@dhanuja senthilkumar எங்களையும் நீங்கள் களவு கொண்டுவிட்டீர்கள்... உறவுகளின் உரிமைகளையும் கடமைகளையும் அன்போடும் அறிவோடும் நகர்த்திச் செல்வது எப்படி என்று இதில் நான் அறிந்துகொண்டேன்... வெறும் கதையாக மட்டுமல்ல அக்குடும்பத்தில் ஒருவராக எண்ணச் செய்துவிட்டீர்கள்... அதுமட்டுமல்ல உலகை ஆளும் அம்பலத்தான்- சிவகாமி சுந்தரியின் சிறப்புக்களை நான் தெரிந்து கொள்ள எனக்கு இது ஒரு திறவுகோல் எப்படியென்றால் இவ்விரு பெயர்களின் மீது மோகம் கொண்டு இணையத்தில் கட்டுரைகள் காணொளிகள் மூலமாக அறிந்தேன்... இதுபோல கதம்பவனம் கதையிலும் உறவுகளின்
முக்கியத்துவமும் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்... மென்மேலும் சிறந்த கதைகள் எழுத இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... நன்றி தெரிவித்து விடைபெறாமல் நல்லவை அல்லவை அறிந்து கொள்ள ஆவலுடன் உங்கள் அடுத்த கதையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்... விரைவில் வாருங்கள்...