ஹாய் ப்ரெண்ட்ஸ் புதுக் கதையோடு வந்துட்டேன்.
தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள்
.தீ கொழுந்துவிட்டு எரிவதுபோலக் காணப்படும் செங்காந்தள் பூவை
செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும்
இத்தகைய சிறப்புவாய்ந்த வரலாறுகளைக்கொண்ட செங்காந்தள் மலர் புற்றுநோய்க்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
ஓகே என்னடா சம்பந்தமே இல்லாம செங்காந்தள் மலர பத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று யோசிக்கிறீர்களா?
என்னோட முதல் கதை என்னை மறந்தவளே என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த கதை தான் நான் முதல் முதலாக எழுதணும் என்று யோசித்து வைத்த கதை. ஒருசில காரணங்களால் இதுவரை எழுத முடியாமல் போனது.
எல்லா கதையையும் வித்தியாசமா எழுதலாம் என்று என் முயற்சியில் இந்த கதையை எழுதலாம் என்று நினைக்கிறேன். வளமை போல் உங்கள் அன்பும் ஆதரவும் உறுதுணையாகட்டும்.
செங்காந்தள் மலரின் வன்மம் யாரை காவு வாங்கப் போகிறது கதையில் காணலாம்
வான்முகிலன்,பாக்யஸ்ரீ
நிலஞ்சனா
மலர்விழி
தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள்
.தீ கொழுந்துவிட்டு எரிவதுபோலக் காணப்படும் செங்காந்தள் பூவை
அக்னிசலம்’ என்று சொல்வார்கள்.கிழங்கு கலப்பையைப்போன்ற தோற்றத்துடன் காணப்படுவதால், அதை
கலப்பை’ என்றும், இலாங்கிலி’ என்றும் சொல்வார்கள். இலைகளின் நுனி சுருண்டு காணப்படுவதால்,
தலைச்சுருளி’ என்பார்கள். மற்ற தாவரங்களைப் பற்றிக்கொண்டு வளர்வதால் பற்றி’ என்றும் சொல்வார்கள். வளைந்து பற்றிக்கொள்வதால்,
கோடல்’, கோடை’ என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பூ பூப்பதால்
கார்த்திகைப்பூ’ எனப்படுகிறது. மழைக்காலத்தில் வனப்புடன் காணப்படுவதால், தோன்றி’ என்றும் நாட்டு மருத்துவத்தில்
வெண்தோண்டி’ என்று அழைப்பார்கள். பூக்களின் நிறம் வேறுபடுவதால், வெண்காந்தள்’ என்றும்,
செங்காந்தள்’ என்றும் வர்ணிக்கிறார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் காணப்படுவதை, ஆண்காந்தள்’ என்றும் கணுக்கள் இல்லாததை
பெண்காந்தள்’ என்றும் சொல்வார்கள்.செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும்
கோல்ச்சிசின்’ (Colchicine) என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும்.
முதலில் பச்சை நிறத்துடன் பூக்கும் இந்த மலர் பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு (Scarlet), நீலம் கலந்த சிவப்பு என நிறம் மாறிக்கொண்டே போகும்.
செங்காந்தள் மலரில் தேன் அதிகமாகக் காணப்படுவதால், எப்போதும் வண்டுகளும் தேனீக்களும் வட்டமிட்டுக்கொண்டிருக்குமாம். பொதுவாக, மலர்கள் அனைத்துமே பூத்து உதிரக்கூடியவை. ஆனால், செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை. இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை
கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள்.இத்தகைய சிறப்புவாய்ந்த வரலாறுகளைக்கொண்ட செங்காந்தள் மலர் புற்றுநோய்க்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
ஓகே என்னடா சம்பந்தமே இல்லாம செங்காந்தள் மலர பத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று யோசிக்கிறீர்களா?
என்னோட முதல் கதை என்னை மறந்தவளே என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த கதை தான் நான் முதல் முதலாக எழுதணும் என்று யோசித்து வைத்த கதை. ஒருசில காரணங்களால் இதுவரை எழுத முடியாமல் போனது.
எல்லா கதையையும் வித்தியாசமா எழுதலாம் என்று என் முயற்சியில் இந்த கதையை எழுதலாம் என்று நினைக்கிறேன். வளமை போல் உங்கள் அன்பும் ஆதரவும் உறுதுணையாகட்டும்.
செங்காந்தள் மலரின் வன்மம் யாரை காவு வாங்கப் போகிறது கதையில் காணலாம்
வான்முகிலன்,பாக்யஸ்ரீ
நிலஞ்சனா
மலர்விழி