"கண் பார்த்து
காதல் கொண்டு
கரம் பிடித்து
மோதிரம் மாற்றி
வேள்வி சாட்சியாய்
வேண்டியர்வகளின் முன்னிலையில்
விவாகம்"
"கால் விரலில்
மெட்டி அணிவிக்க
மங்கையவளோடு மாலை மாற்றி
மாறி நிற்கிறான்
மகன் உறவு தாண்டி
மனைவியின் கணவனாய்"
"நெற்றி வகிட்டில்
குங்குமம் சூட்டி
நினைவிருக்கும் வரை
உன்னை பிரியமாட்டேன் என
கையெழுத்து இட
இதயம் அதில் இருத்திக்கொள்கிறான்
மகாராணியாய் மனைவி அவளை"
"மங்கலநாண் கொண்டு
மனைவியாக்கியவளை
மகிழ்ச்சியுடன் வைத்திருக்கத்தான்
மாடாய் உழைக்கிறான்
ஓடாய் தேய்கிறான்
மனம் அது சோர்ந்திடும் வேளையில் தான்
மனைவியின் புன்னகையதில்
மயக்கம் கொள்கிறான்"
"அடுத்த கட்ட வாழ்வில்
அடி எடுத்து வைத்திடத்தான்
அப்பா என்றழைக்க ஒரு உறவு
அதன் வரவில் தான்
இவன் மனம் பெரு நிறைவு"
"தந்தையான பின் தான்
தடகள வீரனானன்"
"உழைத்து
உறக்கம் தொலைத்தவன் தான்
உள்ளம் அமைதி கொள்கிறான்
தன் மனைவியின்
"சாப்பிடுங்கள் மாமா"
எனும் ஒற்றை வரியில்"
"காதல் கணவனுக்கு
மட்டும் தான் தெரியும்
கட்டிய மனைவி இன்னும்
சாப்பிடிருக்கமாட்டாள்
தான் சாப்பிடாத காரணத்தினால்"
"உழைத்து களைத்திடும் போது
உயிராய் நினைக்கும் ஒரு உறவு
உடன் இருக்கத் தான்
உலகத்தையும் வெற்றி கொள்கிறான்
கடமை தவறாத கணவன்"
காதல் கொண்டு
கரம் பிடித்து
மோதிரம் மாற்றி
வேள்வி சாட்சியாய்
வேண்டியர்வகளின் முன்னிலையில்
விவாகம்"
"கால் விரலில்
மெட்டி அணிவிக்க
மங்கையவளோடு மாலை மாற்றி
மாறி நிற்கிறான்
மகன் உறவு தாண்டி
மனைவியின் கணவனாய்"
"நெற்றி வகிட்டில்
குங்குமம் சூட்டி
நினைவிருக்கும் வரை
உன்னை பிரியமாட்டேன் என
கையெழுத்து இட
இதயம் அதில் இருத்திக்கொள்கிறான்
மகாராணியாய் மனைவி அவளை"
"மங்கலநாண் கொண்டு
மனைவியாக்கியவளை
மகிழ்ச்சியுடன் வைத்திருக்கத்தான்
மாடாய் உழைக்கிறான்
ஓடாய் தேய்கிறான்
மனம் அது சோர்ந்திடும் வேளையில் தான்
மனைவியின் புன்னகையதில்
மயக்கம் கொள்கிறான்"
"அடுத்த கட்ட வாழ்வில்
அடி எடுத்து வைத்திடத்தான்
அப்பா என்றழைக்க ஒரு உறவு
அதன் வரவில் தான்
இவன் மனம் பெரு நிறைவு"
"தந்தையான பின் தான்
தடகள வீரனானன்"
"உழைத்து
உறக்கம் தொலைத்தவன் தான்
உள்ளம் அமைதி கொள்கிறான்
தன் மனைவியின்
"சாப்பிடுங்கள் மாமா"
எனும் ஒற்றை வரியில்"
"காதல் கணவனுக்கு
மட்டும் தான் தெரியும்
கட்டிய மனைவி இன்னும்
சாப்பிடிருக்கமாட்டாள்
தான் சாப்பிடாத காரணத்தினால்"
"உழைத்து களைத்திடும் போது
உயிராய் நினைக்கும் ஒரு உறவு
உடன் இருக்கத் தான்
உலகத்தையும் வெற்றி கொள்கிறான்
கடமை தவறாத கணவன்"