கற்பூர முல்லை Episode 22

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 22

புதிய பிரான்ச் ஆரம்பிக்க இருப்பதால் தமிழுக்கு இப்பொழுதெல்லாம் ஆபீசில் அதிக வேலை இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தாள். மாலை வீட்டிற்கு செல்லவே நேரம் ஆகிவிடும்...

அன்றும் அதே போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தது நேரத்தை கவனிக்கவே மறந்துவிட்டாள். இரவும் ஆகிவிட்டது.
மொபைலும் சைலன்ட்ல இருந்ததால் அவளும் அதை கவனிக்கவில்லை. மணியை பார்த்தால் இது ஒன்பதுக்கு மேல் ஆகி இருந்தது. போனை எடுத்து பார்த்ததில் காயத்ரி, சமையலம்மா என மிஸ்டு கால்கள் வந்திருந்தன. இப்பொழுது வீட்டிற்கு செல்ல வேண்டுமே என யோசித்தாள்.

சரி .....ஆபீஸ் காரிலேயே வீட்டுக்கு செல்லலாம் என யோசித்தவள் கிளம்பினாள்.... ஆனால் கார் ஸ்டார்ட் ஆக மறுத்தது... எவ்வளவோ முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை...

சரி கேப் புக் பண்ணி செல்லலாம் என்று நினைத்தவள் கேப் புக் செய்ய முயன்றால் ஆனாலும் எதுவும் கிடைக்கவில்லை... இப்பொழுது அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..

அவளுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி அகிலனுக்கு கால் செய்வது மட்டுமே என்று தோன்றியது. ஆனாலும் அவன் என்ன சொல்வானோ என்று ஒரு புறம் தோன்றியது. சரி கேட்டு தான் பார்க்கலாம் என்று அகிலனுக்கு கால் செய்தாள் ‌.

அங்கே ஸ்டேஷனில் அகிலனும் குமாரும் இரவு பணியில் இருந்தனர்... அந்த நேரம் அகிலன் போன் ஒலிக்கவே யாராக இருக்கும் என்று யோசனையில் எடுத்துப் பார்த்தான்... போனில் தமிழ் என்று வந்திருந்தது அதை பார்த்தவன் சற்று அதிர்ச்சி அடைந்தான் . இந்த நேரத்தில் இவள் எதற்கு கூப்பிடுகிறாள் என்று நினைத்தான்.

ஆனாலும் அது வெளிக்காட்டிக் கொள்ளாமல் போனை அட்டென்ட் செய்து பேசினான். எடுத்து ஹலோ என்றான். அவளும் நான் தமிழ் பேசுகிறேன் என்றாள்... தெரிகிறது சொல்லு... என்ன இந்த நேரத்தில்....எனக் கேட்டான் அவன்...

அவர் சற்று தயக்கமாக நடந்தவற்றை கூறினான்.. அதைக் கேட்டதும் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? ... இந்நேரம் வரை யாராவது ஆபீஸ்ல் இருப்பார்களா ?...என்று சற்று கோபமாக கேட்டான்.

அவள் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை... சரி இரு என்றவாறு போனை கட் செய்தான்.

உடனே குமாரிடம் திரும்பி அங்கே தமிழ் ஆபீஸில் தனியாக இருக்கிறாள்.நீ சென்று அவள் வீடு வரை விட்டுவிட்டு வா என்று கூறினாள்...

என்னது நானா .?என்று கேட்டான் பின்னே நானா என்று திருப்பி கேட்டான் அகிலன்.
என்ன ஏன்டா போக சொல்ற நீ தான்டா போக வேண்டும் என்று கூறினான் குமார்..

அது எனக்கு தெரியாதா... சொல்வதை மட்டும் செய்டா.. என்றான். வேறு யாரையும் இந்த நேரத்தில் நம்பி அனுப்ப முடியாது அதனால் தான் உன்னை அனுப்புகிறேன் என்று கூறினான் அவன்.

அதைத்தான் டா நானும் கேட்கிறேன் வேறு யாரையும் ஏன் அனுப்ப வேண்டும் நீயே சென்று டிராப் செய்துவிட்டு வரலாம் தானே என்று கேட்டான்...

சரி என்னமோ....நீ சொல்கிறாய் நான் செய்கிறேன் என்று கூறியவாறு தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான் குமார்.

அங்கே தமிழ், ஒருவேளை அகிலன் வருவானோ என்று காத்திருந்தாள். ஆனால் அதற்கு மாறாக குமார் வந்து சேர்ந்தான்.

என்னமா வேலையா என கேட்டான். ஆமாம் வேலையில் இருந்ததில் நேரம் ஆனதே தெரியவில்லை இப்பொழுது தான் பார்த்தேன்.. அதனால்தான் உடனே அவருக்கு கால் செய்தேன் என்று கூறினாள்.

சரிம்மா நான் ஒன்று கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டாயே என்று கேட்டான்... கேளுங்கள் என்றால் அவள்.

உனக்கும் அவனுக்கும் என்னமா பிரச்சினை ஏன் இப்படி இருவரும் பேசாது இருக்கிறீர்கள் என்று கேட்டான். அவனிடம் கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறான் என்று கூறினான்.

ஏன் உங்களுக்கு எதுவும் தெரியாதா... ஏன் எதுவும் தெரியாதது போல் கேட்கிறீர்கள் என்று கேட்டாள்.
தெரியும் தான்... ஆனால் என்ன பிரச்சினையாக இருந்தாலும் கண்டிப்பாக கூடிய விரைவில் சரியாக விடும் என்று கூறி அவளை அழைத்துச் சென்றான்..

அவளை வீட்டில் டிராப் செய்துவிட்டு திரும்ப ஸ்டேஷனுக்கு போனான் .என்னடா அவளை பத்திரமாக டிராப் செய்து விட்டாயா?.. என்று கேட்டான்
பின் என் நண்பன் சொன்ன வேலையை சரியாக முடிக்காமல் இருப்பேனா என்றான்.. காலையில் வீட்டிற்கு சென்றதும் பவியிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தான்.

நினைத்த மாதிரியே காலையில் சென்றதும் பவியிடம் இரவு நடந்தவற்றை அனைத்தையும் கூறினார்... அதற்கு பவி இருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தால் வேலை நடக்காது இதற்கு நாம் தான் ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று கூறினாள்.

உடனே குமாரும் ஆமாம் பவி இதை இப்படியே விடக்கூடாது கண்டிப்பாக இவர்களை சேர்த்து வைக்க தான் வேண்டும் என்று கூறினான்.
அவளும் சரி அகிலன் அண்ணாவிடம் நான் பேசிக்கொள்கிறேன் நீங்கள் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்றாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top