மிரட்டும் காரிருளில் ஆளரவமற்ற சாலையில் ஓடிக் கொண்டிருந்தாள் அவள்.இருளும் ஆளில்லா சூழலும் அவளுக்கு பயத்தை அளிக்கவில்லை.ஆனால் பின்னே தட்தட் என நெருங்கி வரும் காலடி ஓசைகள் தான் அவளை பயமுறுத்தி மேலும் மேலும் ஓட செய்தது.அவர்கள் கையில் சிக்கினால் தன் நிலை அதோகதிதான் என்ற நினைவில் இன்னுமின்னும் வேகமாக ஓடினாள்.இனி முடியாது என்ற நினைவோடு அவள் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது எதிரில் கண் கூசும் ஒளிவெள்ளத்தில் நிலைதடுமாறி அவள் ஓட்டத்தை நிறுத்தும் முன் அவள் மேல் மோதியிருந்தது அந்த ஜீப்