தீண்டல் 13
மனமோ உன் மனம் அறிந்திட
நீயோ உன் மனதினை
மறைத்து
என் மனதை
வதைக்கிறாய்...
டிக்கெட்டினை வாங்கிவிட்டு ஷாகர் திரும்பும் போது ஆதிரா அமர்ந்திருந்த இடத்தை சிலர் மறைத்தபடி நிற்பதை கண்டவன் முதலில் பெரிதுபடுத்தாமல் விட பின் ஏதோ சரியில்லையென்று தோன்ற ஊன்றி கவனித்தவனது உள்ளம் பதறியது..
அவளை நான்கு முரடர்கள் ஆக்கிரமித்து அவளை இழுத்துசெல்ல முயல அவளோ அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு போராடிக்கொண்டிருந்தாள்.. அந்த நான்கு முடர்களில் ஒருவன் ஆதிராவின் கைகளை பின்புறமாய் வளைத்து பிடித்திருக்க, ஆதிராவால் அவன் பிடியில் இருந்து தன் கைகளை மீட்க முடியவில்லை... அப்போது ஷாகர்
“டேய் யார்டா நீங்க..” என்று அவளை நோக்கி ஓடிவந்தபடி சப்தமிட, அவன் சத்தத்தில் சற்று திடம்பெற்ற ஆதிரா
“சார்... சார்... ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க....” என்று அவனை நோக்கி சப்தமிட்டாள்..
வேகமாய் ஆதிராவை நெருங்கிய ஷாகர் அவளை சூழ்ந்திருந்த முரடர்களை தாக்கத்தொடங்கினான்.. அவன் மனதில் எவ்வாறேனும் ஆதிராவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க இருக்குமிடத்தை பொருட்படுத்தாது தன் தாக்குதலை தொடர்ந்தான்...இரவு நேரமென்பதால் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்க ஷாகருக்கு துணையென்று எவரும் இல்லை... தனித்து நின்று நால்வரையும் தாக்கியவன் ஆதிராவை அழைத்துக்கொண்டு செல்ல முயல யாரோ அவன் பின் மண்டையில் தாக்கிட அது அவன் சுயநினைவை இழக்கச்செய்தது... பின் தலையை பிடித்தபடி மடங்கி அமர்ந்தவனை கண்டு பதறிய ஆதிரா அவனுக்கு உதவ செல்ல அவளை ஒரு முரடன் தன் பிடியில் வைத்திருந்தான்... ஆதிராவோ ஷாகரை விடச்சொல்லி கெஞ்ச மற்றொரு முரடன் தன் கையிலிருந்த கட்டையால் ஷாகரை தாக்கத்தொடங்கினான்... ஷாகரோ தன் சுயநினைவு கொஞ்ச கொஞ்சமாய் இழந்துகொண்டிருந்த போதிலும் ஆதிராவின் கதறல் அதற்கு தடையாய் இருந்தது... அவனது மனமோ எழுந்து சென்று அவளை காப்பாற்று என்று அவனை உந்த உடலோ நகர மறுத்தது... இவ்வாறு ஷாகர் முற்றாய் சுயநினைவை இழக்க ஆதிராவோ கதறியபடியிருந்தான்.
அப்போது அங்கு வந்த ஆதிராவின் மாமா அவளை சரமாரியாக அடிக்க அவனை பின்தொடர்ந்து வந்த ஆதிராவால் பொறுக்கியென்று விழிக்கப்படும் சுப்பிரமணியும் அவள் முடியை கொத்தாக பிடித்து தன் ஆத்திரம் தீரும் மட்டும் அவளை அடித்தான்....
ஏற்கனவே பயத்தில் பலவீனமாயிருந்தவளை இவர்கள் தங்கள் முழுப்பலம் கொண்டு அடிக்க அவளும் சுயநினைவு இழந்தாள்...
இருவரையும் தூக்கிக்கொண்டு வந்து தன் குடோனில் அடைத்த சுப்பிரமணி அவனது அடியாட்களிடம்
“டேய் இதுங்க இரண்டு பேரையும் பத்திரமாக பார்த்துக்கோ...நாளைக்கு காலையில இரண்டு பேரையும் பஞ்சாயத்துல நிறுத்தனும்... பஞ்சாயத்துல இதுங்க இரண்டுக்கும் நான் ஒரு முடிவு கட்டுறேன்... இரண்டு பேரும் கண்ணையும் கட்டிடுங்கடா...இரண்டு பேரும் ஒன்னா இருக்கது தெரிஞ்சா தப்பிச்சு போக முயற்சி பண்ணுங்க... நான் சொல்லுறது புரியிதா???” என்று தன் அடியாட்களுக்கு ஆணையிட்டவன் தன் வீட்டிற்கு கிளம்பினான்...
குடோனிலுள்ளே இருந்த ஆதிரா சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தாள்.. கண்விழுத்தவளுக்கு எதுவும் புலப்படாமல் இருக்க முதலில் குழம்பியவள் பின் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு என்ன நடந்தது என்று கண்மூடி யோசித்தவளுக்கு அனைத்தும் நினைவில் வந்தது... அந்த கணம் அவள் மனதில் எவ்வாறேனும் தப்பித்துவிட வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே மேலோங்க எழு முயன்றவளுக்கு அவளது உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை..கைகளும், காலும்,கண்களும் கட்டப்படடிருக்க ஆதிராவிற்கு எப்படி தப்பிப்பதென்று தெரியவில்லை....
என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு அப்போது தான் ஷாகரின் நினைவு வந்தது...
சார் சாரென்று அழைத்து பார்த்தவளுக்கு பதிலெதுவும் கிடைக்காமல் போக தன் கட்டுக்களை அவிழ்க்க முயற்சி செய்தாள் ஆதிரா. கண்கள் கட்டியிருந்ததால் அவளால் வேறு எதையும் முயற்சி செய்ய தோன்றவில்லை... சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற அதை நடைமுறைப்படுத்த முயன்றாள்....
மெதுவாக தன் கட்டப்பட்டிருந்த கையினதும் கால்களினதும் உதவியால் விந்தி விந்தி தான் இடத்திலிருந்து நகர்ந்தவள் கைகாலில் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று ஆராயத்தொடங்கினாள். பின்னால் கட்டப்பட்டிருந்த கையால் ஏதேனும் கூர்மையான பொருள் கையில் தட்டுப்படுகிறதா என்று கைகளால் தடவிப்பார்த்தவளுக்கு கையில் ஏதோ உடைந்த கண்ணாடித்துண்டொன்று கீறிய கையை உதறியவள் மெதுவாய் அந்த கண்ணாடித்துண்டை கையில் எடுத்துக்கொண்டவள் அதை கொண்டு தன் கைகளின் கட்டை அவிழ்விக்க முயன்றாள்..
ஆனால் அது அவளுக்கு முழுதாய் கைகொடுக்கவில்லை.. கயிற்றில் சிறுபகுதிமட்டுமே அறுபட்டிருக்க அதை சற்று அசைத்து பார்த்தவளுக்கு அந்த கயிறு கையிலிருந்து வழுக்குவது தெரிய குறுக்காக இருந்த கைகளிரண்டையும் அருகருகாக கொண்டு வந்தவள் லாவகமாக அந்த கயிற்றிலிருந்து தன் கைகளை விடுவித்துக்கொண்டாள்...
விடுவித்த கைகள் உடனடியாக கண்கட்டை அவிழ்த்தது.... இரு கண்களையும் சற்று கசக்கியவிட்டவள் சுற்றும் முற்றும் பார்க்க எதிரே ஷாகர் அவளை போன்றே கட்டப்பட்டு மயக்கத்தில் இருப்பது தெரிந்தது...
தாமதிக்காது தன் கால் கட்டையும் விடுவித்தவள் விரைந்து ஷாகரருகே சென்று அவன் கைகட்டையும் கண்கட்டையும் அவிழ்த்துவிட்டாள்... பின் அவனை எழுப்ப முயல அவனோ எழவில்லை...
அவன் மார்பின் மீது காதினை வைத்து இதயத்துடிப்பினை கேட்டவளுக்கு அதன் சந்தம் சரியாக கேட்டிட சற்று ஆசுவாசமடைந்தவள் அவன் உடைகளை தளர்த்திவிட்டவள் அருகில் அவன் மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தாள்..
அது குடோன் என்பதால் தண்ணீர் எதுவும் கிடைக்காமலிருக்க என்ன செய்வது என்று யோசித்தவள் குடோனுக்கு வெளியே எட்டிப்பார்த்தாள்.. வெளியே சுப்பிரமணியின் அடியாட்கள் காவலுக்கு இருக்க அவளால் அங்கிருந்து வெளியேறமுடியவில்லை... என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு மழை கைகொடுத்தது.....
தண்ணீர் பிடித்து கொள்வதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தவளுக்கு எதுவும் தட்டுபடாமல் போக தன் கையே தனக்குதவி என்று முடிவெடுத்தவள் அந்த குடேனின் ஒரு புறமாயிருந்த ஜன்னலை மெதுவாக திறந்து தன் முந்தானையை வெளியே நீட்டி மழை நீரில் நன்றாக நனைத்துக்கொண்டாள்...... நன்றாக நனைந்துவிட்டது என்று உறுதி செய்து கொண்டவள், ஷாகரை தூக்கி தன் மடியிலில் வைத்துக்கொண்டு அவன் முகம் முழுதும் ஈரத்துணியால் ஒற்றி எடுத்தாள்.... ஈரத்துணி முகத்தில் பட்டதும் மெதுவாய் ஷாகரின் கருவிழிகள் அசைய மீண்டும் ஆதிரா ஈரத்துணியால் அவன் முகம் முழுதும் ஒற்றி எடுத்தாள்..
அதன் விளைவாக ஷாகர் கண்விழிக்க ஆதிராவிற்கு அப்போது தான் உயிரே வந்தது போல் இருந்தது... அவனை மெதுவாக எழுந்த அமரச்செய்தாள் ஆதிரா..
ஷாகரோ தன் பின்னந்தலையை பிடித்தபடி எழுந்து அமர அதை கண்ட ஆதிரா
“சார்... தலை வலிக்கிதா...காட்டுங்க பார்ப்போம்..” என்றவள் அவன் பின்னந்தலையை பார்க்க அதில் இரத்தம் உறைந்திருந்தது...
“சார் இரத்தம் உறைஞ்சிருக்கு.. இருங்க நான் கட்டு போட்டு விடுறேன்...” என்றவள் தன் முந்தானையை நான்காக கிழித்து அதில் ஒரு துண்டை மழை நீரில் ஈரப்படுத்தி எடுத்துவந்தவள் அவன் பின்னந்தலையில் உறைந்திருந்த இரத்தத்தை சுத்தப்படுத்தினாள்.. மற்றைய துண்டால் அடிப்பட்ட இடத்திற்கு கட்டுப்போட்டவள் தனது திருப்திக்காக இன்னொரு கட்டையும் இட்டும்..மீதமிருந்த துணியை நனைத்து வந்தவள் ஷாகரிடம்
“சார்.. இங்க தண்ணி இல்லை...அதான் துணியை மழைத்தண்ணியல நல்லா நனைச்சிட்டு வந்திருக்கேன்.. நான் இந்த துணியை பிழியிறேன்.....நீங்க தொண்டை ஈரமாகுற அளவுக்கு தண்ணியை குடிங்க... இப்போ நமக்கு இதை தவிர வேற வழி இல்ல சார்..” என்று ஆதிரா கூற அதை ஏற்றவன் அவள் சொன்னபடி நீரை அருந்தினான்...
மனமோ உன் மனம் அறிந்திட
நீயோ உன் மனதினை
மறைத்து
என் மனதை
வதைக்கிறாய்...
டிக்கெட்டினை வாங்கிவிட்டு ஷாகர் திரும்பும் போது ஆதிரா அமர்ந்திருந்த இடத்தை சிலர் மறைத்தபடி நிற்பதை கண்டவன் முதலில் பெரிதுபடுத்தாமல் விட பின் ஏதோ சரியில்லையென்று தோன்ற ஊன்றி கவனித்தவனது உள்ளம் பதறியது..
அவளை நான்கு முரடர்கள் ஆக்கிரமித்து அவளை இழுத்துசெல்ல முயல அவளோ அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு போராடிக்கொண்டிருந்தாள்.. அந்த நான்கு முடர்களில் ஒருவன் ஆதிராவின் கைகளை பின்புறமாய் வளைத்து பிடித்திருக்க, ஆதிராவால் அவன் பிடியில் இருந்து தன் கைகளை மீட்க முடியவில்லை... அப்போது ஷாகர்
“டேய் யார்டா நீங்க..” என்று அவளை நோக்கி ஓடிவந்தபடி சப்தமிட, அவன் சத்தத்தில் சற்று திடம்பெற்ற ஆதிரா
“சார்... சார்... ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க....” என்று அவனை நோக்கி சப்தமிட்டாள்..
வேகமாய் ஆதிராவை நெருங்கிய ஷாகர் அவளை சூழ்ந்திருந்த முரடர்களை தாக்கத்தொடங்கினான்.. அவன் மனதில் எவ்வாறேனும் ஆதிராவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க இருக்குமிடத்தை பொருட்படுத்தாது தன் தாக்குதலை தொடர்ந்தான்...இரவு நேரமென்பதால் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்க ஷாகருக்கு துணையென்று எவரும் இல்லை... தனித்து நின்று நால்வரையும் தாக்கியவன் ஆதிராவை அழைத்துக்கொண்டு செல்ல முயல யாரோ அவன் பின் மண்டையில் தாக்கிட அது அவன் சுயநினைவை இழக்கச்செய்தது... பின் தலையை பிடித்தபடி மடங்கி அமர்ந்தவனை கண்டு பதறிய ஆதிரா அவனுக்கு உதவ செல்ல அவளை ஒரு முரடன் தன் பிடியில் வைத்திருந்தான்... ஆதிராவோ ஷாகரை விடச்சொல்லி கெஞ்ச மற்றொரு முரடன் தன் கையிலிருந்த கட்டையால் ஷாகரை தாக்கத்தொடங்கினான்... ஷாகரோ தன் சுயநினைவு கொஞ்ச கொஞ்சமாய் இழந்துகொண்டிருந்த போதிலும் ஆதிராவின் கதறல் அதற்கு தடையாய் இருந்தது... அவனது மனமோ எழுந்து சென்று அவளை காப்பாற்று என்று அவனை உந்த உடலோ நகர மறுத்தது... இவ்வாறு ஷாகர் முற்றாய் சுயநினைவை இழக்க ஆதிராவோ கதறியபடியிருந்தான்.
அப்போது அங்கு வந்த ஆதிராவின் மாமா அவளை சரமாரியாக அடிக்க அவனை பின்தொடர்ந்து வந்த ஆதிராவால் பொறுக்கியென்று விழிக்கப்படும் சுப்பிரமணியும் அவள் முடியை கொத்தாக பிடித்து தன் ஆத்திரம் தீரும் மட்டும் அவளை அடித்தான்....
ஏற்கனவே பயத்தில் பலவீனமாயிருந்தவளை இவர்கள் தங்கள் முழுப்பலம் கொண்டு அடிக்க அவளும் சுயநினைவு இழந்தாள்...
இருவரையும் தூக்கிக்கொண்டு வந்து தன் குடோனில் அடைத்த சுப்பிரமணி அவனது அடியாட்களிடம்
“டேய் இதுங்க இரண்டு பேரையும் பத்திரமாக பார்த்துக்கோ...நாளைக்கு காலையில இரண்டு பேரையும் பஞ்சாயத்துல நிறுத்தனும்... பஞ்சாயத்துல இதுங்க இரண்டுக்கும் நான் ஒரு முடிவு கட்டுறேன்... இரண்டு பேரும் கண்ணையும் கட்டிடுங்கடா...இரண்டு பேரும் ஒன்னா இருக்கது தெரிஞ்சா தப்பிச்சு போக முயற்சி பண்ணுங்க... நான் சொல்லுறது புரியிதா???” என்று தன் அடியாட்களுக்கு ஆணையிட்டவன் தன் வீட்டிற்கு கிளம்பினான்...
குடோனிலுள்ளே இருந்த ஆதிரா சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தாள்.. கண்விழுத்தவளுக்கு எதுவும் புலப்படாமல் இருக்க முதலில் குழம்பியவள் பின் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு என்ன நடந்தது என்று கண்மூடி யோசித்தவளுக்கு அனைத்தும் நினைவில் வந்தது... அந்த கணம் அவள் மனதில் எவ்வாறேனும் தப்பித்துவிட வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே மேலோங்க எழு முயன்றவளுக்கு அவளது உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை..கைகளும், காலும்,கண்களும் கட்டப்படடிருக்க ஆதிராவிற்கு எப்படி தப்பிப்பதென்று தெரியவில்லை....
என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு அப்போது தான் ஷாகரின் நினைவு வந்தது...
சார் சாரென்று அழைத்து பார்த்தவளுக்கு பதிலெதுவும் கிடைக்காமல் போக தன் கட்டுக்களை அவிழ்க்க முயற்சி செய்தாள் ஆதிரா. கண்கள் கட்டியிருந்ததால் அவளால் வேறு எதையும் முயற்சி செய்ய தோன்றவில்லை... சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற அதை நடைமுறைப்படுத்த முயன்றாள்....
மெதுவாக தன் கட்டப்பட்டிருந்த கையினதும் கால்களினதும் உதவியால் விந்தி விந்தி தான் இடத்திலிருந்து நகர்ந்தவள் கைகாலில் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று ஆராயத்தொடங்கினாள். பின்னால் கட்டப்பட்டிருந்த கையால் ஏதேனும் கூர்மையான பொருள் கையில் தட்டுப்படுகிறதா என்று கைகளால் தடவிப்பார்த்தவளுக்கு கையில் ஏதோ உடைந்த கண்ணாடித்துண்டொன்று கீறிய கையை உதறியவள் மெதுவாய் அந்த கண்ணாடித்துண்டை கையில் எடுத்துக்கொண்டவள் அதை கொண்டு தன் கைகளின் கட்டை அவிழ்விக்க முயன்றாள்..
ஆனால் அது அவளுக்கு முழுதாய் கைகொடுக்கவில்லை.. கயிற்றில் சிறுபகுதிமட்டுமே அறுபட்டிருக்க அதை சற்று அசைத்து பார்த்தவளுக்கு அந்த கயிறு கையிலிருந்து வழுக்குவது தெரிய குறுக்காக இருந்த கைகளிரண்டையும் அருகருகாக கொண்டு வந்தவள் லாவகமாக அந்த கயிற்றிலிருந்து தன் கைகளை விடுவித்துக்கொண்டாள்...
விடுவித்த கைகள் உடனடியாக கண்கட்டை அவிழ்த்தது.... இரு கண்களையும் சற்று கசக்கியவிட்டவள் சுற்றும் முற்றும் பார்க்க எதிரே ஷாகர் அவளை போன்றே கட்டப்பட்டு மயக்கத்தில் இருப்பது தெரிந்தது...
தாமதிக்காது தன் கால் கட்டையும் விடுவித்தவள் விரைந்து ஷாகரருகே சென்று அவன் கைகட்டையும் கண்கட்டையும் அவிழ்த்துவிட்டாள்... பின் அவனை எழுப்ப முயல அவனோ எழவில்லை...
அவன் மார்பின் மீது காதினை வைத்து இதயத்துடிப்பினை கேட்டவளுக்கு அதன் சந்தம் சரியாக கேட்டிட சற்று ஆசுவாசமடைந்தவள் அவன் உடைகளை தளர்த்திவிட்டவள் அருகில் அவன் மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தாள்..
அது குடோன் என்பதால் தண்ணீர் எதுவும் கிடைக்காமலிருக்க என்ன செய்வது என்று யோசித்தவள் குடோனுக்கு வெளியே எட்டிப்பார்த்தாள்.. வெளியே சுப்பிரமணியின் அடியாட்கள் காவலுக்கு இருக்க அவளால் அங்கிருந்து வெளியேறமுடியவில்லை... என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு மழை கைகொடுத்தது.....
தண்ணீர் பிடித்து கொள்வதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தவளுக்கு எதுவும் தட்டுபடாமல் போக தன் கையே தனக்குதவி என்று முடிவெடுத்தவள் அந்த குடேனின் ஒரு புறமாயிருந்த ஜன்னலை மெதுவாக திறந்து தன் முந்தானையை வெளியே நீட்டி மழை நீரில் நன்றாக நனைத்துக்கொண்டாள்...... நன்றாக நனைந்துவிட்டது என்று உறுதி செய்து கொண்டவள், ஷாகரை தூக்கி தன் மடியிலில் வைத்துக்கொண்டு அவன் முகம் முழுதும் ஈரத்துணியால் ஒற்றி எடுத்தாள்.... ஈரத்துணி முகத்தில் பட்டதும் மெதுவாய் ஷாகரின் கருவிழிகள் அசைய மீண்டும் ஆதிரா ஈரத்துணியால் அவன் முகம் முழுதும் ஒற்றி எடுத்தாள்..
அதன் விளைவாக ஷாகர் கண்விழிக்க ஆதிராவிற்கு அப்போது தான் உயிரே வந்தது போல் இருந்தது... அவனை மெதுவாக எழுந்த அமரச்செய்தாள் ஆதிரா..
ஷாகரோ தன் பின்னந்தலையை பிடித்தபடி எழுந்து அமர அதை கண்ட ஆதிரா
“சார்... தலை வலிக்கிதா...காட்டுங்க பார்ப்போம்..” என்றவள் அவன் பின்னந்தலையை பார்க்க அதில் இரத்தம் உறைந்திருந்தது...
“சார் இரத்தம் உறைஞ்சிருக்கு.. இருங்க நான் கட்டு போட்டு விடுறேன்...” என்றவள் தன் முந்தானையை நான்காக கிழித்து அதில் ஒரு துண்டை மழை நீரில் ஈரப்படுத்தி எடுத்துவந்தவள் அவன் பின்னந்தலையில் உறைந்திருந்த இரத்தத்தை சுத்தப்படுத்தினாள்.. மற்றைய துண்டால் அடிப்பட்ட இடத்திற்கு கட்டுப்போட்டவள் தனது திருப்திக்காக இன்னொரு கட்டையும் இட்டும்..மீதமிருந்த துணியை நனைத்து வந்தவள் ஷாகரிடம்
“சார்.. இங்க தண்ணி இல்லை...அதான் துணியை மழைத்தண்ணியல நல்லா நனைச்சிட்டு வந்திருக்கேன்.. நான் இந்த துணியை பிழியிறேன்.....நீங்க தொண்டை ஈரமாகுற அளவுக்கு தண்ணியை குடிங்க... இப்போ நமக்கு இதை தவிர வேற வழி இல்ல சார்..” என்று ஆதிரா கூற அதை ஏற்றவன் அவள் சொன்னபடி நீரை அருந்தினான்...