Sundaramuma
Well-Known Member
இதை செய்து இருக்கலாம் அதை செய்து இருக்கலாம் என ஒரு நூறு ஐடியா குடுக்கலாம். ஆனால் அந்த இடத்தில் நாம் இருந்தால் தான் தெரியும். நாம் புதிதாய் ஒரு புடைவை கட்டினாலே கணவனிடம் அதற்கு ஒரு பாராட்டை பெற வேண்டும். அவரின் பார்வை நம்மிதே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு உண்டாவது இயற்கை. ஏதோ ஞாபகத்தில் அவர் அதை செய்ய தவறினால் நாம் காட்டுற காட்டுல கிழிஞ்ச நைட்டி போட்டிருந்தா கூட ரொம்ப அழகா இருக்கு இது எப்போ எடுத்த என்று கேட்கிற நிலைக்கு வந்துடு வாங்க/ வர வச்சிடுவோம். உடலால் மட்டும் வளர்ந்த குழந்தையவள். அன்பு/அரவணைப்பு இவற்றின் அரிச்சுவடி கூட அறியாதவள். அவளுக்கு கிடைத்த முதல் நெருக்கம் அதில் அன்போ/காதலோ வெளிப்படவில்லை. முழுக்க முழுக்க மோகம்/காமம் மட்டும் தான். தன் தாயின் நிலை தனக்கு அறவே வேண்டாம் என நினைத்தவளுக்கு நீ அதற்கு மட்டுமே என நினைக்க வைத்தது யார் தவறு. ஒரு சின்னப் பெண்ணின் உணர்வுகளை தூண்டி குளிர்காயத் தெரிந்தவனுக்கு அவன் மேல் அவளுக்கிருந்த கரிசனத்தை காதலாக மாற்றிகொள்ள விழையாதது ஏன்? ஒரு நூறு ஏன்கள் எனக்குள்ளும். அவளை அதிகம் யோசிக்காதே என கூறுபவன். யோசிக்காமல் இருக்க வைக்க என்ன செய்தான். அவளுக்கு பிடித்தமான விஷயத்தில் அவளை ஈடுபடுத்தி கொண்டிருக்கலாம் என்கிறீர்கள். உண்மை தான். அவளுக்கு பிடித்தமான விஷயம் எது? உங்களில் யாருக்கேனும் தெரியுமா?? ஈஸ்வருக்கேனும் தெரியுமா??? எனக்கு தெரிந்ததை நான் சொல்லவா!? ஒன்று குழந்தை அதற்கு வழியில்லை. மற்றையது ஈஸ்வர் அவன் மட்டுமே. அவன் அருகாமை/அரவணைப்பு.... அது கிடைக்கவில்லை எனும்போது... என்ன சொல்ல யாரை நோக. கிடைத்தது ஈஸ்வர் மட்டுமே. சதா அவனின் நினைவுகள் அவன் வேண்டும் என்று அடம்பிடிக்கும் உணர்வுகள் இவற்றில் இருந்து விடுபட வழி தன்னை மறக்க வேண்டும் இல்லை தானே மறைய வேண்டும். அவளுக்காக வாழ வேண்டும் என நினைக்கும் ஈஸ்வர் அவள் மறைந்து போயிருந்தால் இருந்து இருப்பானா?
Well done Ansa
deep thinking.......