வணக்கம் சகோதரி!
இது கிராமத்து குடும்பம் மற்றும் காதல் கதை. அரசியல் கதை அல்ல.
இரு குடும்பங்கள் காதலை ஏற்றுக்கொள்ளாமல் போக ஜாதி அல்லது முன் பகை காரணமாக இருக்கும். அது வேண்டாம் என்பதால் அரசியல் எதிரிகள் என காண்பிக்க மட்டுமே அரசியலில் இருக்கிறார்கள் என காட்டியிருக்கிறேன்.
அப்படியும் ஒரு எபியில் ஹீரோவிடம் வார்டு பிரச்சனைகள் பாராமல் வத்தல் பிழிகிறாயா என கந்தசாமி கேள்வி கேட்பது போல வைத்திருக்கிறேன். அதற்குள் அதிகம் உள்ளே சென்றால் கதை வேறு பக்கம் சென்று விடும் என்பதால் மேலோட்டமாக சொல்வதோடு நிறுத்திக் கொண்டேன் சிஸ்.
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல சம்பளம் கிராம பஞ்சாயத்துகளில் கிடைப்பதில்லை சிஸ். சில ஆயிரங்களில்தான் சம்பளம் கிடைக்கிறது. அதை சேர்த்து வைத்திருந்ததில்தான் நகை வாங்கி விட்டான்.
அரசியலிலும் அவனுக்கு ஈடுபாடு கிடையாது, அப்பாவின் வற்புறுத்தலில் இருக்கிறான். இது நிரந்தரமும் அல்ல. இவன் விஷயத்தில் சும்மா குடும்பத்தை ஓட்டினால் மட்டும் போதாதே, மனைவிக்கு உண்டான அனைத்தையும் செய்ய வேண்டும். ஆகவே அவன் பொருளாதார நெருக்கடியில்தான் இருக்கிறான் சிஸ்.
மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் சிஸ்