எங்க ஊரு அவியல் சொல்லட்டுமா????
கத்தரிக்காய் 2.. 3.... பிடித்தவர்கள் இன்னும் 1 சேர்த்துக்கலாம்
முருங்கைக்காய். 1
வாழைக்காய் 1
கேரட் 1
பீன்ஸ். 5... 6....
புடங்காய் 3 or 4 inches
வெள்ளரிக்காய் 3 or 4 inches
இளவங்காய் சென்னையின் வெள்ளை பூசணி small piece
சீனி அவரைக்காய் சென்னையின் கொத்தவரங்காய் 5.. 6..
சேனைக்கிழங்கு small piece
மாங்காய் சிறிது.....
எல்லா காய்களையும் முக்கால் inch length க்கு வெட்டிக்கொள்ளவும். ரொம்ப thin ஆக வேண்டாம்.......
கழுவி வைத்துக்கொள்ளவும்......
தேங்காய் எண்ணெயில் செய்தால் ரொம்ப வாசமாக இருக்கும்....
கடாயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து காய்களை போடவும்....... 2 or 3 பச்சை மிளகாய் கீறிப்போடவும்....... சிறிது வதக்கி மூடி போட்டு வேகவைக்கவும். அப்பப்போ கிளறி விடவும்...... 7 min அப்புறம் உப்பு மஞ்சள் பொடி
தேங்காய் கலவை (துருவிய பச்சை தேங்காய் ஒரு கை புடி, முற்றிய தேங்காய் நல்லா இருக்காது, மிளகாய் காரத்திற்கேற்ப, சின்ன வெங்காயம் 5.... 6...., சீரகம், 2 பல் பூண்டு, சிறிது கறிவேப்பிலை சேர்த்து mixie யில் reverse ல் ரெண்டு சுற்று சுற்றவும்..... coarse ஆக இருக்கணும்.....) எல்லாம் சேர்த்து வேகவிடவும்...... வெந்ததும் இறக்கி வைத்து கொஞ்சம் ஆறியதும் கெட்டியான ரொம்ப புளிக்காத fresh தயிர், கொஞ்சம் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்து பின் பரிமாறவும்.....
மாங்காய் சேர்க்காவிட்டால் சிறிது புளி கரைசல் சேர்க்கவும்.....
தயிர் consistency பார்த்து தேவைக்கேற்ப சேர்க்கவும்.......
Vegetables நாங்கள் எல்லா காயும் சேர்த்து தான் போடுவோம்......
சாம்பார் கூட சேனை மாங்காய் வாழைக்காய் தவிர்த்து எல்லா காயும் போட்டு தான் சாம்பார்........
நீங்கள் உங்களுக்கு தேவையற்றதை விட்டுவிடலாம்.......
பிடித்தால் உருளை கிழங்கு பலா கொட்டை எது வேணும்னாலும் சேர்த்து கொள்ளலாம்......
No க்கு ஏற்ப காய் அளவை கூடி குறைத்து கொள்ளவும்.......
கத்தரிக்காய் 3 4 போட்டால் கொஞ்சம் மகிந்த மாதிரி வரும்.......
முற்றாத பச்சை தேங்காய்
தேங்காய் எண்ணெய்
வீட்டில் செய்த புளிக்காத fresh கெட்டி தயிர் தான் taste கொடுக்கும்......