உறவினர்கள் குட்டக்குட்ட,
குனிந்து போயி உனக்கு,
கூன் விழுந்து விட்டதாப்பா,
துளசி டியர்?
இந்த ஒரு விஷயத்தில், நான்
திருவின் பக்கம்தான்-மா துளசி,
இத்தனை வருஷமா,
மேகநாதனின் மருமகளாக,
திருநீர்வண்ணனுக்கு
வாக்கப்பட்டுப் போயி,
நீ, என்ன செய்தாய்,
துளசி டியர்?
மீனாக்ஷியை வளர்ப்பது
மட்டும்-தான், உன் வேலையா?
வெறுமனே திருநீர்வண்ணனை, "பார்த்தேன் ரசித்தேன்
பக்கம் வரத் துடித்தேன்"-னா
போதுமா?
"இன்னும் பார்த்துக்
கொண்டிருந்தால் என்னாவது?
நான் கேட்டதை தருவாய்,
இன்றாவது?"-ன்னு, திருவை
கேட்டுக்கிட்டிருக்காமல்,
உனக்கான கௌரவம்,
சகல மரியாதைகளையும்,
நீயே எடுத்துக் கொண்டிருக்க
வேண்டாமோ, துளசி டியர்?
அப்படி நீ கெத்தா இருந்திருந்தால்,
இப்பொழுது உன்னோட
ஆம்படையான், திரு
இப்படி உன்னை நிக்க வைச்சு
கேள்வி கேட்பானா?
அவன் கேள்வி கேட்க,
நீ இடம் கொடுத்திருக்கக்
கூடாது, துளசிம்மா
எவளையோ நீ, காதலிச்சுக்கோ,
என்னமோ பண்ணு,
உங்கப்பா மேகநாதன்,
தேடித் தேடி, விரும்பி
கூட்டிட்டு வந்த மருமகள்,
நானு-ன்னு,
எங்கப்பா வேலன் வேணா,
வேலைக்காரனா
இருந்திருக்கலாம்
ஆனால், நான் இந்த வீட்டின்
மூத்த மருமகள்-ன்னு, நீயி
கெத்தா இருந்திருக்க
வேண்டாமோ, துளசி?
அன்னிக்கு, உன் பொண்ணுக்கு
பரிஞ்சுக்கிட்டு, சண்டைக்கு
வந்தப்போ நான் கொடுத்த
தண்ணீரை நீ, குடிக்கலையில்லை,
இப்போ, எதுக்குடி என் கிட்ட
தண்ணீர் கேட்குறே?
நீயே எழுந்து போய் குடி,
இல்லாட்டி, உன் புண்ணு,
சாரி, சாரி பொண்ணு
ஷோபனாவை கொண்டு வந்து
கொடுக்க சொல்லு
இந்த மொட்டை அதிகாரம்
பண்ணுற வேலையை
என்கிட்டே வைச்சுக்காதே!
"ஏய்" போட்டு கூப்பிடுற உன்
வாயை கிழிச்சு, உன் கைல
கொடுத்திடுவே-ன்னு,
அந்த இத்துப் போன,
சாரதா டாக்-கை, என்ன சங்கதி?
ஏது-ன்னு கேட்டு, அவளை
ஒரு கை பார்க்கறதை விட்டுட்டு,
ஊளு, ஊளு-ன்னு அழுதுகிட்டு
இருக்கியே?
வந்து பாரு, வட்டப்பாறைக்கு-ன்னு
அந்த சாரதாவை ஒரு கை
பாரு, துளசி டியர்
கல்யாணமாகி 13 வருஷங்களாச்சு,
ஒரு தைரியம் வேண்டாமோ,
ஒரு பெண்ணுக்கு?
நீ அழுது, அழுது இதுவரை,
என்ன சாதித்தாய், துளசி?
வீணாக, திருநீர்வண்ணனுக்கு
கோபத்தைத்தான், வர வைத்தாய்
எப்பவுமே, வேலனோட
பெண்ணாக உன்னை
பார்க்காதே, துளசி?
திருவின் மனைவியாக
கொஞ்சம் உன்னை
நினைத்துப் பாரும்மா,
இப்படி தொட்டாற்சிணுங்கியாக,
எல்லாத்துக்கும் அழுவதை,
முதலில் நிறுத்தி, தைரியமாக
நிமிர்ந்து நில், துளசி டியர்