கீதமாகுமோ பல்லவி - 14

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Nice update

வயித்துல வளத்த
புள்ள வந்து நிக்க வாசலில்லை
மடியில வளந்ததுக்கு
இங்கிருக்க ஆசையில்லை
மகனா பொறந்ததுக்கு
தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது
நியாயமில்லை
தொட்டிலில் நாம்
கிடந்தா சோகம் வந்து
சேர்வதில்லை தோளிலே
வாழும் வரை துன்பமின்னு
ஒன்னுமில்லை

பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா
பிள்ளையின் மனசு
பித்தாச்சு இங்க பெத்தவ
மனசு கல்லாச்சு இன்னொரு
மனசு என்னாச்சு அது
முறிஞ்சுபோன வில்லாச்சு
என்ன பாட்டு க்கா இது.. வரிகள் எல்லாம் படித்தாவே ரொம்ப உருக்கமா கண்ணுல தண்ணிய வரவைக்காம விடாது போலையே :cry::cry: ஸ்வரனுக்கு கரெக்டா சூட் ஆகுது

நன்றி சிந்து க்கா
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன பாட்டு க்கா இது.. வரிகள் எல்லாம் படித்தாவே ரொம்ப உருக்கமா கண்ணுல தண்ணிய வரவைக்காம விடாது போலையே :cry::cry: ஸ்வரனுக்கு கரெக்டா சூட் ஆகுது

நன்றி சிந்து க்கா
அதே "பெத்து எடுத்தவதான்" பாட்டுத்தான், மித்ராபரணி டியர்
வேலைக்காரன் மூவி
முதலில் இருக்கும் வரிகள் நடுவில் வரும்ப்பா
இந்தப் பாடல் கேட்டதில்லையா?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
என்ன இருந்தாலும் அம்பிகா செய்தது தவறுதான்
பத்தொன்பது வயசுல ஒரு இளம் விதவை
வேற துணை தேடியது தவறில்லை
ஆனால் பெற்ற மகனை அம்போன்னு
விட்டுட்டு போனதுதான் தப்பு

அதுவும் எட்டு மாசச் சின்னக் குழந்தைக்கு
தந்தைதான் இல்லை தாயின் அரவணைப்பும் இல்லைங்குற பொழுது ஆதீஸ்வரன்
எவ்வளவு மனசு கஷ்டப்பட்டிருப்பான்?

பெற்ற பையன் வேண்டாம் புதிய வாழ்க்கைதான் வேணும்ன்னு
ஒன்ஸ் போனப்புறம் திரும்ப எதுக்கு ஸ்வரனைத் தேடி அம்பிகா வரணும்?

ஒருவேளை புருஷோத்தமனின் மகன் இவளிடம் அன்பா இருந்திருந்தாலோ or புருஷோத்தமன் உயிரோடு இருந்திருந்தாலோ அம்பிகா ஸ்வரனைத் தேடி வந்திருக்கப் போவதில்லை

எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அம்பிகாவை யாரு தெருவில் நிற்கச் சொன்னாங்க?
ஒருவேளை ஒண்ணுமில்லாமல் இருந்தால்தான் தன்னை ஆதி ஏற்றுக் கொள்வான்னு இதிலும் சுயநல யோஜனையா?

ஆதீஸ்வரனிடம் தவறு ஏதுமில்லை
பெற்ற கடனுக்கு உண்ண உணவும்
இருக்க இடமும் ஏற்பாடு செஞ்ச ஆதியிடம் செல்பிஷ் அம்பிகாவை ஏற்றுக் கொள்ள பல்லவி வற்புறுத்துவது சரியில்லை
சுந்தரேஸ்வரன் இல்லாம போயிருந்தா ஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறி தான். ஒரு தாயா அம்பிகா தன்னோட கடமையை சரியா செய்யலை. செய்யவே இல்லை அப்பறம் எங்க சரியா செய்யலைன்னு சொல்லுறது.

புருஷோத்தமன் உயிரோடு இருந்திருந்தால் அம்பிகாவிற்கு துணையாக இருந்திருந்தால்.. முன்பு அவர் செய்த துரோகத்தின் அளவை அவரால் இறுதிவரையிலுமே உணரமுடியாது போயிருக்கும்.

எடுத்து வளர்த்த பையன் இவங்களை ஒதுக்குறது வருத்தமா இருந்தா பெத்த பையனை இவங்க ஒதுக்கி வெச்சது மட்டும் எதுல சேரும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அம்பிகாவிற்கு காலம் பதில் சொல்லிக் கொண்டிருகிறது.

தொடர்ந்து பயணிப்போம்.. நன்றி பானு மா :love::love::whistle::whistle:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அதே "பெத்து எடுத்தவதான்" பாட்டுத்தான், மித்ராபரணி டியர்
வேலைக்காரன் மூவி
முதலில் இருக்கும் வரிகள் நடுவில் வரும்ப்பா
இந்தப் பாடல் கேட்டதில்லையா?
:cry::cry: இல்லையே பானு மா. இப்போதான் கவனிச்சு கேட்டுட்டு வர்றேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top