ஹாய் மஞ்சுமிக மிக அருமையான பள்ளி காதல் கதை....
தாலாட்டும் ஞாபகங்கள் பதிவுகள், அப்படியே பள்ளியின் இளமை காலத்திற்கு சென்று வந்த உணர்வு...
அதியனின் காதல் கதை....
என்ன சொல்ல கவிதையாய் ஒரு காதல் கதை...
அவனோட கதைய படிக்கறப்ப அவன் கூட இருந்து அவனோட ஒவ்வொரு செயல்களையும், உணர்வுகளையும் நேர்ல பார்த்தது போல இருந்தது... அவ்வளவு அழகான ஒரு எழுத்து நடை...
அகத்தியன் ஐயா அவர்கள், என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம்.... எழுத்தில் வார்க்க முடியாத அளவுக்கு மிக மிக அருமையா கதாபாத்திரம்... அக்காலத்தில் வாழ்ந்த மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்றோரை படிப்பது போல் இருந்தது....
சூர்யாவோட அந்த அழுகை தான் அழகே.... ஏன்னா அவளோட அந்த அழுகை தானே அதியன ஈர்த்தது...
அதியனோட அம்மா & பொதிகைக்கு புலவரிடம் பாடமா அருமை...
இன்னும் ஒரு 2 பதிவுகளையாவது கொடுத்து இருக்கலாம் அக்காஸ்... ரொம்ப சீக்கிரம் கதை முடிஞ்ச ஃபீலிங்குகுகுகு....
உங்களோட கதையே ஒரு கவிதை படிக்குற உணர்வு எப்பொழுதும்... அவ்வளவு அழகான தமிழ் நடை....
அவ்வை & இளா பத்தி ஒரு சில வரிகள் சொல்லிருக்கலாம்...
உங்களின் அடுத்த படைப்புக்காக ஆவலாக காத்திருக்கிறேன் அக்காஸ்...
ரொம்ப நன்றிடா. கதை ஆரம்பம் முதல் இறுதி வரை கதையோட பயணம் செய்து வந்தீங்க உங்க கருத்துக்கள் அவ்வளவு உற்சாகம் தரும்
அகத்தியன் உங்களுக்கு விருப்பமான கதாப்பாத்திரம் இல்லையா அகத்தியனை இவ்ளோ பேருக்கு பிடிக்கும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை ரொம்ப சந்தோசமா இருக்கு
குறுநாவல் தானே இது. அங்கவை, இளம்பிறை விரைவில் உங்களை சந்திக்க வருவார்கள். தயாராக இருங்க
நன்றி