என்ன இருந்தாலும் அம்பிகா செய்தது தவறுதான்
பத்தொன்பது வயசுல ஒரு இளம் விதவை
வேற துணை தேடியது தவறில்லை
ஆனால் பெற்ற மகனை அம்போன்னு
விட்டுட்டு போனதுதான் தப்பு
அதுவும் எட்டு மாசச் சின்னக் குழந்தைக்கு
தந்தைதான் இல்லை தாயின் அரவணைப்பும் இல்லைங்குற பொழுது ஆதீஸ்வரன்
எவ்வளவு மனசு கஷ்டப்பட்டிருப்பான்?
பெற்ற பையன் வேண்டாம் புதிய வாழ்க்கைதான் வேணும்ன்னு
ஒன்ஸ் போனப்புறம் திரும்ப எதுக்கு ஸ்வரனைத் தேடி அம்பிகா வரணும்?
ஒருவேளை புருஷோத்தமனின் மகன் இவளிடம் அன்பா இருந்திருந்தாலோ or புருஷோத்தமன் உயிரோடு இருந்திருந்தாலோ அம்பிகா ஸ்வரனைத் தேடி வந்திருக்கப் போவதில்லை
எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அம்பிகாவை யாரு தெருவில் நிற்கச் சொன்னாங்க?
ஒருவேளை ஒண்ணுமில்லாமல் இருந்தால்தான் தன்னை ஆதி ஏற்றுக் கொள்வான்னு இதிலும் சுயநல யோஜனையா?
ஆதீஸ்வரனிடம் தவறு ஏதுமில்லை
பெற்ற கடனுக்கு உண்ண உணவும்
இருக்க இடமும் ஏற்பாடு செஞ்ச ஆதியிடம் செல்பிஷ் அம்பிகாவை ஏற்றுக் கொள்ள பல்லவி வற்புறுத்துவது சரியில்லை
சுந்தரேஸ்வரன் இல்லாம போயிருந்தா ஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறி தான். ஒரு தாயா அம்பிகா தன்னோட கடமையை சரியா செய்யலை. செய்யவே இல்லை அப்பறம் எங்க சரியா செய்யலைன்னு சொல்லுறது.
புருஷோத்தமன் உயிரோடு இருந்திருந்தால் அம்பிகாவிற்கு துணையாக இருந்திருந்தால்.. முன்பு அவர் செய்த துரோகத்தின் அளவை அவரால் இறுதிவரையிலுமே உணரமுடியாது போயிருக்கும்.
எடுத்து வளர்த்த பையன் இவங்களை ஒதுக்குறது வருத்தமா இருந்தா பெத்த பையனை இவங்க ஒதுக்கி வெச்சது மட்டும் எதுல சேரும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அம்பிகாவிற்கு காலம் பதில் சொல்லிக் கொண்டிருகிறது.
தொடர்ந்து பயணிப்போம்.. நன்றி பானு மா