அன்பு நட்புக்களுக்கு...
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
“ம்ம்ச்.. குட்டியை இப்படி கொடு.. நீ போய் உட்கார்..” என்று குழந்தையை அவன் வாங்கிக்கொண்டான்.
“பார்த்துடா கழுத்து இன்னும் நிக்கல..” என்றபடி ரோஜா கொடுக்க,
‘அவ தூக்கினா மட்டும் ஒன்னும் சொல்றதில்லை.. எனக்கு மட்டும் இப்படி..’ என்றுதான் தீனா நினைத்தான்..
அக்கா தம்பியின் இத்தனை பேச்சிற்கும் தங்கம்மை நிமிர்ந்துகூட பார்த்திடவில்லை. அவளுண்டு அவளின் வேலையுண்டு என்றுதான் இருந்தாள். சங்கர் சிறிது நேரத்தில் வந்துவிட,
“போலாமா..” என்று ரோஜா கேட்க, “இல்ல அங்க ரொம்ப கூட்டமா இருக்கு.. பூஜை நடக்குது போல.. சோ கூட்டம் கம்மியாகவும் போகலாம்..” என, அதற்கும் சரியென்று நால்வரும் அப்படியே அமர்ந்துகொண்டனர்.
--------------------------------------------------------------------------------
தங்கம்மை அர்ச்சனை தட்டுக் கொடுத்து நிற்க, இவர்களும் பின்னே வந்திட, அர்ச்சகரோ “ராசி நட்சத்திரம் பேர் எல்லாம் சொல்லுங்க..” என, ரோஜாவோ, சங்கரினது, அவளது மற்றும் குழந்தையினது பெயர் நட்சத்திரம் சொல்ல, அடுத்து அர்ச்சனை தட்டு தங்கம்மையிடம் வர,
அவளோ முதலில் தீனாவினது சொல்லி, பின் அவளது சொல்ல, தீனதயாளனுக்கு நெஞ்சை பட்டென்று என்னவோ வந்து அடைத்தது போலிருந்தது. இரு கரமும் குவித்திருக்க, பார்வையோ அவனின் மனைவி மீதிருக்க, அவளோ மனமார கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தாள்.
ரோஜாவோ “டேய் சாமி கும்பிடு..” என்று லேசாய் அவனின் தோளை தட்ட, “அ..!!” என்றவன் அப்போதுதான் பார்வையை திருப்பினான்.
--------------------------------------------------------------
“அதுசரிதான்..” என்று சுப்ரஜாவும் சிரித்தவள், “இருக்கட்டுங்கம்மா.. அப்பாவும் அம்மாவும் இனி எங்க வீட்டுக்கு வந்திட்டு அப்புறம் அவங்க வீடு போகணும். லேட்டாகிடும்.. இன்னொரு நாள் எல்லாம் சேர்ந்து சாப்பிடுவோம்..” என்றுவிட, அடுத்து சில நேரத்திலேயே அனைவரும் கிளம்பிவிட,
போகும்போது தினேஷ் தங்கமையின் தலையை லேசாய் வருடியவன் “பார்த்துக்கோ தங்கம்.. எதுன்னாலும் எனக்கு போன் பண்ணு..” என்றிட, அவளுக்கு சட்டென்று கண்கள் கலங்கிப் போனது.
‘இப்போ கூட சொல்றதுக்கு நிறைய இருக்குத்தான்.. ஆனா என்னன்னு சொல்ல??’ என்று நினைத்திட, “அண்ணா...” என்று அவனின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
“ம்ம்ச்.. குட்டியை இப்படி கொடு.. நீ போய் உட்கார்..” என்று குழந்தையை அவன் வாங்கிக்கொண்டான்.
“பார்த்துடா கழுத்து இன்னும் நிக்கல..” என்றபடி ரோஜா கொடுக்க,
‘அவ தூக்கினா மட்டும் ஒன்னும் சொல்றதில்லை.. எனக்கு மட்டும் இப்படி..’ என்றுதான் தீனா நினைத்தான்..
அக்கா தம்பியின் இத்தனை பேச்சிற்கும் தங்கம்மை நிமிர்ந்துகூட பார்த்திடவில்லை. அவளுண்டு அவளின் வேலையுண்டு என்றுதான் இருந்தாள். சங்கர் சிறிது நேரத்தில் வந்துவிட,
“போலாமா..” என்று ரோஜா கேட்க, “இல்ல அங்க ரொம்ப கூட்டமா இருக்கு.. பூஜை நடக்குது போல.. சோ கூட்டம் கம்மியாகவும் போகலாம்..” என, அதற்கும் சரியென்று நால்வரும் அப்படியே அமர்ந்துகொண்டனர்.
--------------------------------------------------------------------------------
தங்கம்மை அர்ச்சனை தட்டுக் கொடுத்து நிற்க, இவர்களும் பின்னே வந்திட, அர்ச்சகரோ “ராசி நட்சத்திரம் பேர் எல்லாம் சொல்லுங்க..” என, ரோஜாவோ, சங்கரினது, அவளது மற்றும் குழந்தையினது பெயர் நட்சத்திரம் சொல்ல, அடுத்து அர்ச்சனை தட்டு தங்கம்மையிடம் வர,
அவளோ முதலில் தீனாவினது சொல்லி, பின் அவளது சொல்ல, தீனதயாளனுக்கு நெஞ்சை பட்டென்று என்னவோ வந்து அடைத்தது போலிருந்தது. இரு கரமும் குவித்திருக்க, பார்வையோ அவனின் மனைவி மீதிருக்க, அவளோ மனமார கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தாள்.
ரோஜாவோ “டேய் சாமி கும்பிடு..” என்று லேசாய் அவனின் தோளை தட்ட, “அ..!!” என்றவன் அப்போதுதான் பார்வையை திருப்பினான்.
--------------------------------------------------------------
“அதுசரிதான்..” என்று சுப்ரஜாவும் சிரித்தவள், “இருக்கட்டுங்கம்மா.. அப்பாவும் அம்மாவும் இனி எங்க வீட்டுக்கு வந்திட்டு அப்புறம் அவங்க வீடு போகணும். லேட்டாகிடும்.. இன்னொரு நாள் எல்லாம் சேர்ந்து சாப்பிடுவோம்..” என்றுவிட, அடுத்து சில நேரத்திலேயே அனைவரும் கிளம்பிவிட,
போகும்போது தினேஷ் தங்கமையின் தலையை லேசாய் வருடியவன் “பார்த்துக்கோ தங்கம்.. எதுன்னாலும் எனக்கு போன் பண்ணு..” என்றிட, அவளுக்கு சட்டென்று கண்கள் கலங்கிப் போனது.
‘இப்போ கூட சொல்றதுக்கு நிறைய இருக்குத்தான்.. ஆனா என்னன்னு சொல்ல??’ என்று நினைத்திட, “அண்ணா...” என்று அவனின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.