உன் விழிப்பார்வை
எனை வீழ்த்த
உன் கள்ளச்சிரிப்பு
எனை கவிழ்க்க
காதலெனும் யுத்தகளத்தில்
எனை நிராயுதபாணியாக்கி
எனை வென்று
எனக்கு வெற்றிவாகை
சூடியவளுக்கு
நான் மணமாலை
சூட்டும் நாள்
எப்போது???
சமாலை நான்கு மணியளவில் ரெஜிஸ்டரார் வர ஶ்ரீயின் வீட்டிற்கு வெளியேயிருந்த கார்டனில் மோதிரம் மாற்றும் நிகழ்வும் சட்டபூர்வமாய் திருமணத்தை பதிவு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது....
கார்டன் முழுவதும் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பலூன்களாலும் இன்னும் பல பூக்கள் மற்றும் அலங்கார பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது... கார்டனின் ஒரு பக்கமாய் அங்கிருந்து ஒரு பெரிய மரத்தின் கீழே இரும்பினால் செய்யப்பட்ட ஊஞ்சலொன்று அமைக்கப்பட்டிருந்தது... அது முழுதும் சிவப்பு ரோஜாப்பூக்களாலும் வெள்ளை ரோஜாப்பூக்களாலும் பிளாஸ்டிக்காலான கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.... அமரும் இடத்தில் வெள்ளையும் சிவப்பும் கலந்த ஒரு விரிப்பான் போர்த்தப்பட்டிருந்தது... அந்த ஊஞ்சலிருற்கு நேர் மேலே மரத்தில் வெள்ளை நிற பூக்களும் சிவப்பு நிற பூக்களும் சேர்த்து தொடுக்கப்பட்டிருந்த பூச்சரங்கள் அடுத்தடுத்தாய் தொங்கவிடப்பட்டிருந்தது..... இவ்வாறு மணையலங்காரமிருக்க மணப்பெண்ணான ஶ்ரீயும் மணமகனான ரிஷியும் அவர்களிருந்த அறைகளிலிருந்து நண்பர்கள் துணையுடன் அழைத்து வரப்பட்டனர்.
ரிஷி வெள்ளைநிற சர்வானி குர்த்தியும் கையில் ஒமேகா ஜார்ட் வாச்சும் அணிந்திருந்தான்.... எப்போதும் போல் அலையலையாய் முன்னெற்றியை மறைத்துநிற்கும் கேசத்தினை ஜெல்லின் உதவியால் வாரியிருந்தான்....கம்பீரமாய் எழுந்து நிற்கும் புருவங்களும் கூரான நாசியும் என்றும் போல் இன்றும் அவனது ஆண்மைக்கு கர்வம் சேர்க்க எப்போதும் முழுதாய் சவரம் செய்யப்பட்டிருக்கும் தாடி இன்று ட்ரிம் மட்டும் செய்யப்பட்டிருந்தது... அது எப்போதும் போலல்லாது இன்று அவனது அழகை இன்னும் அசத்தலாய் காட்டியது....... மன்மதனாய் தயாராகி வந்தவனுக்கு ஏற்ற ஜோடியாய் ரதியாய் வந்து சேர்ந்தாள் ஶ்ரீதான்யா....
சிவப்பு நிற லெஹேங்காவில் ரதியாய் ஜொலித்தாள் ஶ்ரீ..... ஆங்காங்கே வெள்ளைநிற கற்களின் கைவண்ணத்தால் அந்த லெஹேங்கா ஜொலிக்க அது அவளது கோதுமை நிறத்திற்கு மெல்லிய உடல்வாகுவிற்கும் பொருத்தமாய் இருந்தது..... இரு கைகளிலும் சிவப்பு நிற கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தவள் கழுத்தையொட்டி ஆடைக்கு பொருத்தமாக நெக்லஸ் ஒன்று அடிந்திருந்தாள் .... இருபுறமும் இரண்டு கூந்தல் கற்றைகளை ரோல் செய்து பின்புறம் ஹேர்பின்னின் உதவியுடன் இணைந்திருந்தாள்.....ஒரு பகுதி கூந்தல் கற்றை திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சனையினைபோல் சுருள் சுருளாக வலப்புற மார்பின் முன் தொங்கியபடியிருக்க மற்றைய கூந்தல் கற்றை பின்முதுகை மறைத்திருந்தது.... ரோல் செய்யபட்டிருந்த கூந்தல் கற்றைகளின் இடையிடையே சிறு சிவப்பு நிற பிளாஸ்டிக் ரோஜாப்பூக்கள் சொருகப்பட்டிருந்தன... ஆடையிலே முக்கால்வாசி அலங்காரம் முடிந்துவிட மீதி கால்வாசி பியூட்டிஷனின் கைவண்ணத்தில் பூர்த்தியாகியிருந்தது........
இவ்வாறு மன்மதன் ரதியாய் நின்றவர்களின் ஜோடிப்பொருத்தத்தில் அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப்போயினர்.......
மூர்த்தி தம்பதியினரும் ராஜேஷ்குமார் தம்பதியினரும் தம் பிள்ளைகளின் வாழ்வு அவர்களது ஜோடிப்பொருத்தம் போல் எப்போதும் இனிக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக்கொண்டனர்.
முதலில் அந்த ஊஞ்சலில் ரிஷி அழைத்து வந்து அமர்த்தப்பட அவனை தொடர்ந்து ஶ்ரீ அழைத்து வரப்பட்டாள்....
தோழிகள் சூழ அன்னப்பதுமையாய் நடந்து வந்தவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் ரிஷி.....
ஒரு நிமிடம் “ ப்பா என்ன பொண்ணுடா இவ...” என்ற கேள்வியை எழுப்ப ரிஷியின் காதல் உள்ளம் மறக்கவில்லை.....
ஏற்கனவே காலையில் சேலையில் இருந்தவளை கண்டு மயக்கத்தில் இருந்தவனை மொத்தமாய் போதையில் கவிழ்க்கவென வந்து சேர்ந்தாள் ஶ்ரீ...
ரிஷியின் அருகில் அமர்ந்தவள் அவனை திரும்பி பார்க்க அவனது பார்வை அவளை அணுவணுவாய் விழுங்கிக்கொண்டிருந்தது... அதில் கன்னமிரண்டும் செம்மையேற இன்னும் மிளிர்ந்தாள் ஶ்ரீ......
வெட்கத்தில் நாணிக்குனிந்தவளின் கையின் மீது தன் கையை வைத்தான் ரிஷி...
அதை பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் பட்டாளமோ ஓ ஹோ என்று கூப்பாடிட்டது... அதில் மேலும் வெட்கிச்சிவந்தவள்
“அத்தான் ப்ளீஸ்.... எல்லாரும் பார்க்குறாங்க.....” என்று மெல்லியகுரலில் கூற அவனோ அவள்புறம் குனிந்து
“என்ன அம்லு சத்தத்தையே காணோம்.... வெறும் காத்து மட்டும் தான் வருது...” என்று கண்ணடிக்க அதில் மேலும் சிவந்தாள் ஶ்ரீ.....
பின் இந்த காதல் பரிமாற்றத்திற்கு இடைவெளி வழங்கும் முகமாக ஒரு மேசையினை தள்ளிக்கொண்டு வந்தனர் அனுவும் ரித்வியும்...
அது ரிஷியும் ஶ்ரீயும் அமர்ந்திருந்த ஊஞ்சல் இருக்கைக்கு எதிராக போடப்பட்டு அதனுடன் ஒரு கதிரையும் போடப்பட்டது...
அப்போது அங்கு அழைத்துவரப்பட்ட ரெஜிஸ்ரார் அதில் அமர்ந்து அவர்களது விவாகப்பதிவு வேலையில் ஈடுபட்டார்.... இருவரிடமும் இரண்டு இடங்களை காட்டி கையொப்பமிடக்கூறியவர் சாட்சிக்கையெழுத்தாக ரிஷியின் மாமாவும் ஶ்ரீயின் மாமாவும் கையெழுத்திட்டனர்... அனைவரும் கையெழுத்திட்டதும் மாரேஜ் சேட்டிவிக்கட்டை இருவரிடமும் கொடுத்தவர் வாழ்த்திவிட்டு விடைபெற்றார்.....
அவர் சென்றதும் மேஜையை அப்புறப்படுத்திய அனுவும் ரித்வியும் ஆளுக்கொரு தட்டுடன் வந்தனர்....
ரித்வி கையில் வைத்திருந்த தட்டில் ஒரு மணப்பெண் பொம்மையும் அதனுடன் இதயவடிவ மோதிரப்பெட்டியொன்று திறந்த நிலையில் இருந்தது.... அதனுள்ளே வைரக்கல் பதித்த மோதிரமொன்று இருந்தது... அதே போல் அனு கையில் வைத்திருந்த தட்டில் மணமகன் பொம்மையும் அதனருகே இதயவடிவ மோதிரப்பெட்டி திறந்திருக்க அதனுள்ளும் ஒரு வைரக்கல் பதித்த மோதிரமொன்று இருந்தது......
ரித்வி தான் வைத்திருந்த தட்டை ரிஷி புறம் நீட்ட அதிலிருந்து மோதிரத்தை எடுத்தவன் ஶ்ரீயின் புறம்தன் இடக்கையை நீட்ட அதில் அவள்தன் இடக்கையை வைக்க முழந்தாளிட்டு அவள் புறங்கையில் முத்தமிட்டவன்அந்நிலையிலேயே அவளை பார்க்க ஶ்ரீயோ அவனது முத்தம் தந்த குறுகுறுப்பில் அவள் முகம் சிவக்க அதை மறைக்கும் வழி தெரியாது தடுமாறியபடி மறு கையால் முகத்தை மறைக்க முயல சுற்றியிருந்த அனைவரும் கை தட்டி கூச்சலிட்டனர்.... முழந்தாளிலிருந்து எழுந்தவன் அவளது மோதிரவிரலில் அந்த நிச்சய மோதிரத்தை அணிவித்தான்.மோதிரம் அணிவிக்கும் போது மரத்திலேயே பொருத்தி வைக்கப்பட்டிருந்த பூக்கூடை கவிழ்க்கப்பட அதிலிருந்து அந்த ஜோடிகளை ஆசிர்வதிக்கும் விதமாக கொட்டியது ரோஜாப்பூ இதழ்கள்......
ஶ்ரீயும் அனுவின் கையிலிருந்த தட்டிலிருந்து மோதிரத்தை எடுத்தவள் ரிஷியிற்கு அணிவிக்க சபையோர் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரிக்க மீண்டும் பூ மழை பொழிந்தது....
நிச்சய மோதிரம் மாற்றியதும் அனு ஶ்ரீயை கட்டிக்கொண்டு தனது வாழ்த்தை தெரிவிக்க ரித்வியும் தன் அண்ணனை கட்டிக்கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்தான்....
பின் இருவரின் பெற்றோரும் வந்து அவர்களை ஆசிர்வதித்தனர் ...
பெற்றோரிடம் ஆசி வாங்கியதும் இருவரையும் மீண்டும் அமரச்செய்த ரித்வி
அவர்களுக்கென ஒரு சப்ரைஸ் நடனமொன்று பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒழுங்கு செய்திருப்பதாக அறிவித்தான்.....
அவனது அறிவிப்பின் பிரகாரம் ரித்வி, ரவி, சுந்தர்,ஹரி என்று ஆண்கள் கூட்டணியும் அனு, சஞ்சு, ப்ரீதா என்று பெண்கள் கூட்டணியும் இணைந்து சில பாடல்களை மேஸ்அப் செய்து ஆடினர்.... இந்த ஆட்டம் முடிந்தது ஶ்ரீயை பாட அழைத்தான் ரித்வி....
எனை வீழ்த்த
உன் கள்ளச்சிரிப்பு
எனை கவிழ்க்க
காதலெனும் யுத்தகளத்தில்
எனை நிராயுதபாணியாக்கி
எனை வென்று
எனக்கு வெற்றிவாகை
சூடியவளுக்கு
நான் மணமாலை
சூட்டும் நாள்
எப்போது???
சமாலை நான்கு மணியளவில் ரெஜிஸ்டரார் வர ஶ்ரீயின் வீட்டிற்கு வெளியேயிருந்த கார்டனில் மோதிரம் மாற்றும் நிகழ்வும் சட்டபூர்வமாய் திருமணத்தை பதிவு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது....
கார்டன் முழுவதும் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பலூன்களாலும் இன்னும் பல பூக்கள் மற்றும் அலங்கார பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது... கார்டனின் ஒரு பக்கமாய் அங்கிருந்து ஒரு பெரிய மரத்தின் கீழே இரும்பினால் செய்யப்பட்ட ஊஞ்சலொன்று அமைக்கப்பட்டிருந்தது... அது முழுதும் சிவப்பு ரோஜாப்பூக்களாலும் வெள்ளை ரோஜாப்பூக்களாலும் பிளாஸ்டிக்காலான கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.... அமரும் இடத்தில் வெள்ளையும் சிவப்பும் கலந்த ஒரு விரிப்பான் போர்த்தப்பட்டிருந்தது... அந்த ஊஞ்சலிருற்கு நேர் மேலே மரத்தில் வெள்ளை நிற பூக்களும் சிவப்பு நிற பூக்களும் சேர்த்து தொடுக்கப்பட்டிருந்த பூச்சரங்கள் அடுத்தடுத்தாய் தொங்கவிடப்பட்டிருந்தது..... இவ்வாறு மணையலங்காரமிருக்க மணப்பெண்ணான ஶ்ரீயும் மணமகனான ரிஷியும் அவர்களிருந்த அறைகளிலிருந்து நண்பர்கள் துணையுடன் அழைத்து வரப்பட்டனர்.
ரிஷி வெள்ளைநிற சர்வானி குர்த்தியும் கையில் ஒமேகா ஜார்ட் வாச்சும் அணிந்திருந்தான்.... எப்போதும் போல் அலையலையாய் முன்னெற்றியை மறைத்துநிற்கும் கேசத்தினை ஜெல்லின் உதவியால் வாரியிருந்தான்....கம்பீரமாய் எழுந்து நிற்கும் புருவங்களும் கூரான நாசியும் என்றும் போல் இன்றும் அவனது ஆண்மைக்கு கர்வம் சேர்க்க எப்போதும் முழுதாய் சவரம் செய்யப்பட்டிருக்கும் தாடி இன்று ட்ரிம் மட்டும் செய்யப்பட்டிருந்தது... அது எப்போதும் போலல்லாது இன்று அவனது அழகை இன்னும் அசத்தலாய் காட்டியது....... மன்மதனாய் தயாராகி வந்தவனுக்கு ஏற்ற ஜோடியாய் ரதியாய் வந்து சேர்ந்தாள் ஶ்ரீதான்யா....
சிவப்பு நிற லெஹேங்காவில் ரதியாய் ஜொலித்தாள் ஶ்ரீ..... ஆங்காங்கே வெள்ளைநிற கற்களின் கைவண்ணத்தால் அந்த லெஹேங்கா ஜொலிக்க அது அவளது கோதுமை நிறத்திற்கு மெல்லிய உடல்வாகுவிற்கும் பொருத்தமாய் இருந்தது..... இரு கைகளிலும் சிவப்பு நிற கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தவள் கழுத்தையொட்டி ஆடைக்கு பொருத்தமாக நெக்லஸ் ஒன்று அடிந்திருந்தாள் .... இருபுறமும் இரண்டு கூந்தல் கற்றைகளை ரோல் செய்து பின்புறம் ஹேர்பின்னின் உதவியுடன் இணைந்திருந்தாள்.....ஒரு பகுதி கூந்தல் கற்றை திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சனையினைபோல் சுருள் சுருளாக வலப்புற மார்பின் முன் தொங்கியபடியிருக்க மற்றைய கூந்தல் கற்றை பின்முதுகை மறைத்திருந்தது.... ரோல் செய்யபட்டிருந்த கூந்தல் கற்றைகளின் இடையிடையே சிறு சிவப்பு நிற பிளாஸ்டிக் ரோஜாப்பூக்கள் சொருகப்பட்டிருந்தன... ஆடையிலே முக்கால்வாசி அலங்காரம் முடிந்துவிட மீதி கால்வாசி பியூட்டிஷனின் கைவண்ணத்தில் பூர்த்தியாகியிருந்தது........
இவ்வாறு மன்மதன் ரதியாய் நின்றவர்களின் ஜோடிப்பொருத்தத்தில் அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப்போயினர்.......
மூர்த்தி தம்பதியினரும் ராஜேஷ்குமார் தம்பதியினரும் தம் பிள்ளைகளின் வாழ்வு அவர்களது ஜோடிப்பொருத்தம் போல் எப்போதும் இனிக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக்கொண்டனர்.
முதலில் அந்த ஊஞ்சலில் ரிஷி அழைத்து வந்து அமர்த்தப்பட அவனை தொடர்ந்து ஶ்ரீ அழைத்து வரப்பட்டாள்....
தோழிகள் சூழ அன்னப்பதுமையாய் நடந்து வந்தவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் ரிஷி.....
ஒரு நிமிடம் “ ப்பா என்ன பொண்ணுடா இவ...” என்ற கேள்வியை எழுப்ப ரிஷியின் காதல் உள்ளம் மறக்கவில்லை.....
ஏற்கனவே காலையில் சேலையில் இருந்தவளை கண்டு மயக்கத்தில் இருந்தவனை மொத்தமாய் போதையில் கவிழ்க்கவென வந்து சேர்ந்தாள் ஶ்ரீ...
ரிஷியின் அருகில் அமர்ந்தவள் அவனை திரும்பி பார்க்க அவனது பார்வை அவளை அணுவணுவாய் விழுங்கிக்கொண்டிருந்தது... அதில் கன்னமிரண்டும் செம்மையேற இன்னும் மிளிர்ந்தாள் ஶ்ரீ......
வெட்கத்தில் நாணிக்குனிந்தவளின் கையின் மீது தன் கையை வைத்தான் ரிஷி...
அதை பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் பட்டாளமோ ஓ ஹோ என்று கூப்பாடிட்டது... அதில் மேலும் வெட்கிச்சிவந்தவள்
“அத்தான் ப்ளீஸ்.... எல்லாரும் பார்க்குறாங்க.....” என்று மெல்லியகுரலில் கூற அவனோ அவள்புறம் குனிந்து
“என்ன அம்லு சத்தத்தையே காணோம்.... வெறும் காத்து மட்டும் தான் வருது...” என்று கண்ணடிக்க அதில் மேலும் சிவந்தாள் ஶ்ரீ.....
பின் இந்த காதல் பரிமாற்றத்திற்கு இடைவெளி வழங்கும் முகமாக ஒரு மேசையினை தள்ளிக்கொண்டு வந்தனர் அனுவும் ரித்வியும்...
அது ரிஷியும் ஶ்ரீயும் அமர்ந்திருந்த ஊஞ்சல் இருக்கைக்கு எதிராக போடப்பட்டு அதனுடன் ஒரு கதிரையும் போடப்பட்டது...
அப்போது அங்கு அழைத்துவரப்பட்ட ரெஜிஸ்ரார் அதில் அமர்ந்து அவர்களது விவாகப்பதிவு வேலையில் ஈடுபட்டார்.... இருவரிடமும் இரண்டு இடங்களை காட்டி கையொப்பமிடக்கூறியவர் சாட்சிக்கையெழுத்தாக ரிஷியின் மாமாவும் ஶ்ரீயின் மாமாவும் கையெழுத்திட்டனர்... அனைவரும் கையெழுத்திட்டதும் மாரேஜ் சேட்டிவிக்கட்டை இருவரிடமும் கொடுத்தவர் வாழ்த்திவிட்டு விடைபெற்றார்.....
அவர் சென்றதும் மேஜையை அப்புறப்படுத்திய அனுவும் ரித்வியும் ஆளுக்கொரு தட்டுடன் வந்தனர்....
ரித்வி கையில் வைத்திருந்த தட்டில் ஒரு மணப்பெண் பொம்மையும் அதனுடன் இதயவடிவ மோதிரப்பெட்டியொன்று திறந்த நிலையில் இருந்தது.... அதனுள்ளே வைரக்கல் பதித்த மோதிரமொன்று இருந்தது... அதே போல் அனு கையில் வைத்திருந்த தட்டில் மணமகன் பொம்மையும் அதனருகே இதயவடிவ மோதிரப்பெட்டி திறந்திருக்க அதனுள்ளும் ஒரு வைரக்கல் பதித்த மோதிரமொன்று இருந்தது......
ரித்வி தான் வைத்திருந்த தட்டை ரிஷி புறம் நீட்ட அதிலிருந்து மோதிரத்தை எடுத்தவன் ஶ்ரீயின் புறம்தன் இடக்கையை நீட்ட அதில் அவள்தன் இடக்கையை வைக்க முழந்தாளிட்டு அவள் புறங்கையில் முத்தமிட்டவன்அந்நிலையிலேயே அவளை பார்க்க ஶ்ரீயோ அவனது முத்தம் தந்த குறுகுறுப்பில் அவள் முகம் சிவக்க அதை மறைக்கும் வழி தெரியாது தடுமாறியபடி மறு கையால் முகத்தை மறைக்க முயல சுற்றியிருந்த அனைவரும் கை தட்டி கூச்சலிட்டனர்.... முழந்தாளிலிருந்து எழுந்தவன் அவளது மோதிரவிரலில் அந்த நிச்சய மோதிரத்தை அணிவித்தான்.மோதிரம் அணிவிக்கும் போது மரத்திலேயே பொருத்தி வைக்கப்பட்டிருந்த பூக்கூடை கவிழ்க்கப்பட அதிலிருந்து அந்த ஜோடிகளை ஆசிர்வதிக்கும் விதமாக கொட்டியது ரோஜாப்பூ இதழ்கள்......
ஶ்ரீயும் அனுவின் கையிலிருந்த தட்டிலிருந்து மோதிரத்தை எடுத்தவள் ரிஷியிற்கு அணிவிக்க சபையோர் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரிக்க மீண்டும் பூ மழை பொழிந்தது....
நிச்சய மோதிரம் மாற்றியதும் அனு ஶ்ரீயை கட்டிக்கொண்டு தனது வாழ்த்தை தெரிவிக்க ரித்வியும் தன் அண்ணனை கட்டிக்கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்தான்....
பின் இருவரின் பெற்றோரும் வந்து அவர்களை ஆசிர்வதித்தனர் ...
பெற்றோரிடம் ஆசி வாங்கியதும் இருவரையும் மீண்டும் அமரச்செய்த ரித்வி
அவர்களுக்கென ஒரு சப்ரைஸ் நடனமொன்று பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒழுங்கு செய்திருப்பதாக அறிவித்தான்.....
அவனது அறிவிப்பின் பிரகாரம் ரித்வி, ரவி, சுந்தர்,ஹரி என்று ஆண்கள் கூட்டணியும் அனு, சஞ்சு, ப்ரீதா என்று பெண்கள் கூட்டணியும் இணைந்து சில பாடல்களை மேஸ்அப் செய்து ஆடினர்.... இந்த ஆட்டம் முடிந்தது ஶ்ரீயை பாட அழைத்தான் ரித்வி....
Last edited: