என்னை தீண்டிவிட்டாய் 1

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஹாய் நட்பூக்களே.....
இதோ என்னுடைய அடுத்தகதையான " என்னை தீண்டிவிட்டாய்" உடன் வந்துட்டேன்... இதுவும் என்னுடைய மற்றைய கதைகளை போல உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்...
படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்களே........

தீண்டல் 1

மயங்கினேன்....
உன் அக அழகில்...
தயங்கினேன்...
என் காதலை உரைக்க...

அந்த பிரமாண்ட மூன்றடுக்கு மாளிகை அன்று வழமைக்கு மாறாக அதிகாலை வேளையில் விழித்தெழுந்திருந்தது...
சூரியனின் வருகைக்காக எப்போதும் காத்திருக்கும் அங்கிருந்த சிறு தடாகத்தில் வீற்றிருக்கும் தாமரை கூட அன்று எதையோ கொண்டாடும் முகமாக மலர்ந்து தன் எதிர்ப்பார்ப்பை தெரிவித்திருந்தது....
அந்த மாளிகையின் இடப்புறமாக அமையப்பெற்றிருந்த தோட்டத்தில் உள்ள வேடந்தாங்கலில் விருந்தாளிகளாக தங்கியிருந்த பறவைகள் அரண்மனை விளக்கின் வெளிச்சத்தால் துயில் கலைந்து எழும்பி குரலெழுப்பிய வண்ணம் இருந்தது...
அருகே அமைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பந்தலில் நேற்று இரவு பூத்திருந்த மல்லிகை மலர்கள் தன் வாசனையை தென்றலுடன் கலக்கசெய்ய அதில் அந்த அரண்மையின் சுற்றுப்புறம் மனதுக்கினிய மணத்தை பரப்பியது...
இவ்வாறு வெளியுலகம் அந்த அரண்மனையின் விழிப்பிற்கு காரணம் தெரியாது குழம்ப அரண்மனை வீட்டினரோ பரபரப்பாக இருந்தனர்..
வாசலில் வீட்டு வேலைக்காரப்பெண்கள் கோலப்பொடியின் தயவால் தம் கலைத்திறத்தை வெளிபடுத்த அந்த தாமரை வடிவ ரங்கோலிக்கோலம் வண்ண வண்ண நிறத்தில் நிறந்தீட்டப்பட்டு வாசலை நிறைத்திருந்தது....
இரு ஆண்கள் வாசலில் மாவிலை தோரணம் கட்ட ஒரு பெண்மணி கதவில் மஞ்சளால் ஓம் என்று வரைந்துக்கொண்டிருந்தாள்...
வாசலைத்தாண்டி உள்ளே செல்லும் வழியில் ஆங்காங்கே அலங்காரங்கள் நடைப்பெற்ற வண்ணம் இருந்தது....
நடு சாலையின் வலப்புறமாக ஐயர் ஓமகுண்டத்தை தயார் பண்ணிக்கொண்டிருக்க அவருக்கு உதவியாய் இருவர் அங்கு நின்றுக்கொண்டிருந்ததனர்..
அவ்வாறு அந்த இடமே பரபரப்பாக இருக்க இவை அனைத்தையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் வசுமதி..
அவரவருக்கு ஏற்றாற் போல் வேலைகளை வழங்கியவர் தன் கணவனை தேட அவரோ தன் மச்சினன்மார்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்தார்..
அப்போது அவரை நோக்கி வந்தார் ரம்யா
“என்ன அண்ணி காலையிலேயே அண்ணாவை சைட் அடிச்சிட்டு இருக்கீங்க..?” என்று கேட்க
“ஏன் ரம்யா என்னை பார்த்தா சைட் அடிக்கிற மாதிரியா இருக்கு?? இந்த வயசுல எப்படிமா??” என்றவரை இடைமறித்தது மோகனாவின் குரல்
“ஏன் அண்ணி உங்க வீட்டுகாரரை நீங்க சைட் அடிக்கிறீங்க.... இதுல என்ன தப்பிருக்கு??” என்றவரின் கூற்றை ஆதரிக்கும் முகமாக வந்து சேர்ந்தார் ராகினி...
“அதானே... எங்க அண்ணனை எங்க அண்ணி சைட் அடிக்கிறாங்க... இதில் என்ன தப்பிருக்கு?? வாகினி நீ சொல்லு... இதில் என்ன தப்பு??” தன்னுடன் பிறந்த இரட்டையை துணைக்கழைக்க அவ்விடமே வசுமதியின் நாத்தனார் படையெடுப்பினால் சூழ்ந்தது....
ஆம் வசுமதியின் கணவர் பிரகஸ்பதியின் கூடப்பிறந்தவர்களே ரம்யா, ராகினி, வாகினி,மற்றும் மோகனா...
பரம்பரை பரம்பரையாக பணத்திலேயே புரளும் பரம்பரையென்பதால் பணத்திற்கு எந்த குறையும் இருக்கவில்லை....
பிரகஸ்பதிக்கு செல்வத்தில் குறைவில்லாத போதிலும் ஆடம்பரத்தை விரும்பவில்லை.... அதனாலேயே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வசுமதியை விரும்பி கைப்பிடித்தார்...
முதலில் பிரகஸ்பதியின் குடும்பத்தினர் எதிர்த்த போதிலும் வசுமதியின் பாராபட்சமில்லாத அன்பினாலும் அனைவரையும் அரவணைக்கும் அன்பினாலும் காலப்போக்கில் அவரை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளத்தொடங்கினர்..
பிரகஸ்பதி தன் தங்கைகள் நால்வரையும் நல்ல இடத்தில் திருமணம் முடித்துக்கொடுத்திருந்தார்..
பிரகஸ்பதியின் தங்கைகள் நால்வரினதும் தலைதீபாவளி தொடக்கம் பிரசவம் வரை அனைத்தையும் வசுமதி பார்த்து பார்த்தே செய்தார்...
பிரகஸ்பதியின் தங்கை கணவர்கள் அனைவருக்குமே பிரகஸ்பதி மற்றும் வசுமதியின் மீது எல்லையற்ற மதிப்பும் மரியாதையும் உண்டு.. இதுவே இன்று வரை அந்த ஐந்து குடும்பங்களையும் ஒன்றிணைத்து வைத்திருந்தது...
பிரபஸ்பதி மற்றும் வசுமதி தம்பதிகளின் வாரிசு ஷாகர்...
ரம்யா மற்றும் ரவீந்திரனின் வாரிசுகள் ஆத்விக் மற்றும் ஆஷிகா...
ராகினி மற்றும் ரஞ்சித்குமாரின் சீமந்த புத்திரி ஆத்விகா
வாகினி மற்றும் ரமணனின் வாரிசுகள் கேஷிகா மற்றும் ஆதித்யன்
மோகனா மற்றும் கேஷவனின் இரட்டை புத்திரிகள் ரித்திகா மற்றும் கிருத்திகா...
இந்த பெரிய குடும்பத்தின் மூத்த ஆண்வாரிசான ஷாகரின் பிறந்தநாளை முன்னிட்டே அனைவரும் ஒன்றுகூடியிருந்தனர்.. அனைவரும் இங்கு வம்படித்து கொண்டிருக்க இவ்விழாவின் நாயகனோ தன் அறைக்கட்டிலில் படுத்தபடி போனில் தன் காதலியுடன் கொஞ்சிகொண்டிருந்தான்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என்னை
தீண்டிவிட்டாய்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top