும் சேர்ந்து அவளை திமிர் பிடிச்சவளாக்கி விட்டுக்கொடுத்தல் என்கிற பேருல அவளோட self esteem - ஐ உடைக்கப் பார்ப்பாங்க.