அருமையான பதிவு மகி
.முதல் புருசன் பேரை கேட்டதுக்கு சுமதி முழிச்ச முழியே காட்டி கொடுத்திருக்கும்
.தேனு பேரை சொல்லி தப்பிச்சுட்டா
.தீனா திருந்துனது போல தான் தெரியுது
, சுமதி தனக்கு கல்யாணம் ஆகலை என தீனாவிடம் சொல்லியிருக்கலாம்
.
சின்ன பசங்கள பிச்சை எடுக்க விட்டு,அவங்க கொண்டு வர்ற பணத்தையும் பிடுங்கிட்டு, சாப்பாடும்
சரியா கொடுக்காம, குடிச்சுட்டு வந்து அடிக்கறது,சூடு போட்டு அழறத ரசிக்கறாங்களே.
பாவம் தீனா ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கான்
.
அம்மா,அப்பா இல்லாம தாங்கள் தான் கஷ்டப்பட்டதாக சுமதி நினைத்திருக்க
,தீனா பட்ட துன்பத்துக்கு முன்பு அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு புரியுது
.தீனா வளர்ந்த விதமும், இந்த சமுதாயத்தால் பட்ட கஷ்டங்களும் அவனை அடியாளாக மாற்ற,சுமதியின் அன்பு அவனை
அடிதடியை விட்டு நல்ல வேலை சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா
.
தன் மேல் வண்டியை மோதியவன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்க வேணாம்னு தீனா சொன்னதே நல்ல மாற்றம் தான்
.குணா சொல்வது போல வேலை செய்யும் இடத்தில் வம்பு செய்ய ஆளுங்க இருப்பாங்க,எதையும் கண்டுக்காம தீனா இருப்பானானு சந்தேகம் தான்
.
ரெண்டு,மூனு பசங்க வேணும்,ரொம்ப நாளைக்கு உங்க கூட வாழனும்னு சொல்லும் சுமதியின் ஆசையை நிறைவேத்த,தீனா அடிதடியை விட்டு சொந்தமாக தொழில் தொடங்குவானோ
.